Quantcast
Channel: அறிவியல்
Viewing all articles
Browse latest Browse all 488

நாசா கண்டுபிடித்த 1284 புதிய கோள்கள்

$
0
0

நாசா கண்டுபிடித்த 1284 புதிய கோள்கள்

விண்வெளியில் உள்ள கெப்ளர் டெலஸ்கோப் மூலம் நாசா ஆராய்ச்சி மய்யம் புதிய கோள்களை கண்டறிந்துள்ளது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? அவர்கள் வேலையே அதுதானே என்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. ஒன்று இரண்டல்ல. நமது சூரியக் குடும்பத்தைத் தாண்டி 1,284 புதிய கோள்களைக் கண்டறிந்துள்ளனர் என்பது சாதாரண விஷயமா என்ன?

ஒரே முறையில் இத்தனை கோள்களை நாசா கண்டறிவது இதுதான் முதல் தடவை என்பதும் கூடுதல் சிறப்பு. கண்டு பிடித்த கோள்களில் பல பாறைக்கோள்களாக உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

மற்றொரு தாய்நிலம் உண்டா? பூமிக்கு வெளியே புதிய கோள்கள் இருப்பது பொதுவான ஒன்றுதான். பால்வெளியில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் தனித்தனியே கிரகக் குடும்பங்கள் கொண்டுள்ளன.

நமது சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டுமே உயிரி னங்கள் வசிக்க முடியும். ஆனால் விண்வெளியில் இதுபோல வாழ்தன்மை கொண்ட கோள்கள் வேறு ஏதும் இருக்கின்ற னவா? அல்லது நம்முடைய பூமி மட்டும்தான் அப்படி தன்மை கொண்ட ஒரே கிரகமா? என்பதைக் கண்டறி வதுதான் ஆராய்ச்சியின் நோக்கம் என்கிறார் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தின் வான் இயற்பியல் துறை இயக்குநரான பால் ஹெர்ட்ஸ்.

பால்வெளியில் உள்ள 25 சதவிகிதக் கோள்களில் பூமியில் உள்ள நீர், அக்கோள்களின் அடிப்பரப்பில் படிவங் களாக உள்ளது. இது, அக்கிரகத்திலும் வாழக்கூடிய தன்மை உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது. நமது பால்வெளியில் ஏறத்தாழ 70 பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கலாம்.

கணித முறையில் கூறவேண்டுமெனில் பத்தின் மடங்கில் பல பில்லியன் எண்ணிக்கையில் பூமியைப் போன்ற கோள்களை அடையாளம் காண முடியும்  என்று நம்பிக் கையாகப் பேசுகிறார், கலிபோர்னியாவில் உள்ள கெப்ளர் திட்ட அறிவியலாளரான நடாலியா படால்ஹா.

கெப்ளர் தொலைநோக்கிமார்ச் 2009இல் கெப்ளர் திட்டம் 60 கோடி டாலர் செலவில் தொடங்கப்பட்டது. பால்வெளியில் உள்ள பூமியை ஒத்த கோள்களைக் கண்டறிவதே இலக்கு. மார்ச் 2013 வரை கெப்ளர் தனது பணியைத் தொடங்கவில்லை. அதன் எந்திரத்தில் ஏற்பட்ட பழுதுதான் இதற்கு காரணம். பின் இதனை சரி செய்து 4,000க்கும் மேற்பட்ட கோள்களை ஆராய்ச்சி செய்ய விரும்பியபோது, அந்த ஆராய்ச்சியானது சம்பந்தப்பட்ட கிரகங்களின் தரையை சோதித்து அறிவ தாகவே இருந்தது.

ஆனால் இறுதியில் அது ஒவ்வொரு கோளையும் அனுமானிக்கும் புள்ளிவிவர நிகழ்தகவு வாய்ப்பாக மாறியது. ஒவ்வொரு கோளும் சரியானதா என்பதைக் கண்டறிய, முதலில் கணினி மூலம் அதன் ஒளி குறித்த சமிக்ஞைகள் ஆய்வு செய்யப்பட்டு, பிறகு அதன் பரப்பில் அணுக் கருவினைக் குறித்த சோதனை செய்து பார்த்து, அதன் தன்மை உறுதி செய்யப்பட்டது. அதாவது, கோள் பெரியதாக இருந்தாலும் அதனுள் உள்ள அணுக்கரு வினைத் தன்மை குறைவாக இருந்தால் அது தோல்வி அடைந்தது என்று அர்த்தம்.

1284 புதிய கோள்களை ஆராய்ந்தபோது, இவற்றில் உயிரினங்கள் வாழ முடியாத வெற்று பாறைக் கோளங் களாகவே மொத்தம் 550 கோள்கள் உள்ளன. 21 கோள்கள் மட்டுமே உயிரினங்கள் வாழ ஏற்றவை எனக் கண்டறியப் பட்டுள்ளது.

கூடுதலாக மேலும் 15 கோள்கள் பாறைகளைக் கொண்டவையாக இருக்கலாம் அல்லது வாழும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். இன்னும் அவை குறித்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தப்படவில்லை என படால்ஹா கூறுகிறார்.

ஓய்வறியாத வேலை அங்கே!மே 2013இல் கெப்ளர் டெலஸ் கோப்பின் பணி முடிந்துவிட்டது என்றாலும், ஆய்வு மய்யம் தொடர்ந்து கோள்களைக் குறித்து இன்றுவரை ஆராய்ச்சி செய்து வருகிறது.

இதற்கான திட்ட உறுப்பினர்கள் சூரிய ஒளியினை வைத்து ஆய்வு மய்யத்தை சம நிலைப்படுத்தி, இரண்டு ரீயாக்ஷன் வீல்களின் (டெலஸ்கோப் எரிபொருள் சக்தி யின்றி சுழன்று நகருவதற்கான சக்கரங்கள்) மூலம் சமாளித்து வருகிறார்கள்.

2014ஆம் ஆண்டு முதல், கெப்ளர் புதிய திட்டமான கே2 என்பதில் ஈடுபட்டு வருகிறது. புதிய கோள்களோடு, காஸ்மிக் பொருட்கள், விண்மீன் வெடிப்பு, வால்மீன்கள், எரிகற்கள் குறித்தும் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறது.

இம்முறையில் கெப்ளர் டெலஸ்கோப் 2018ஆம் ஆண்டு மத்தியில் வரை செயல்பட எரிபொருள் உள்ளது என கெப்ளர் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் தகவல் தெரிவிக் கின்றனர்.

பூமியில் எல் நினோ பருவ மாற்றம் காரணமாக சூழல் மாறுபாடு அதிகரித்து பூமி மாசடைந்து வாழத் தகுதி அற்றதாக மாறி வரும் நிலையில், புதிய கோள் கண்டுபிடிப்பு இதனைக் கேள்விப்படும் எந்த மனிதருக்கும் கொள்ளை மகிழ்ச்சியைத் தரும் என்பதுதான் நடைமுறை எதார்த்தம். வானத்தை அண்ணாந்து பார்த்ததோடு மட்டுமில்லாமல் வேலையும் செய்து சாதித்த நாசாவை பாராட்டித்தானே ஆக வேண்டும்.


Viewing all articles
Browse latest Browse all 488

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>