Quantcast
Channel: அறிவியல்
Viewing all articles
Browse latest Browse all 488

இஸ்திரி போடும், ‘ரோபோ’

$
0
0

இன்று துவைக்கும் இயந்திரம், துணிகளை துவைத்து, பிழிந்து, முக்கால்வாசி காய வைத்து தந்து விடுகிறது. ஆனால், துவைக்கும் இயந்திரங்களால், இஸ்திரி போட முடியாது. இப்போது, துவைக்கும் இயந்திரம் தரும் கால்வாசி ஈரத்துணியை கொடுத்தால், மிகச்சிறந்த முறையில், இஸ்திரி போட்டுத் தர, ஓர் இயந்திரம் வந்துவிட்டது. பிரிட்டனில் விற்பனைக்கு வரவுள்ள, ‘எப்பி’  என்ற இஸ்திரி போடும் ரோபோ, சட்டை, கால்சட்டை, காலுறை, போர்வை என, சகல துணி களையும் கையாளும் திறன் கொண்டது.

அதுமட்டுமல்ல, பாலியஸ்டர், பருத்தி, பட்டு, விஸ்கோஸ், டெனிம் என, பல ரகத் துணிகளையும் உலர்த்தி, இஸ்திரி போடும் திறன் கொண்டது, ‘எப்பி’ ரோபோ. நெஞ்சளவுக்கு உயரமும், தட்டையான பெட்டி போலவும் உள்ள, இந்த இஸ்திரி ரோபோவின் ஒரு புறம், 12 துணிகளை தொங்கவிட்டால், மறுபுறம், மொடமொடப்புடன், இஸ்திரி போட்ட துணிகள் வந்து நிற்கின்றன. ஒரு துணியை இஸ்திரி செய்ய, மூன்று நிமிடங்களே ஆகிறது.

துணியின் சுருக்கங்களை நீக்க உதவும் நீராவிக்காக, இந்த இயந்திரத்திலுள்ள சிறு பெட்டியில், நீரை ஊற்ற வேண்டும். அவ்வளவு தான். வரும், 2018 மார்ச்சில், சந்தைக்கு வரவிருக்கிறது.

வேகமாக காயத்தை ஆற்றும் களிம்பு!



அடிபடுவதாலோ, அறுவை சிகிச்சை செய்வதாலோ ஏற்படும் புண்களை, உடனடியாக, ஆறச் செய்யும் களிம்பு ஒன்றை, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க மருத்துவர்கள் உருவாக்கி உள்ளனர்.

‘மீட்ரோ’ என்ற அந்த களிம்பை, புண்கள் மீது தடவிய, 60 வினாடி களுக்குள், சற்று திடமாக ஆகி மூடிக் கொள்கிறது. இதனால், தொற் றுக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு, காயத்தை வேகமாக ஆற்றவும் முடியும் என்கின்றனர், இதை உருவாக்கிய விஞ்ஞானிகள்.

விபத்து நடந்த இடங்களிலும், போர்க்களங்களிலும், ‘மீட்ரோ’ களிம்பு உதவிகரமாக இருக்கும். இந்த களிம்பு, சற்றே இறுகினாலும், வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளது என்பதால், இதை சுருங்கி விரியும் இதயம், நுரையீரல் போன்ற பாகங்களில் ஏற்படும் காயங்கள் மீதும், நேரடியாக, மருத்துவரால் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்றிகளின் மீது, விரிவான ஆராய்ச்சிகள் செய்ததில், ‘மீட்ரோ’ களிம்பு, நல்ல பலன்களை தந்துள்ளது. விரைவில், மனிதர்கள் மீதும், இதை பரிசோதிக்க உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

பூமியைப்  போன்று மாறிவரும் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பு 



கன மழையின் காரணமாக பூமியின் மேற்பரப்பை போன்று செவ்வாயின் மேற்பரப்பு கடின தன்மையுடன் மாறியுள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதி யுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன. அதன்பின் செவ்வாய்கிரகத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதிய காரணத்தினால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்றது. இதற்கான சான்றாக இன்றும் செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு காணப்படுகின்றது. இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிகிதம் பூமியை வந்தடைந்தன கூறப்படுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகள் 1984இல் அண்டார்டிக்காவில் ஆல்லன் ஹில்ஸ் 84001 என்ற 1.95 கி.கி எடை கொண்ட விண் கல்லை கண்டெடுத்தார்கள். இது செவ்வாயில் ஏற்பட்ட மோதலினால் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என யூகித்தனர். 1996இல் நாசா விஞ்ஞானி டேவிட் மெக்கி  என்பவர் இதில் நானோ பாக்டீரியாவின் எச்சம் இருப்பதை கண்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து செவ்வாய்கிரக ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இன்றளவும் நாசாவின் ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் தேடிக் கொண் டிருப்பது தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் மற்றும் ஆதாரங் களையும் தான். இந்நிலையில், சமீபத்தில் விஞ்ஞானிகள் செவ் வாய் கிரகத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக சிவப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தை மாற்றியமைத்தி ருக்கலாம் என ஆய்வு செய்து கண்டறிந்து உள்ளனர்.

அவர்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஆறுகளை போல் உள்ள சேனல்களை கண்டறிந்து உள்ளனர். பூமியின் மேற்பரப்பை போன்று செவ்வாயின் மேற்பரப்பு  கடின தன்மையுடன் மாறியுள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் க்ராட்காக் மற்றும் ரால்ப் லாரன்ஸ் விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையே அதன் மேற்பரப்பை மற்றக் காரணம் என கூறுகின்றனர்.   

பாய் போல வளையும் சூரிய மின் கருவி!

சூரிய மின் தகடுகளில், ஏதாவது ஒரு புதுமை, மாதத்திற்கு ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில், பிரிட்டனைச் சேர்ந்த, ‘ரெனோவாஜென்’ என்ற நிறுவனம், பாய் போல விரிக்கக்கூடிய, சூரிய ஒளி மின் கருவியை உருவாக்கி உள்ளது. ‘ரேப்பிட் ரோல் சோலார் பி.வி.,’ என்றழைக்கப்படும், இந்த சூரிய மின் பாயை, பிரிட்டனின், சிறிய தீவான, பிளாட் ஹோம் ஐலண்டில் நிறுவி உள்ளது, ரெனோவாஜென். சுற்றுலா பயணியர் வந்து போகும் இந்தத் தீவிற்கான மின்சாரத்தை, இரு டீசல் ஜெனரேட்டர்களை வைத்தே உற்பத்தி செய்தனர்.

இங்கு, ரேப்பிட் ரோல் சூரிய மின் பாயை, இரண்டே நிமிடத்தில், ஒரு மைதானத்தில் விரித்துப் போட்டு, 11 கிலோவாட் மின்சாரத்தை, ரெனோவாஜென் உற்பத்தி செய்து காட்டி இருக்கிறது. தேவைப்பட்டால், சற்று பெரிய அளவில், சூரிய மின் பாயை நிறுவி, 300 கி.வா., மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும் என, ரெனோவாஜென் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலி இடங்களில், வீட்டுக் கூரைகளில், ரேப்பிட் ரோலை, விரைவில் ஆணியடித்து நிறுவ முடியும். வழக்கமான, சூரிய மின் பலகைகள் விரைப்பானவை. அவற்றை நிறுவ, தனி மேடைகளை நட வேண்டியிருக்கும். எனவே, ரேப்பிட் ரோலை நிறுவுவதற்கு ஆகும் செலவு, குறைவு என, ரெனோவாஜென் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  

செவ்வாய் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்?

நமது சூரியமண்டலத்தில் மனிதன் காலடி பதிக்கக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்று இருக்கிறது என்றால் அது செவ் வாயாகத்தான் இருக்கும்.
மனிதன் சந்திரனுக்கு போய்விட்டு வந்தாலும் சந்திரன் என்பது கோள் அல்ல. அது பூமியை சுற்றிவரும் ஒரு துணைக் கோள் மட்டுமே.
புதன், வெள்ளி (சுக்கிரன்) ஆகியவை மனிதன் போகமுடியாத இடங்கள். சூரிய னுக்கு மிக அருகாமையில் உள்ளதால் புதன் கிரகம் வெப்பம் பூமியில் உள்ள தைபோல 11 மடங்கு அதிகமாக இருக்கும்.

மேலும் பகல் என்பது சுமார் 3 மாதத் திற்கு இருக்கும். வெள்ளிக்கு செல்லலாம் என்றால் அது அதைவிட மோசமான பருவநிலையை கொண்டுள்ளது. அங்கு காற்றழுத்தம் மிக அதிகம். ஆளில்லாத விண்கலம் வெள்ளியில் போய் இறங் கினாலும் கடும் அழுத்தத்தால் விண்கலம் தூளாக நொறுங்கிவிடும்.

சரி... வெப்பம், காற்றழுத்தம் குறைவான கிரகத்திற்கு செல்லலாம் என்று செவ் வாய்க்கு அப்பால் உள்ள வியாழன், சனியை ஆராய்ந்தால் அங்கு வேறு மாதிரியான சூழ்நிலை. அதாவது பனிக் கட்டி உருண்டைகளாக அவை இருக் கின்றன.

ஆளில்லா விண்கலம் அங்கு போய் இறங்கினால் அவை புதை சேற்றுக்குள் சிக்கியது போல புதைந்து விடும்.


அதனால் தான் சூரியமண்டல கிரகங் களில் செவ்வாய் மீது மட்டுமே  நமக்கு ஆர்வம் வருகிறது.

அதனால்தான் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக செவ்வாயை நோக்கி அவ்வப்போது ஆளில்லா விண் கலன் களை அனுப்பி மனிதன் வாழ்வதற் கான சூழ்நிலைகளை ஆராய்ச்சி செய்து வரு கின்றனர்.


Viewing all articles
Browse latest Browse all 488

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>