Quantcast
Channel: அறிவியல்
Viewing all articles
Browse latest Browse all 488

காற்று மாசுபாட்டால் குழந்தைகளின் டிஎன்ஏ சேதம் ஏற்படும் அபாயம்

$
0
0

போக்குவரத்து காரணமாக காற்று மாசுபாடு உள்ள இடங்களில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டிஎன்ஏ சேதம் ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கை யானது, உலகளாவிய மக்கள் தொகையில் 92 சதவிகிதம் மக்கள்,   உலக சுகாதார அமைப்பின் வரம்புகளைவிட அதிகமான இடங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது, வெளிப்புற காற்று மாசுபாடு குறிப்பாக போக்குவரத்து தொடர்பான மாசுபாடு உலகெங்கிலும் ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து வருகிறது. இந்த காற்று மாசுபாடு உடல்நலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

போக்குவரத்து தொடர்பான காற்று மாசுபாட்டின் அதிக அளவு வெளிப்பாடு என்பது குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டெலேமிரோ குறைப்பு என்ற குறிப்பிட்ட வகை டி.என்.ஏவை சேதம் ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் மருத்துவம் எச்சரிக்கிறது.

அமெரிக்காவில், இரண்டாவது மாசுபட்ட நகரமான கலிஃபோர் னியாவின் ஃபிரஸ்னே பகுதியில் உள்ள இளம் பருவத்தினர் மற்றும் குழந்தைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்தனர். அந்த ஆய்வில் காற்று மாசுபாட்டின் அதிக அளவு வெளிப்பாடு உள்ளதால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் டெலேமிரோ குறைவு ஏற் பட்டுள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

இதன் காரணமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் ஆஸ்துமா போன்ற நோய்களை ஏற்படுத்தும். மேலும் டி.என்.ஏ. மட்டுமல்லாமல் கொழுப்புக்கள், புரதங்கள் ஆகியவற்றில் சேதத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி யுள்ளனர். இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள காற்று மாசுபாடு பகுதியில் உள்ள வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமுள்ள உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.

மேலும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் அறிவுறுத்தியுள்ளனர்.


ஈர்ப்பு விசை என்ன செய்யும்?

பூமியில் நிலையாக நாம் நிற்க காரணமே ஈர்ப்புவிசைதான். பேனாவில் எழுத, சாப்பிட, குளிக்க என அனைத்துக்கும் ஈர்ப்புவிசை தேவை. ஈர்ப்பு விசை தினசரி வாழ்வில் கண்ணுக்கு புலப் படாமல் இருந்தாலும் நமது உடலில் ஈர்ப்புவிசையின் தாக்கம் உண்டு.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட பின், ஈர்ப்பு விசை நமது உடலில் ஏற்படுத்தும் சிறிய மாற்றங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கத் தொடங்கி விட் டனர். ஏனெனில் ஈர்ப்புவிசையற்ற விண்வெளியில் உடல் தத்தளிக்கத் தொடங்குமே!

விண்வெளியில் சில காலம் பணி செய்த விண்வெளி வீரர்களுக்கு, உயரம் அதிகரித்தும், எலும்பின் அடர்த்தி குறைந்திருப்பதையும் கண் டறிந்த அறிவியலாளர்கள்  விண்வெளி பயண மாற்றங்களை பதிவு செய்ய முயற்சித்தனர். பூமியில் ஈர்ப்பு விசையற்ற அறையை உருவாக்கி, அதில் வீரர்களை தங்க வைத்து உடல்நலனைக் கண்காணித்து பல்வேறு உண்மை களைக் கண்டறிந்தனர்.

ஈர்ப்புவிசை பரப்பில் நமது உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்போது, உடலின் மெக்கானோ ரிசெப்டர் மூலம் இது குறித்த தகவல்கள் உடனே மூளைக்கு கடத்தப்பட்டு ரத்தம் உறைதல் செயல்பாடு தொடங்குகிறது.

இதுவே ஈர்ப்பு விசையற்ற சூழலில், செல்களின் இயக்கத்தில் அயனிகளின் செயல்பாடு அதீதமாகி, செல்களின் வளர்சிதைமாற்றம் முடக்கப்படுகிறது.

எலும்புகள் மெலியும்,
நோய்கள் பெருகும்!

1980களிலிருந்து செய்யப்படும் ஆராய்ச்சியிலிருந்து ஈர்ப்புவிசையற்ற இடத்தில் உடலின் மேற்பகுதியிலுள்ள மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்போது, உடலின் நிலையைப் பற்றி மூளைக்கு அறிவிக்கும் நியூட்ரான் ட்ரான்ஸ் மிட்டர்கள், மூலக்கூறுகளின் செயல்பாடுகள் தடைபடுகின்றன.

விண்வெளி வீரர்களுக்கு உணர்வுரீதியான தடுமாற்றங்களும், புரிந்து கொள்வதில் தடையும் உருவாவது இதனால்தான். விண்வெளியில் ஒரு மாதத்திற்கு 1% எலும்பு அடர்த்தி குறையும். ஈர்ப்புவிசையற்ற நிலையில் புரதம் மற்றும் டிஎன்ஏ செயல்பாடு வளர்சிதைமாற்றம் தடைபடுவதால், புதிய எலும்பு திசுக்கள் உருவாவ தில்லை. எனவே விண்வெளியில் உள்ள வீரர்களின் உடலில் எலும்புகளின் அடர்த்தி குறைகிறது.
விண்கலத்தில் முதலிலேயே நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படுகிறது. நாசாவின் அப்பல்லோ 13 விண்கலத்தில் பயணித்த வீரர், ஃப்ரெட் ஹைஸுக்கு     என்ற பாக்டீரியா தாக்குதல் இருப்பது கண்டறியப் பட்டது.

நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்களைத் தாக்கும் இந்நோயை, ஈர்ப்புவிசையற்ற சூழலே உடலில் உண்டாக்குகிறது என்பது ஆய்வு  உண்மை.

பாதிப்பை குறைப்பது எப்படி?

விண்வெளி வீரர்கள் செல்களுக்கு பாதுகாப்பு தர தினமும் 2 மணி நேரம்  உடற்பயிற்சி (பளு தூக்குதல், நடைப்பயிற்சி) செய்கிறார்கள். எலும்பு சேதாரத்தை இவை பெருமளவில் தடுப்பதில்லை.

செல்களின் வளர்சிதை மாற்றத்தை  கட்டுப் படுத்தி இயக்கும் நியூட்ரோட்ரான்ஸ்மிட்டரான வைப் பயன்படுத்திய போதும் விஞ்ஞானிகளால் இதன் இயக்கம்  ஏற்படுத்தும் உடலின் மாற்றங்களை தெளிவாக அறிய முடியவில்லை.

எளிதாக செரிமானம் ஆகும் நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவு வகைகள் மூலம் ஈர்ப்பு விசையற்ற பாதிப்புகளைக் குறைக்க முயற்சிக்கிறார்கள்.

முன்பு பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது பெரிய சவால்தான்.

ஆனால் அதனை நாம் கடந்துவந்திருப்பது நம் முயற்சிகளால்தான்.  

செவ்வாயில் 2024இல்
மனிதர்கள் காலடி வைப்பார்களா?

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தையும், சில புதுமைகளையும் அறிவித்திருக்கிறார் எலான் மஸ்க். அவரது, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், 2014ஆம் ஆண்டுக்குள், 100 மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு ஆகும் செலவை சமாளிக்க, புதிய திட்டத்தை அவர் அண்மையில் விளக்கினார். ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தற்போது, பால்கன் 9, பால்கன் ஹெவி போன்ற ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. இவை அனைத்தையும் நீக்கிவிட்டு, பி.எப்.ஆர்., என்ற ஒரே வகை ராக்கெட்டை தயாரிக்கப் போவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் உற்பத்தி செலவுகளை குறைக்க முடியும் என்றும், பி.எப்.ஆர்., ராக்கெட்டே, 100 மனிதர்களை செவ்வாய்க்கு அழைத்துச் செல்லும் திறன் கொண்டது என்றும் அவர் விளக்கினார்.

அதுமட்டுமல்ல, நிலாவில் ஒரு விண்வெளி நிலையத்தை அமைப் பது, பூமியில் விமானத்திற்கு பதிலாக, பி.எப்.ஆர்., ரக ராக்கெட்டை பயணியர் போக்குவரத்திற்கு பயன்படுத்துவது போன்ற திட்டங்களால், கிடைக்கும் வருவாயை செவ்வாய் திட்டத்திற்கு பயன்படுத்த முடியும் என்கிறார் மஸ்க்.

2024இல், மனிதர்கள் செவ்வாய்க்கு வெற்றிகரமாக அனுப்பப்படுவர் என்று நம்பப்படுகிறது.

மின்சார கார்கள்

உலகின் மிகப் பெரிய கார் தயாரிப்பா ளரான ஜெனரல் மோட்டார்ஸ், விரை வில் மின்சார கார் களை மட்டுமே தயா ரிக்கப் போவதாக அறி வித்துள்ளது.

இந்த அமெரிக்க நிறுவனம், கடந்த, 100 ஆண்டுகளாக, பெட்ரோலிய வாகனங்களை மட்டுமே தயாரித்து வந்தது. 2016இல் மட்டும், உலகெங்கும் ஒரு கோடி பெட்ரோலிய வாகனங்களை அது விற்பனை செய்துள்ளது.  இந்த வகையில், காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் மீது குற்றச் சாட்டுக்கள் எழுந்தது.

எனவே, 2023க்குள் எல்லா பெட்ரோலிய வாகன உற்பத்திகளையும் நிறுத்திவிடப் போவதாக அந்நிறுவனம் அறிவித் துள்ளது.  முதல் கட்டமாக, 2018இல் இரண்டு முழு மின்சார கார்களை அது அறிமுகப் படுத்தும். 2023க்குள் மேலும், 18 முழு மின் கார்களை சந்தைக்குக் கொண்டு வரும்.


Viewing all articles
Browse latest Browse all 488

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>