சண்டீகர், ஜூன் 18 பார்வை யற்றவர்களுக்கு உதவ அணிந்து கொள்ளும் வகையிலான மிக எடை குறைந்த அதிநவீன கருவியை இந்திய இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
லைவ் பிரெய்லி எனப் பெயரிடப்பட்ட இக்கருவியை அபிநவ் வர்மா (21) என்பவர் உருவாக்கியுள்ளார். இதன் எடை 30 கிராம் மட்டுமே.
பார்வையற்றவர்கள் இத னைக் கையில் அணிந்து கொண்டு, அது கொடுக்கும் சமிக்ஞைகளின் அடிப்படை யில் யாருடைய உதவியும் இல்லாமல் மிக வேகமாக இயல்பாக நடக்கவும் செயல் படவும் முடியும்.
அதிர்வு மற்றும் தொடு உணர்வுகளால்...
இக்கருவி 3.5 மீட்டர் தொலைவுவரை உள்ள பொருட் களை இனம் கண்டுகொண்டு, அணிந்து கொண்டிருப்பவ ருக்கு தொடு உணர்வுமூலம் சமிக்ஞைகளை அளிக்கிறது. கைகளில் காற்றை அலைந் தால்போதும், இக்கருவி சுற் றுப்புறத்தை உணர்ந்து கொள் கிறது. ஒருபொருளின் நகர்வை ஒரு நொடிக்கு 50 முறை உணர்ந்து கொண்டு அதிர்வு மற்றும் தொடு உணர் வுகளால் சமிக்ஞை தருகிறது.
இதனால் பொருளின் தன்மை, அது எவ்வளவு தொலைவில் இருக்கிறது, எவ்வளவு வேகமாக நகர்கிறது என அனைத்தையும் பார்வை யற்றவர் உணர்ந்து கொள்ள முடியும். 3.5 மீட்டர் தொலை வுக்குள் இருப்பது புத்தகமா, சுவரா, மனிதரா என்பதையும் உணர முடியும்.
மினி, மினி-இ என இரு ரகங்களில் இந்தக் கருவி விற் பனைக்கு உள்ளது. குறைந்த பட்சம் ரூ. 20 ஆயிரம் மற்றும் அதிகபட்சம் ரூ.47 ஆயிரம் என விலையிடப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் தொண்டு நிறுவனம் மூலம் மினி ரக லைவ் பிரெய்லி ரூ.6,999 என்ற மானிய விலைக்கு அளிக்கப்படுகிறது.
மினி இ கருவியில் 32 ஜிபி வரை நினைவகம் இருப் பதால், ஆடியோ பதிவு செய்து கொள்ளலாம். சண்டீ கரைச் சேர்ந்த அபிநவ் வர்மா பஞ்சாப் பல்கலைக் கழகத் தில் பட்டம் பெற்றார். கல் லூரிகளுக்கு இடையிலான போட்டிக்காக இதனை முதன் முறையாக தயாரித்து, தன் 18- ஆவது வயதில் காப்புரிமை பெற்றார். அதன் பின் தற் போது அதனை மிக நவீனமாக மேம்படுத்தியுள்ளார். கடந்த மார்ச் மாதம் சந்தையில் அறி முகம் செய்யப்பட்ட இக் கருவி 3 மாதங்களுக்குள் 16 நாடுகளில் விற்பனையாகி யுள்ளது.
பார்வையற்றவர் குச்சி உதவியின்றி, மிகச் சுதந்தி ரமாக உலவ இக்கருவி உதவு கிறது. சந்தையில் கிடைக்கும் இதுபோன்ற பொருட்களை விட லைவ் பிரெய்லி நூறு மடங்கு மேன்மையானது என அபிநவ் தெரிவித்துள்ளார்.