ஒருவரது மனநலத்தை அறிய, அவர் மொபைலை பயன்படுத்துவதை வைத்து சொல்லிவிடலாம் என்கிறது, 'ஏன்யுவல் ரிவ்யூ ஆப் கிளினிகல் சைக்காலஜி' இதழில் வெளிவந்துள்ள ஆய்வு. செயற்கை நுண்ணறிவு நிரல்களிடம், குறிப்பிட்ட வகை மொபைல் பயன்பாட்டிற்கும், குறிப்பிட்ட மனநல குறைபாட்டிற்கும் இருக்கும் தொடர்பை விளக்கிவிட்டால் போதும் என்கிறது அந்த ஆய்வு.
எடுத்துக்காட்டாக, மொபைலில் இருப்பிடம் அறியும் ஜி.பி.எஸ்., மூலம், ஒருவர் குறைவான இடங்களுக்கே செல்கிறார், அவர் மிகக் குறைவான நபர்களையே சந்திக்கிறார் என்பதை அறிய முடியும். இது, தனிமையின் அடையாளம். இதே போல ஒருவர் தூங்கும் நேரம், வேகமாக நடக்கிறாரா என்பதையும் அறியலாம்.
மனச் சோர்வு முதல், மனச் சிதைவு வரை பல உளநல நிலைகளை கணிக்கலாம். உடல் நலத்தை அறிய உதவும் பிட்பிட் போன்ற அணி கருவிகளைப் போல, விரைவில், இத்தகைய தகவல்களை வைத்து மனநலனை கணிக்க உதவும் அணி கருவிகள் விற்பனைக்கு வரலாம் என்கிறது அந்த ஆய்வு.