பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி செய்யும் விண்வெளி வீரர்கள், பூமியில் தற்போது அதிகரித்து வரும் ஒளி மாறுபாட்டை கட்டுப்படுத்த உதவக்கூடும்.
'விண்வெளி வீரர்கள், நிலையத்தின் கண்ணாடி சன்னல்கள் வழியே அவ்வப்போது பூமியை பல கோணங்களில் புகைப்படம் எடுப்பர்.
இரவு, பகல், புயல், மழை, வறட்சி என்று பல சூழல்களில் எடுக்கப்படும் இந்தப் புகைப்படங்களில் பெரும்பாலானவை கிடப்பில் போடப்படுகின்றன.
அவற்றை பயன்படுத்தி ஒளி மாசினை கட்டுப்படுத்தும் நோக்கில், 'லாஸ்ட் அட் நைட்' என்ற ஆய்வு அமைப்பை சில விஞ்ஞானிகள் தொடங்கி யுள்ளனர்.
அறிவியல் ஆர்வலர்களைக் கொண்ட இந்த அமைப்பு, விண்வெளி வீரர்கள் எடுக்கும் புகைப்படங்களை வைத்து நகரப்பகுதிகளில் மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் இரவு முழுவதும் எரியும் விளக்குகளால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கலாம் என நம்புகிறது.
புகைப்படங்களில் தெரியும் நகரங்கள், சாலைகள் போன்றவற்றை கணினிகளைவிட மனிதர்கள் எளிதில் அடையாளம் காண முடியும்.
எனவே பெயர் குறிக்கப்பட்ட புகைப் படங்களை வைத்து, அப்பகுதியில் ஒளிமாசின் தீவிரம், அதை குறைக்கும் நடவடிக்கை போன்றவற்றில், 'லாஸ்ட் அட் நைட்' அமைப்பு ஈடுபடும்.