Quantcast
Channel: அறிவியல்
Viewing all 488 articles
Browse latest View live

அஜர்பைஜான் அதிபராக இல்ஹம் அலியேவ் 4ஆவது முறையாகத் தேர்வு

$
0
0



அஜர்பைஜான், ஏப். 13- அஜர்பைஜானின் அதிபராக இல்ஹம் அலியேவ் (56)  மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அஜர்பைஜானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் அலியேவ் உள்பட எட்டுபேர் களத்தில் இருந்தனர். தேர்தலில் 74.30 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 86 சதவீத வாக்குகளைப் பெற்று அலியேவ் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஏழு ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியை வகிப்பார். அலியேவ் 4-ஆவது முறையாக அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எலக்ட்ரானிக் கழிவுகளை பயனுள்ள பொருட்களாக மாற்றும் இந்திய வம்சாவளி பெண்

சிட்னி, ஏப். 13- ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி வீணா சகஜ்வாலா. இவர் நியூசவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார்.

இவர் பயன்படாத ஸ்மார்ட்போன், லேப்டாப் (மடி கணினி) போன்றவற்றின் எலெக்ட்ரானிக் கழிவுகளை மதிப்பு மிக்க பொருட்களாக மாற்றும் மைக்ரோ தொழிற்சாலையை உருவாக்கியுள்ளார். இது உலகில் முதன் முறையாக உருவாக் கப்பட்டுள்ள மைக்ரோ தொழிற்சாலையாகும். எலெக்ட்ரானிக் கழிவு பொருட்களால் சுற்றுப்புற சூழல் மற்றும் நிலத்துக்கு கடும் பாதிப்புகளும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. எனவே அவற்றை பயனுள்ள பொருட்களாக, மாற்றும் முயற்சியில் வீணா ஈடுபட்டார்.

தனது தீவிர முயற்சிக்கு பிறகு அதில் வெற்றி பெற்றார். எலெக்ட்ரானிக் கழிவுகள் மூலம் மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் கண்ணாடி பொருட்கள், பிளாஸ்டிக், மரச்சாமான்கள் மற்றும் பல்வேறு உபயோக பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

வீணாகும் கம்ப்யூட்டர் சர்க்கியூட் போர்டுகள் 3டி பிரிண்டிங்குக்கு தேவையான கிரேடு செராமிக்ஸ் மற்றும் பிளாஸ்டிக் நார்களாகவும் மாற்றி உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த தகவலை வீணா சகஜ்வாலா தெரிவித்தார். மும்பையை சேர்ந்த இவர் 1986-ஆம் ஆண்டு கான் பூர் அய்.அய்.டி.யில் பி.டெக் என்ஜினீயரிங் படிப்பை முடித்தார்.


அமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி

$
0
0

 

டி.எச்.எஃப்.எல். அமெரிக்கா ஆயுள் காப்பீட்டு நிறுவனம், இந்தியப் பள்ளி - மாணவ, மாணவிகளுக்கான தனது அமெரிக்கா சமூக சேவை விருதை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்றது. சுமார் நாலாயிரம் பேர் பங்கு கொண்டதில் பரிசீலனைக்குப் பிறகு, 29 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாயினர். அவர்களிலிருந்து 2 மாணவிகள் அமெரிக்க விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஒருவர் புதுடில்லியைச் சேர்ந்த பள்ளி மாணவி. பெயர் இஷிதா மங்களா. மற்றொருவர் தமிழ்நாட்டு மாணவி பானுப்ரியா. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, காளாச்சேரியின் மாணவி. 13 வயதுச் சிறுமி, 8 -ஆம் வகுப்பு படிக்கிறார்.

விருதாளர்களுக்கு விருதுக்கான சான்றுடன், தலா ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும், சமீபத்தில் புதுடில்லியில் விழாவில், சமூகசேவை அமைப்பின் உயரதிகாரி அனுப் பாப்பியால் - சாய்னா நேவாலிடமிருந்து விருது பெற்றார் பானுப்பிரியா.

விருது பெற்ற, தமிழ்நாட்டு மாணவி பானுப்பிரியா, சிறு வயது முதலே, தனது பள்ளி மாணவியர் மற்றும் ஊராரிடையே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதற்காகத் தனது காளாச்சேரி கிராமத்தில் சிறுவர், சிறுமியரை ஒன்று திரட்டிக் கூட்டம் போட்டு ஊர்வலம் நடத்தியும், தெருவுக்கு தெரு வீதி நாடகம் போட்டும் தனது இலக்கை எட்டிப் படிக்கத் திட்டமிட்டுத் தொண்டாற்றி வருகிறார்.

அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தோடு தொடர்பு வைத்துக் கொண்டு அங்குள்ள மருத்துவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்து மருந்து முகாம்களை நடத்தி, கிராமமக்கள் கவனக் குறைவாக உள்ள நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இப்பணிகளில் பள்ளியின் ஆசிரியர்களும் ஊரின் படித்த இளைஞர்களும் யோசனைகளை வழங்கி உதவி வருகின்றனர். மேலும், கிராமத்துப் பெண்களுக்குத் தேவைப்படும் மாதவிலக்குக் கால ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்கிறார். அச்சமயங்களில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரப் பழக்க வழக்கங்கள் குறித்தும் தகுந்த விழிப்புணர்வை மேற்கொள்ள வழிவகை செய்து தருகிறார். இவரது இந்தத்தொண்டால் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.

மொத்தத்தில், பானுப்பிரியாவின் தன்னலமற்ற தொண்டின் காரணமாக அந்தக் காளாச்சேரி கிராமமே மற்றக்கிராமங்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டி வருகிறது.

துப்பாக்கி சுடுவதில் சாதனை!

உலகக் கோப்பை போட்டியில், பெண்களுக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியின் முடிவில், 249.8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த இளவேனில், தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.

அணிகளுக்கான போட்டியிலும், ஸ்ரேயா அகர்வால் மற்றும் ஸியெனா கஹிட்டாவுடன் இணை சேர்ந்து இளவேனில் வாலறிவன், தங்கம் வென்றி ருக்கிறார். இளவேனிலுக்கு பதினெட்டு வயதாகிறது. கடலூரை பூர்விகமாகக் கொண்டிருக்கும் இளவே னில், பெற்றோர்களுடன் வசிப்பது அகமதா பாத்தில்.

அப்பா வாலறிவன் ருத்ரபதி. ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின் தலைவ ராகப் பணிபுரிகிறார். அண்ணன் ராணுவத்தில் கேப்ட னாக இருக்கிறார்.

அவர் விடுமுறையில் வரும்போது துப்பாக்கிகளை பற்றி சொல்வார். ஒருமுறை அப்பா அகமதாபாத்தில் இருக்கும் இந்திய ராணுவ துப்பாக்கி சுடும் கழகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே பயிற்சி பெறுபவர் களைக் கண்டதினால் துப்பாக்கி ஏந்த எனக்கும் ஆசை வந்துவிட்டது. 2013இல் குறி பார்த்து துப்பாக்கியால் சுடும் பயிற்சியில் சேர்ந்தேன்.

தொடக் கத்தில் மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்து கொண்டேன். சீராக எனது வெற்றி புள்ளிகள் அதிகரித்தன. அதனால் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறேன்.

சொந்தமாக துப்பாக்கி வாங்கியது 2016 இல் தான். ஜெர்மனியில் நடந்த 28ஆவது இளையோர் உலகப் போட்டியில் எனக்கு இருபத்தெட்டாவது இடம் கிடைத்தது.

சென்ற நவம்பரில் நடந்த பயிற்சியின் போது சர்வதேச சாதனையால் 252 .1 புள்ளிகளை என்னால் எடுக்க முடிந்தது.

அதையடுத்து டிசம்பரில்   நடந்த போட்டிகளில் ஒரு பிரிவில் தேசிய வாகையராக வந்தேன். எனக்கு கிடைத்த வெற்றி புள்ளிகள் புதிய தேசிய சாதனையாக மாறியது.

சென்ற ஆண்டு முழங்கால் மூட்டில் காயம் ஏற்பட்டு சிரமப்பட்டேன். காலும் வீங்கி விட்டது. பல பயிற்சிகள் செய்து போட்டியில் கலந்து கொண்டேன். சிட்னியில் நான் எடுத்த மொத்த புள்ளிகள் (631 .4) ஒரு உலக சாதனையாகும். பயிற்சிக்காக சென்னைக்கும், புனாவுக்கும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டி யதிருக்கிறது.

ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பில் முதல் ஆண்டு படித்து வருகிறேன். ஓய்வு கிடைப்பது நான் பெற் றோருடன் அகமதாபாத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதுதான்’ என்கிறார் இளவேனில் வாலறிவன்.

தங்கப் பதக்கங்கள் பல வென்ற மனுபாக்கர்!

அரியானா மாநிலத்தில் “கோரியா’ கிராமத்தில் “யுனிவர்சல் மேல்நிலைப் பள்ளி’ மாணவ மாணவியர் பெரும்பாலாரின் கையில் சின்னதும் பெரியதுமாய் துப்பாக்கி.  குறி பார்த்து சுடும் போட்டிக்காக இந்த மாணவ மாணவிகள் துப்பாக்கியுடன் விளையாடு கிறார்கள்.  துப்பாக்கியை கையில் பிடிக்க இவர்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தது அந்தப் பள்ளி மாணவி மனு பாக்கர். பதினாறு வயதில் “பிளஸ் ஒன்’ படிக்கும் மாணவி.

மனு பாக்கர் தனது பதினாறாவது வயதில் குறி நோக்கி துப்பாக்கி சுடுவதில் சர்வதேச சாதனை படைத்திருக்கிறார்.

சென்ற (2018) மார்ச் மாத தொடக்கத்தில் மெக்சி கோவில் நடந்த உலக கோப்பை மூத்தோருக் கான துப்பாக்கி சுடுதலில் பத்து மீட்டர் ஏர் ரைபிள் சுடுதல் ஒற்றையர் போட்டியில் மனுபாக்கர் தங்கப் பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுவதில் உலகப் போட்டியில் பதினாறு வயதில் தங்கப் பதக்கம் பெறும் முதல் வீராங்கனை மனுதான்.

அதுவும் உலகப் போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்கள் பல பெற்றிருக்கும் அனுபவசாலிகளான மெக்சிகோவின் அலெஜாண்ட்ரா ஸவாலா, ஃபிரான்ஸ் ஸின் செலின் கோபேர்வில், கிரீஸ்ஸின் அன்னா கோரக்காகி போன்றவர்களை பின்னுக்குத் தள்ளி தங்கப்பதக்கத்தை மனுபாக்கர் பெற்று வந்திருக்கிறார். தொடர்ந்து, பத்து மீட்டர் ஏர் பிஸ்டலின் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ஓம் பிரகாஷ் மிதர்வாலுடன் சேர்ந்து இந்தியாவுக்காக இரண்டாவது தங்கப் பதக்கமும் மெக்சிகோவில் பெற்றார்.

2017இல் டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய போட்டிகளில் மனுபாக்கர் மின்னத் தொடங் கியிருந்தார். பத்து மீட்டர் தூர துப்பாக்கி சுடுவதில் தேசிய சாதனைகளை உருவாக்கிய ஹீனா சித்துவை மனு பாக்கர் வெற்றி கண்டு புதிய தேசிய சாதனை யையும் நிகழ்த்தினார். துப்பாக்கி சுடுவதில் பல பிரிவுகளில் நடந்த போட்டிகளில், பதினைந்து தேசிய பதக்கங்களை மனு பாக்கர் வென்றார். அதில் ஒன்பது தங்கப் பதக்கங் களும் அடங்கும்.

தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடந்து வரும் இளையோர் உலகப் போட்டியில், கலப்பு இரட் டையர் பிரிவில், தனி ஆளாகக் கலந்து கொண்ட போட்டியிலும் கிடைத்திருக்கும் இரண்டு தங்கப் பதக்கங்களுடன் மனுபாக்கரின் வெற்றி வலம் தொடங்கியுள்ளது.

திறமையுள்ள மனுபாக்கரை 2020 ஒலிம்பிக்குக்கு தயார் செய்ய வேண்டும் என்று துப்பாக்கி சுடும் வட் டாரங்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

விண்வெளியில் ஓர் உணவகம்!

$
0
0


எந்த உணவகத்தில் சாப்பிட்டு வந்தீர்கள்?’’ என்று கேட்டால், “”விண்வெளியில் உள்ள உணவகத்தில்’’ என பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். ஆம். விண்வெளியில் 2022-ஆம் ஆண்டு சொகுசு உணவகத்தை திறக்கிறது அமெரிக்காவின் ஓரியன் ஸ்பான் என்ற தனியார் நிறுவனம்.

இதற்கு “அயூரா விண்வெளி ஹோட்டல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 200 மைல் தூரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த சொகுசு உணவகம் கொண்ட ராக்கெட் 2012ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது. இது குறித்து ஓரியன் ஸ்பான் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது:

“”இரண்டு பேர் தங்கும் சொகுசு அறை கொண்ட இந்த உணவகத்துக்குச் செல்ல மொத்தம் 12 நாள் பயணம் மேற்கொள்ள வேண்டும். இதற்கு முன்னதாக 3 மாதங்கள் பயிற்சியும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதல்கட்டமாக ஒரு குழுவில் 6 பேர் அனுப்பப்படுவார்கள். விண்வெளி வீரர்கள் இரண்டு பேரும் குழுவில் இருப்பார்கள்.

இந்த பயணத்துக்கான முன்பதிவை ஓரியன் ஸ்பான் நிறுவனம் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. பயணக் கட்டணமாக ரூ. 55 கோடியும், முன்பதிவுக் கட்டணமாக ரூ. 5 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்தபடியே, இதுவரை கண்டிராத பூமியின் அழகைக் கண்டு ரசிக்கவும், இந்த விண்வெளி அனுபவத்தைக் கொண்டு ஆய்வில் ஈடுபடவும் இந்தப் பயணம் வழிவகுக்கும்.

புவிவட்டத்தில் 90 நிமிடங்களில் ஒரு சுற்றுப் பாதையை முடிக்கும் இந்த உணவகத்தில் இருந்து ஏராளமான சூரிய உதயங்களையும், அஸ்தமனங்களையும் காணலாம்.
இந்த உணவகத்தின் பரப்பளவு 43.5 அடி நீளமும், 14.1 அடி அகலமும் கொண்டதாகும். வருங்காலங்களில் இந்த உணவகத்தின் விரிவாக்கப் பணிகளும் மேற்கொள்ளப்படும். விண்வெளியின் சுற்றுப்புறத்தைக் காண, வழக்கத்துக்கு மாறாக ஏராளமான ஜன்னல்கள் இந்த விண்கலத்தில் அமைக்கப்படுகின்றன.

கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்ள விரும்பவில்லை என்றாலும் முன்பதிவாளர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்படும். இந்தப் பயணத்தை பிறருக்கு பரிசாகவும் அளிக்கலாம் என்று ஸ்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

15 வயதில் விஞ்ஞானி சிறுவன் கண்டுபிடித்த உடல் பாதுகாப்பு கருவி

பார்கின்சன் என்றழைக்கப்படும் நடுக்க வாதம் நோய் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய். இந்நோய் வந்தால் மூட்டு விரைப்பு, உடலில் நடுக்கம் ஏற்படும். மனம் நினைத்தபடி உடல் செயல்படாது. நரம்பியல் மின் கடத்தியாகச் செயல்படும் டோ போமைன் என்ற வேதிப்பொருளின் அளவு மூளை யில் குறைந்தால் பார்கின்சன் நோய் ஏற்படுகிறது. இதனால் உடலின் இயக்கம் மெதுவாகிவிடுகிறது. உலக அளவில் 1 கோடி பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக வெளியே எங்கும் செல்ல முடியாது. அப்படியே சென்றால் வீட்டில் உள்ளவர்கள், அவர்கள் திரும்பி வரும்வரை அவர்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையை அவர்கள் எங்கிருந்தாலும் பிறர் உடனே தெரிந்து கொள்ள ஒரு கருவியை இந்திய - அமெரிக்க சிறுவன் ஒருவன் கண்டுபிடித்திருக்கிறான். இப்போது அந்தச் சிறுவனுக்கு 18 வயது. பெயர் உத்கர்ஸ் தாண்டன்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் உத்கர்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் அறிவியல் கண்காட்சியில் தனது கண்டு பிடிப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். உடனே அதற்கு அங்கீகாரம் கிடைத்தது. இப்போது அவர் ஓர் இளம் தொழில் முனைவோர்.

1996 இல் ஒலிம்பிக் போட்டி நடந்தது. உலகப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர் முகமது அலி ஒலிம்பிக் விளக்கை ஏற்றுவதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார் உத்கர்ஸ். முகமது அலியின் கை அந்த விளக்கை ஏற்றும்போது நடுங்கிக் கொண்டிருந்தது. இது ஏன்? என்ற கேள்வி மனதைக் குடைய அவருடைய தந்தையிடம் கேட்டிருக்கிறார். அவரோ அதைப் போன்று பார்கின்சனால் பாதிக்கப்பட்ட நடிகர் மைக்கேல் ஜே. ஃபாக்ஸ் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

உத்கர்ஸின் மூளை அப்போதே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. பார்கின்சன் நோய் என்றால் என்ன? அவற்றின் அறிகுறிகள் எவை? என்பதைப் பற்றி சொந்த முனைப்பில் இணையதளங்களின் மூலம் நிறைய தெரிந்து கொண்டார். அதற்குப் பின் அவர் கண்டுபிடித்ததுதான்  மோதிர வடிவிலான கருவி.

இந்த கருவி ஒரு சிறிய கணினியைப் போன்றது. இதை பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அணிந்து கொண்டவுடன் அந்த நோயால் உடலில் ஏற்படும் பல்வேறு அசைவுகளை இந்தக் கருவி அளக்க ஆரம்பித்துவிடும். பின்னர் அவற்றைத் தரவுகளாக மாற்றிவிடும். அந்தத் தரவுகள் பார்கின்சன் நோயாளியின் மருத்துவருக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அனுப்பப்பட்டுவிடும். மருத்துவர் அதைப் பார்த்துவிட்டு, நோய்க்குரிய சிகிச்சையை, கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள், அவற்றின் அளவுகள் எல்லாவற்றையும் தீர்மானிப்பார். நோயாளிகளும் தங்களுடைய செல்போனில் ஒவ்வொரு நாளும் கருவி பதிந்து வைத்திருக்கிற தகவல்களைப் பார்த்து நோயின் தன்மையைத் தெரிந்து கொள்ள முடியும்.

சாதாரணமாக, மாதத்துக்கு ஒருமுறையோ, மூன்று மாதத்துக்கு ஒருமுறையோ மருத்துவரை பார்கின்சன் நோயாளிகள் பார்க்க வருவார்கள். அப்படியே வந்தாலும் 30 நிமிடங்கள் மட்டுமே அவருடைய உடலின் இயக்கங்கள் மருத்துவரால் கவனிக்கப்படும். அந்த 30 நிமிடங்களின் தகவல்களை வைத்து நோயின் தன்மையை, மருத்துவத்தை, மருந்துகளின் அளவைத் தீர்மானிக்கும் முறை இதற்கு முன்பு இருந்தது. இதனால், நோயாளியின் உடலில் பார்கின்சன் நோயால் ஏற்பட்ட பாதிப்புகளை முழுமையாக மருத்துவர்களால் தெரிந்து கொள்ள முடியாமலிருந்தது. உத்கர்ஸின் இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சூரியனுக்கு அருகே உங்கள் பெயர்!

சுட்டெரிக்கும் சூரியனைக் கண்டு நாம் விலகி நின்றாலும், நமது பெயர் சூரியனுக்கு அருகே பத்திரமாக செல்ல இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம், உங்கள் பெயரை சூரியன் அருகே கொண்டு செல்ல நாசா வாய்ப்பளித்துள்ளது.

விண்வெளியை ஆய்வு செய்து வரும் நாசா முதல் முறையாக வெப்பத்தைக் கக்கும் சூரியன் அருகே சென்று ஆய்வு நடத்த உள்ளது. இதற்காக பார்க்கர் சோலார் செயற்கைக்கோளை விரைவில் அனுப்பவுள்ளது.

காரின் அளவில் உள்ள இந்த செயற்கைக்கோள், சூரியக் கதிர்களில் இருந்து வெப்பமும், சக்தியும் எப்படி பூமிக்கு சுட்டெரிக்கும் கதிர்களாக வருகின்றன என்பது குறித்த ஆய்வில் ஈடுபட உள்ளது.

இதன் மூலம், கடந்த 60 ஆண்டுகளாக சூரியன் குறித்து மனிதர்களுக்கு தெரியாத பல அரிய தகவல்கள் கிடைக்கும் என்று நாசா நம்புகிறது. பார்க்கர் சோலார் செயற்கைக்கோள் 43,000 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வரும். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாக்குபிடிக்க 4.5 அங்குல தடிமத்தில் கார்பன் தகடு மூலம் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளில் பெயர்கள் அடங்கிய சிப்பை வைத்து அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து பெயர்களை நாசா சேகரித்து வருகிறது.

ஏப்ரல் 27-ஆம் தேதி கடைசி தேதியாக நாசா நிர்ணயித்துள்ளது. உங்கள் பெயரை அனுப்ப வேண்டும் என்றால் ::http://go.nasa.gov/HotTicket
என்ற நாசாவின் இணையதள முகவரிக்கு சென்று பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்தவர்களுக்கு அவரவர் பெயர் பதிக்கப்பட்ட டிக்கெட்டையும் நாசா வழங்குகிறது.

பிறகென்ன சூரியனுக்கு உங்கள் பெயரை இலவசமாக அனுப்பி வைக்க வேண்டியதுதானே?

மின்சாரம் பாய்ச்சும் சாலை

$
0
0


சுவீடன் நாட்டு அரசு ஒரு முடி வுடன் தான் இருக்கிறது! வரும், 2030 ஆம் ஆண்டுக்குள், பெட்ரோலிய வாகனங்களை முற்றிலுமாக ஒழிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு மாற்றாக, மாசு இல்லாத பல புதிய தொழில் நுட்பங்களை சுவீடன் பரிசோதித்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அண்மையில் சாலைகளில் மின் தண்ட வாளங்களை பதித்து, கார், பேருந்து போன்றவற்றுக்கு அதன் மூலம் மின்சாரம் வினியோகிக்கும் திட்டத்தை வெள்ளோட்டம் பார்க்கத் துவங்கியுள்ளது. ‘இ ரோட் ஆர்லாண்டா’ என்ற அந்தத் திட்டத்தின்படி, 2 கி.மீ.,க்கு, சாலையின் நடுவே உலோகத்தாலான ஒற்றை தண்டவாளம் பதிப்பிக்கப்படுகிறது.

இந்த தண்டவாளத்தை கடக்கும் மின் வாகனங்களின் அடிப் பகுதியில் உள்ள கம்பி போன்ற அமைப்பு கீழே இறங்கி, தண்ட வாளத்தை தொடும்போது, வாகனங்களின் மின்கலனில் மின்னேற்றம் நடக்கும். இரண்டு ஆண்டுகள் சோதனைக்குப் பின், இந்த வசதியில் இருக்கும் நன்மை, தீமைகளை அலசி, சுவீடனின் பிற பகுதிகளுக்கும் இத்திட்டத் தை விரிவாக்க, அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது.

எது எப்படியோ, மின் வாகனங்களுக்குத் தான் இனி எதிர்காலம் என்று ஆகிவிட்டதால், அந்த வாகனங்களுக்கு போகிற போக்கிலேயே மின்னேற்றம் செய்யும் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றே வல்லுனர்கள் கருதுகின்றனர்.

பலமான செயற்கை தசை

மின்சாரம் பாய்ச்சினால் அதிக எடையை தூக்கும் திறன் கொண்ட செயற்கை தசைகளை, விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

அமெரிக்காவின், இல்லி னாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள செயற்கை தசைகள், அவற்றின் எடையை விட, 12 ஆயிரம் மடங்கு அதிக எடையை தூக்கும் வலுவை பெற்றுள்ளன.
கார்பன் இழைகளையும், பி.டி.எம்.எஸ்., எனப்படும், ‘பாலிடை மெதைல்சிலாக்சேன்’ என்ற ரப்பரையும் கலந்த சுருள்களாக செயற்கை தசையை அவர்கள் உருவாக்கிஉள்ளனர்.

இந்த சுருள்களின் ஒரு முனையில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தை பாய்ச்சினால், இழைகள் விரிவடைந்து அவற்றின் நீளம் குறைகிறது. இந்த சுருக்கத்தால், மறு முனையில் இணைக்கப்பட்டுள்ள எடையை அவை மேலே தூக்குகின்றன. இதுவரை உருவாக்கப்பட்ட செயற்கை தசைகளிலேயே, இல்லினாய் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள கார்பன்- பி.டி.எம்.எஸ்., இழைகளால் ஆன தசையே மிகவும் வலுவானதாக இருக்கக்கூடும் என, ‘ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ் அண்டு ஸ்ட்ரக்சர்ஸ்’ ஆய்விதழ் தெரிவித்து உள்ளது.  மனிதர்களுக்கான செயற்கை கைகள், கால்களிலும், ‘ரோபோ’க்களின் கை -கால்களை இயக்கும் ‘ஆக்சுவேட்டர்’களைப் போல இத்தகைய செயற்கை தசை களை பயன்படுத்த முடியும் என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மறு சுழற்சிக்கு சிறிய தொழிற்சாலை

உலகெங்கும் ஆண்டுக்கு, 150 கோடி மொபைல் போன்கள் விற்பனையாகின்றன. அதே அளவுக்கு பழைய மொபைல் போன்களும் குப்பைக்குப் போகின்றன.

இதோடு பழைய மடிக்கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் என்று பல்லாயிரம் டன் மின்னணு குப்பை சேர்ந்து, மண்ணுக்கும், காற்றுக்கும் நச்சுத் தன்மையை உண்டாக்குகின்றன.

இந்த மின்னணு குப்பை கழிவுகளை மறுசுழற்சி செய்வது நல்ல தீர்வு. ஆனால், மின்னணு குப்பை கழிவுகளை பிரித்து மறுசுழற்சி செய்து, பயனுள்ள பொருட்களாக ஆக்க உயர் தொழில்நுட்பமும், நிறைய ஆட்களும், ஏக்கர் கணக்கில் இட வசதியும், முதலீடும் தேவை.

இந்த தடைகளை களைந்து, எளிய தீர்வை உருவாக்கி இருக்கிறார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஆஸ்திரேலிய பேராசிரியரான வீணா சஹஜ்வாலா.

இவரும், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவினரும், மின்னணு குப்பை கழிவுகள் சேரும் இடத்திலேயே வைத்து இயக்கக்கூடிய சிறிய மறுசுழற்சி தொழிற்சாலையை உருவாக்கியுள்ளனர்.

‘ஸ்மார்ட்’ மினி மறுசுழற்சித் தொழிற்சாலை, ‘அசெம்பிளி லைன்’ பாணியில் இயங்குகிறது.

ஒரு பக்கம் மின்னணு குப்பை கழிவுகளை உள்ளே அனுப்பினால், அவற்றை ஒரு இயந்திரம் உடைத்து பிரித்து அனுப்ப, அடுத்த கட்டத்தில் ஒரு ரோபோ கரமும், கேமராவும், பொருட்களை பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம், அலோகம் என வேகமாக பிரித்து அனுப்புகிறது.

அடுத்து, ஒரு கணினி மூலம் இயங்கும் எரிகலன், செம்பு, அலுமினியம், இரும்பு, பிளாஸ்டிக் என, அந்தந்த பொருட்களுக்கு தேவையான உயர் வெப்பத்தை செலுத்தி உருக்கி, அனுப்புகிறது.

பிளாஸ்டிக் போன்றவற்றை பிரித்து, முப்பரிமாண இயந்திரங்களில் புதிய பொருட்களை உருவாக்கத் தேவையான பிளாஸ்டிக் இழைகளாக மாற்ற முடியும்.

உலகம் மற்றும் அலோகங்கள் குளிகை வடிவில் குளிர்வித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பலாம். இத்தனையையும் செய்யும் அந்த மினி தொழிற்சாலைக்கு தேவையான இடம் வெறும், 50 சதுர மீட்டர் தான்!

குறட்டையை குறைக்கும் காதணி கருவி!

ஆழ்ந்த துக்கத்தில் குறட்டை விடுவோருக்கு உதவ, ‘ஸ்லீப் இயர் பட்’ என்ற காதில் அணியும், ‘இயர் போன்’ கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.

இதை அணிந்துகொண்டால், குறட்டை சத்தம் கேட்க ஆரம்பித்ததும், மெல்லிய ஒலியையும், அதிர்வையும் அந்தக் கருவி உண்டாக்கும்.

உடனே, குறட்டை விடுபவர் விழித்து, அவர் படுத்திருக்கும் தோரணை, தலையை வைத்திருக்கும் கோணம் போன்றவற்றை மாற்றிக் கொண்டு தூங்க உதவும்.

மேலும், இந்தக் கருவி எழுப்பும் ஒலியால், மூச்சுக் குழாயை சுற்றி உள்ள தொண்டை தசைகள் சுருங்கி விரிந்து கொடுப்பதால், குறட்டை விடுபவரால் இயல்பாக சுவாசிக்கவும் முடியும்.

ஸ்லீப் இயர் பட் எழுப்பும் ஒலி, அதை அணிந் திருப்பவரைத் தவிர, அருகில் படுத்து உறங்கு பவருக்கு கேட்காது. இயர் பட்டின் ஒலி மற்றும் அதிர்வுகள் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை, ஒரு மொபைல் செயலி மூலம் திருத்திக் கொள்ளலாம்.

மேலும், ஒரு இரவில் எத்தனை முறை அவர் குறட்டை விட்டார் என்பதையும் மொபைல் செயலி பதிவு செய்யும்.

குறட்டை விடுபவர் இப்படி தன் குறட்டைப் பழக்கத்தை கண்காணிக்க ஆரம்பிக்கும்போது, குறட்டையின் அளவு குறையவும், ஏன் குறட்டை விடும் பழக்கமே கூட நிற்க வாய்ப்புள்ளதாக, ஸ்லீப் இயர் பட்டின் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித் துள்ளனர்.

இதன் விலை, 6,500 ரூபாய். இந்த கருவிக்கு எந்த அளவு வரவேற்பு உள்ளது என்பதை அறிய, விரைவில், ‘இன்டிகோகோ’ இணையதளத்தில் அறி முகப்படுத்த உள்ளனர் இதன் தயாரிப்பாளர்கள்.

வெடித்து விரட்டும் அதிசய எறும்புகள்!

எறும்புகள் கூட்டமாக செயல்படக்கூடியவை என்பதும், கூட்டத்தின் நலனுக்காக பல தியாகங் களை செய்யக்கூடியவை என்பதும் தெரிந்தது தான்.

ஆனால், தெற்காசிய நாடுகளில் சில வகை எறும்புகள், தங்கள் கூட்டம் எதிரிக்கு இரையாகாமல் தடுக்க, தங்கள் உடலை வெடித்துச் சிதறச் செய்கின்றன என்பது, பூச்சியியல் வல்லுனர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆனால், 1935க்குப் பின், இத்தகைய எறும்புகள் இருப்பதற்கான ஆதாரமே கிடைக்கவில்லை.

எனவே, 2016 வாக்கில், ஆஸ்திரியா, தாய்லாந்து, போர்னியோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தென்கிழக்காசிய காடுகளில் ஆராய்ச்சி நடத்தினர். அப்போது, எதிரிகளிடமிருந்து தங்கள் புற்றிலிருக்கும் சக எறும்புகளைக் காக்க, சில எறும்புகள் தங்கள் உடலை வெடித்துச் சிதறச் செய்வது உண்மை தான் என, அவர்கள் கண்டறிந்தனர்.

அத்தகைய எறும்பினங்களை மேலும் ஆராய்ந்தபோது, வெடித்துச் சிதறும் எறும்புகளின் சுரப்பிகளில் உள்ள திரவத்தின் விஷம் அல்லது விரும்பத்தகாத தன்மை, எதிரிகளை புற்றுக்குள் வரவிடாமல் விரட்டியடிப்பது தெரிய வந்தது.

பறக்கும் சரக்கு ரயில்

$
0
0


பிரிட்டனின் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் துவக்கியுள்ள, ‘வர்ஜின் ஹைப்பர்லுப்’ என்ற நிலத்தடி அதிவேக ரயில் சேவை, பயணியருக்கானது மட்டுமே.

ஆனால், அது மூன்று ஆண்டுகளில் இயங்கவிருக்கும் அபுதாபி, மும்பை நகர்களில் உள்ள துறைமுகங்களிலிருந்து, உள்நாட்டுக்கு சரக்குகளை மணிக்கு, 1,000 கி.மீ., வேகத்தில் எடுத்துச் செல்ல முடியும் என்கிறது. இதற்கான ‘வர்ஜின் கார்கோ ஸ்பீட்’ மூலம். ‘சரக்கு லாரியின் கட்டணத்திற்கு, விமான வேகத்தில்’ சரக்குகளை சிந்தாமல், சிதறாமல், கெடாமல் பொருட்களை கொண்டு சேர்க்க முடியும் என்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது வர்ஜின் ஹைப்பர்லுப்.

நீரிலிருந்து, ‘பசுமை’ எரிபொருள்

தண்ணீரில் ஹைட்ரஜன் ஏராளம். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிபொருளான ஹைட்ரஜனை, மலிவாக, விரைவாக நீரிலிருந்து பிரிக்கும் தொழில்நுட்பத்தை, இங்கி லாந்திலுள்ள எக்செட்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த, கோவிந்தர் சிங் பவார் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

லாந்தானம் இரும்பு ஆக்சைடு (3) என்ற நானோ துகள்களால் அவர்கள் உருவாக்கிய ஒரு குறைகடத்தி, சூரிய ஒளியை உள்வாங்கி நிகழ்த்தும் வேதிவினை, நீரின் மூலக்கூறுகளான ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் பிரித்தெடுக்கிறது.இந்த வேதிவினைக்கு, சூரிய ஒளியைத் தவிர வேறு எந்த கிரியா ஊக்கியும் தேவையில்லை.

இந்த தொழில்நுட்பத்தை மேலும் செம்மையாக்க, எக்செட்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹைட்ரஜனை வாகன எரிபொருளாகவும், மின்சாரம் தயாரிப்பதற்கு மூலப்பொருளாகவும் பயன்படுத்தலாம்.
ஹைட்ரஜன் எரிவதால் வெளியேறும் ஒரே கழிவுப் பொருள்  தண்ணீர்தான்!

பூமியின் காந்தசக்தி குறைகிறதா?

தென் அட்லாண்டிக் கடல் பகுதியில், சிலி நாட்டிலிருந்து, ஜிம்பாப்வே வரையிலுள்ள பகுதியில், பூமிக்கு இயற்கையிலேயே உள்ள காந்த விசை குறைவாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். இந்த குறைபாடு, 1958லேயே கண்டறியப் பட்டதுதான் என்றாலும், இந்த பகுதியின் காந்த விசை, ஆண்டுகள் செல்லச் செல்ல குறைந்த படியேதான் உள்ளது என்பதை, அண்மையில் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் அய்ஸ்லாந்து விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

அப்படியென்றால், பூமிக்கு ஏதாவது பாதிப்புகள் வருமா? முதலில் புவியீர்ப்பு விசைக்கும் இதற்கும் தொடர்பில்லை என்பதை தெரிந்துகொள்வது அவசியம். இரு பொருட்களின் எடையை வைத்து, பெரிய பொருள் சிறிய பொருளை ஈர்த்துக்கொண்டே இருக்கும் என்பது பிரபஞ்ச விதி. இதன்படி பூமி எனும் ராட்சதப் பந்து, அதன் மீதுள்ள மானிடப் பதர்கள் உட்பட அனைத்தையும், தன்னை நோக்கி ஒரே வேகத்தில் ஈர்த்தபடியே உள்ளது. இதுதான் புவியீர்ப்பு விசை.
ஆனால், பூமியின் காந்த விசை, தென், வட புலங்களைக் கொண்டு, பூமியை காக்கிறது. பிர பஞ்சம் வீசும் ஆபத்தான கதிர்கள் உள்ளே வராமல் தடுக்கக்கூடிய கவசமாகவும், திசைகளை உணர்த்தும் புலமாகவும் அது இருக்கிறது. சரி, ஏன் குறிப்பிட்ட இடத்தில் அந்த விசை குறைவாக இருக்கிறது? இதற்கு மூன்று நாட்டு விஞ்ஞானிகளும் சொல்லும் விளக்கம் என்ன தெரியுமா? பூமியின் வட, தென் துருவ காந்தப் புலம் இரண்டு அல்லது மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி துருவங்கள் திருப்பிப்போடப்படுவது நடக்கிறது.

அதன்படி, கடைசியாக துருவ மாற்றம் ஏழு லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. ஆனால், தென் அட்லாண்டிக் பகுதியில் புவியின் காந்தம் பலவீனமாக இருப்பதை வைத்து, துருவ மாற்றம் ஏற்படும் என, சொல்லிவிட முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.துருவங்கள் மாறும் தருவாயில், பிரபஞ்ச கதிர்வீச்சு அதிகம் பூமியின் வளி மண்டலத்திற்குள் வரலாம் என்றாலும், பலர் அவ நம்பிக்கையாளர்கள் கணிப்பதைப் போல பேரிடர்கள் ஏதும் நிகழாது.

அதிகபட்சமாக, நாம் பழைய திசைமானிகளை விட்டுவிட்டு, புதிய திசைமானிகளை வாங்கவேண்டி யிருக்கும் என்கின்றனர், ‘நாசா’ விஞ்ஞானிகள்.

8 நிமிடத்தில் மின் காரை சார்ஜ் செய்யலாம்!

சுவிட்சர்லாந்தை சேர்ந்த, ஏ.பி.பி., நிறுவனம் அதிவேகமாக சார்ஜ் ஆகும் வாகன மின்னேற்றியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சார்ஜர் நிலையத்தில், 8 நிமிடங்களில் செய்யும் சார்ஜை வைத்து, ஒரு மின்சார காரால், 200 கி.மீ., பயணிக்க முடியும். எனவே, மின் வாகன பிரியர்கள் மத்தியில், ஏ.பி.பி., டெர்ரா ஹை பவர் டீ.சி. சார்ஜர் வரவேற்பை பெற்றுள்ளது.

பெட்ரோலிய கார்களை பல நாடுகள் அடுத்த, 20 ஆண்டுகளில் தடை செய்ய திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில் மின்சார கார்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருந்தாலும், நடுவழியில் பேட்டரி தீர்ந்துவிட்டால், மணிக் கணக்கில் நின்று சார்ஜ் செய்யவேண்டி வருமே என்ற தயக்கம் அவர்களை தடுக்கிறது.

இன்று சந்தையில் உள்ள டெஸ்லா, ஜி.எம்., நிசான் போன்ற நிறுவனங்களின் மின்சார கார்கள், வீட்டில் இரவு நேரத்தில் சில மணி நேரம் மின்னேற்றம் செய்து பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர் பேட்டரி நிலையங்களில், 20 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 50 சதவீத பேட்டரி நிரம்பி, 273 கி.மீ., பயணிக்கலாம்.

ஆனால், ஏ.பி.பியின் டெர்ரா ஹைபவர் டீ.சி., நிலையத்தில், 8 நிமிடத்தில் சார்ஜ் செய்து, 200 கி.மீ., தூரம் பயணிக்க முடியும் மின் வாகன பேட்டரிகள் சார்ஜ் ஆகும் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க, அவற்றின் பயன்பாடும் அதிகரிக்கும்.
செவ்வாயில் ஏற்படும் நில நடுக்கங்களை ஆராயப் போகும் செயற்கைக் கோள்

செவ்வாய்க் கோளின் உள் அமைப்புகளை ஆராய்வதற்காக ‘இன்சைட்’ என்ற செயற்கைக் கோளை சனிக்கிழமை ஏவியது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா.

இந்த செயற்கைக் கோள் வரும் நவம்பர் மாதம் செவ்வாயில்

தரையிறங்கும். பிறகு செவ்வாயின் தரைப்பரப்பில் சீஸ்மோமீட்டர் எனப்படும் நிலநடுக்க ஆய்வுக் கருவியைப் பொருத்தி, செவ்வாய் கோளின் நிலநடுக்கங்களை இக்கருவி உணர்ந்து ஆராயும்.

செவ்வாயின் தரையின் உள்ளே இருக்கும் பாறை அடுக்குகளின் தன்மையை இந்த அதிர்வுகள் மூலம் அறியமுடியும். இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் தரவுகளை பூமியின் தரவுகளோடு ஒப்பிடுவதன் மூலம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கோள்கள் உருவான விதம் பற்றிய புதிய விளக்கங்களைப் பெற முடியும்.

“செவ்வாயின் நிலநடுக்க அதிர்வுகள் மாறுபட்டப் பாறைகளின் ஊடாகப் பரவும்போது, அந்தப் பாறைகளின் தன்மைகள் தொடர்பான தகவல்களை அதிலிருந்து பெறமுடியும்“ என்று விளக்குகிறார் இன்சைட் பயணத்தின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் புரூஸ் பேனர்ட்.

“சீஸ்மோமீட்டர் பதிவு செய்யும் சீஸ்மோகிராம் என்னும் அதிர்வு வரைபடத்தின் ஏற்ற இறக்கங்களில் இருந்து இந்தத் தகவல்களை எப்படித் திரட்டுவது என்று விஞ்ஞானிகளுக்குத் தெரியும். வெவ்வேறு திசைகளில் நடக்கும் பல பல செவ்வாய் நடுக்கங்களைப் பற்றிய தரவுகளைத் திரட்டிய பிறகு செவ்வாயின் உள் அமைப்பைப் பற்றிய ஒரு முப்பரிமாண சித்திரத்தை உருவாக்க முடியும்,” என்கிறார் அவர்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வேண்டன்பெர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லாஸ் ராக்கெட் மூலம் உள்ளூர் நேரப்படி காலை 04.05 மணிக்கு இன்சைட் செயற்கைக் கோள் ஏவப்பட்டது. அந்த நேரத்தில் வானில் அடர்த்தியான பனிப்புகை சூழ்ந்திருந்தது செயற்கைக் கோள் ஏவுவதை பாதிக்கவில்லை.

வைக்கிங் தரையிறங்கிகள் மூலம் 1970களிலேயே சீஸ்மோமீட்டர் கருவிகளை செவ்வாய்க்கு அனுப்பியது நாசா. ஆனால், தரையிறங்கிகளின் உடலிலேயே இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்ட அந்தக் கருவிகளால் செவ்வாய்த் தரையில் இருந்து அதிர்வுகளை உணர முடியாமல் போனது.

காற்று வீசிக்கொண்டிருக்கும் நிலையில் தரையிறங்கி அதிரும் சத்தத்தை மட்டுமே அந்தக் கருவிகளால் பதிவு செய்ய முடிந்தது. ஆனால், அதற்கு மாறாக, இன்சைட் செயற்கைக் கோள் நேரடியாக தனது சீஸ்மோமீட்டரை செவ்வாயின் தரையில் பொருத்தவுள்ளது.

பூமியில் நடந்தால் நடந்ததுகூடத் தெரியாமல் மக்கள் தூங்கக்கூடிய அளவு மிக மென்மையானவை இவை. ஆனால், இவ்வளவு மென்மையான நடுக்கங்களேகூட, செவ்வாயின் தரைக்குக் கீழே உள்ள அமைப்பு பற்றிய போதிய தகவல்களை தரக்கூடியவையாக இருக்கும். இதைக் கொண்டு செவ்வாயின் அடியாழங்களைப் பற்றியும், அமைப் பைப் பற்றியும் விஞ்ஞானிகள் ஒரு மாதிரியை உருவாக்கமுடியும் என்கின்றனர்.

ஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்

$
0
0

நாகர்கோவில், மே 14 மிகப் பெரிய செயற்கைக் கோளான ஜி சாட் 29, ஜி சாட் 7 மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக் கோள்கள் மிக விரைவில் விண்ணில் செலுத்தப் படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இதுகுறித்து நாகர்கோவில், சரக்கல்விளையில் அவர்  அளித்த பேட்டி: நிகழாண்டு இஸ்ரோ அதிக அளவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 5 டேட்டா ரேட் கொண்ட மிகப்பெரிய செயற்கைக் கோளான ஜி சாட் 29 விண்ணில் செலுத்தப்பட உள் ளது. அதனைத் தொடர்ந்து ஜி சாட் 7 விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

மேலும் பல செயற்கைக் கோள்கள் செலுத்த இருக்கிறோம். 10 க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. நிச்சயம் நிகழாண்டு முடி வுக்குள் குறைந்தது 8 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளோம்.

அடுத்த ஆண்டு (2019) 13 செயற்கைக் கோள்களை தயார் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இஸ்ரோ சார்பில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்களின் பயன்கள் பாமர மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இஸ்ரோவின் விருப்பம். குறிப்பாக நாவிக் கருவிகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. அந்த பணிகள் முடிவடைந்ததும் தயாரிக்கப்பட்ட கருவிகள் மீன வர்களுக்கு வழங்கப்படும். அது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

இதே போன்று விவசாயிகள் உள்பட அனைவருக்கும் பயன் படும் வகையில் புதிய கருவிகள் உருவாக்கப்படும். சந்திரயான் 2 செயற்கைக்கோள் உருவாக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. தொழில்நுட்ப சோதனை முடிந்த பின்னர் நிகழாண்டின் இறுதியில் விண்ணில் செலுத்தப் படும். சூரியனை ஆராய சன் மிஷன் செயற்கைக் கோள் மிக விரைவில் செலுத்தப்பட உள்ளது.

ஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்

$
0
0

பிர்மாவுக்குக் கல்தா!

படைப்புக் கடவுள் பிரம்மனுக்கு வேலை இல்லை

மனித உயிர் உருவாக்கத்தில் ஆண், பெண் சேர்க்கையில்லாமல் ஆய்வகத் திலேயே கருவை உருவாக்கிட முடியும் என்று 76ஆண்டுகளுக்கு முன்னால் (1942) தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்குடன் இனி வரும் உலகம் நூலில் அறிவியலில் வளர்ச்சி ஏற்படும் என்று குறிப்பிட்டார். அதன்படி அறிவியலில் வளர்ச்சி ஏற்பட்டு, சோதனைக் குழாய் குழந்தை உருவானது.

1968ஆம் ஆண்டுகளில் பன்னாட்டளவில் சோதனைக் குழாய் குழந்தை பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், 25.07.1978ஆம் ஆண்டில் உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை வெற்றிகரமாக பிறந்தது.

மருத்துவர்கள் ராபர்ட் எட்வர்ட்ஸ், பேட்ரிக் ஸ்டெப்டோ ஆகியோரின் தொடர் ஆராய்ச்சியின் பயனாய் உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது. இங்கிலாந்து ஓல்டுஹாம் நகரில் பொதுமருத் துவமனையில் லூயிஸ் ஜாய் பிரவுன் எனும் சோதனைக் குழாய் குழந்தையை லெஸ்லி பிரவுன் எனும் பெண்மணி ஈன்றெடுத்தார். மருத்துவரின் ஒன்பது ஆண்டுகால தொடர் முயற்சியின் பயனாய் அவர் 38 வாரங்களில் கருவை சுமந்து சோதனைக் குழாய் குழந்தையை ஈன்றெடுத்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு வரை பன்னாட் டளவில்  சுமார் 65 லட்சம் சோதனைக் குழாய் குழந்தைகளில் லூயிஸ் ஜாய் பிரவுன் முதலாமவர் ஆவார்.

கருமுட்டை, விந்தணு இல்லாமல்...

அறிவியல் வளர்ச்சியில் அடுத்த கட்ட நகர்வாக, கருமுட்டை, விந்தணுக்கள் இல்லாமல், ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணுக்களைக் கொண்டே உயிர் உருவாக்கம் செய்வதற்கான ஆராய்ச்சி அறிக்கை வெற்றிகரமாக அறிவியலாளர் களால் பன்னாட்டு சமூகத்தின் முன்பாக அளிக்கப்பட்டுள்ளது.

இன்று (2018ஆம் ஆண்டில்)   கருமுட்டை, விந்தணுக்கள் இல்லாமல் ஸ்டெம் செல்களைக்கொண்டே, உயிரை உருவாக்க முடியும் என்பதுதான் அறிவியலில்  வளர்ச்சி பெற்றுள்ள தகவலாகும். வேறுபட்ட இரண்டு வகையிலான குருத் தணுக்களைப் பயன்படுத்தி, ஆய்வுக்குழு ஆராய்ந்து வந்தது. ஆய்வில் மனிதக் கருவின் வளர்ச்சிக்கான தொடக்க நிலையை வெளிப்படுத்தியது.  இந்த குறிப்பிட்ட ஆய்வின்மூலமாக, புதிய கண்டுபிடிப்புக்கான வழி ஏற்பட்டது. வரையறை இல்லாத அளவுக்கு அதிகப்படியான குருத்தணுக் களைக் கொண்டு புதிதாக திறன்மிகுந்த கருக்களை உண்டாக்க முடியும் என்று தெரியவந்தது.  கருப்பையில் உள்ள கரு வளர்ச்சியில் உள்ள குறைபாடுகளைக் களைந்திடவும் இந்த ஸ்டெம் செல்கள் எனப்படும் குருத்தணுக்கள் மூலமாக சிகிச்சை மேற்கொள்ளமுடியும் என்பதும் கண்டறியப்பட்டது.

உயிர் உருவாக்கம், படைப்பு என்பது கடவுளின் செயல் என்று கூறப்பட்டு வரும் கருத்தை முறியடிப்பதாக இந்த அறிவியல் வளர்ச்சி உள்ளது.

உயிர்களை படைக்கின்ற பணியை கடவுள் தான் செய்துவருவதாக கூறப்பட்ட தற்கு மரண அடியாக இன்றைய அறிவியல் வளர்ச்சி காணப்படுகிறது.

மாஸ்டிரிட்ச் பல்கலைக்கழகத்தில் மெர்ல்ன் (MERLN) இன்ஸ்டிடியூட் மற்றும் நெதர்லாந்தில் உள்ள ஹப்ரெக்ட் இன்ஸ்டி டியூட்  (KNAW) ஆய்வுகள் நடத்தப்பட்டன.

டாக்டர் நிக்கோலஸ் ரிவ்ரான்

அறிவியலாளர் குழுவின் தலைவர் டாக்டர் நிக்கோலஸ் ரிவ்ரான் கூறியதாவது:

கரு உற்பத்தியில் ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டிடவும்,  சரியான பாதையை புரிந்துகொள்ளவும் எங்களின் ஆய்வு உதவியுள்ளது என்றார்.

கிளெமென்ஸ் வான் பிலிட்டர்ஸ்விஜிக்

மாஸ்டிரிட்ச் பல்கலைக்கழகத்தில் மெர்ல்ன் (MERLN) இன்ஸ்டிடியூட் கரு மருத்துவயியல் துறைத் தலைவர் பேராசிரியர் கிளெமென்ஸ் வான் பிலிட்டர்ஸ்விஜிக் கூறியதாவது:

உயிர் மருத்துவத்துறையில் புதிய நகர்வுக் கான பாதையை இந்த ஆய்வு திறந்து வைத்துள்ளது. பெரிய அளவிலான எண் ணிக்கையில் மாதிரி கருக்களை எங்களால் உருவாக்க முடியும். புதிய கருத்தாக்கங்களை உருவாக்க முடியும். புதிய மருத்துவ தொழில் நுட்பங்கள், சிறந்த மருந்துகளை உருவாக்க முடியும். விலங்குகளிடம் மேற்கொள்ளப் படுகின்ற ஆய்வுச் சோதனை களை  வியக்கத்தக்க அளவில் இந்த ஆய்வு முடிவுகள் குறைத்துவிடும் என்றார்.

அய்ரோப்பிய நாடாளுமன்றத்தில் 1997ஆம் ஆண்டு மனித குளோனிங் என்பது சட்ட விரோதமானது என்று கூறப்பட்ட நிலையில், அறிவியல் வளர்ச்சியில் எந்த ஓர் ஆபத்தும் கிடையாது என்று நிரூபணமாகி யுள்ளது. மருந்துகள் ஆய்வு, மலட்டுத்தன்மை குறித்த ஆராய்ச்சி களுக்கு மாறாக, இந்தத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஸ்டெம் செல்கள் எனப்படும் குருத் தணுக்கள் மூலமாக மரபணு சிகிச்சை முறைகள் மருத்துவத்துறையில் நடை பெற்று வருகின்றன. குருதி வங்கி இருப்பதைப் போன்று, ஸ்டெம் செல் வங்கித்திட்டம் அண்மைக்காலமாக பெருகி வருகிறது. மரபியல் ரீதியில் உள்ள நோய்களான சிறுநீரக நோய், நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை முற்றிலும் குணப் படுத்த ஸ்டெம் செல் சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் குருத்தணுக்கள் சேமிப்புத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. மகப்பேறின் போது துண்டித்து ஒதுக்கப்படுகின்ற தொப்புள் கொடியை துண்டித்து வீணாக் காமல், முன்னதாகவே உரிய மருத்துவ நிறுவனங்களிடம் பதிவு செய்துகொண்டால், முறையாக தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் தொப்புள் கொடியை அகற்றி சேமித்துக்கொள்ளும் பணிகளை மருத்துவ நிறுவனங்கள் ஸ்டெம் செல் சிகிச்சைக்காக ஸ்டெம் செல் வங்கித் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

இனி வரும் உலகம் நூலில் தந்தை பெரியார்

1942ஆம் ஆண்டில் செய்யாறு திருவத்திபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் கலந்துகொண்டு உரையாற்றினார். அந்நிகழ்வில் தந்தை பெரியார் ஆற்றிய உரையை அண்ணா குறிப்பெடுத்து, தம்முடைய திராவிட நாடு இதழில் (21.1.1943, 28.1.1943) வெளியிட்டார். தந்தை பெரியார் ஆற்றிய திருமண விழா உரை, இனி வரும் உலகம் எனும் தலைப்பில் சிறு நூலாக திராவிடர் கழக வெளியீடாக வெளியிடப்பட்டது. சோதனைக் குழாயில் குழந்தை வளர்கின்ற படம் நூலின் அட்டையில் வெளியிடப்பட்டது.

இனி வரும் உலகம் நூலின் மறுபதிப்பில் பின் அட்டையில், அய்யாவின் (பெரியாரின்) கணிப்பு வென்றது என்று குறிப்பிடப்பட்டு, ஒரு தகவல் இடம் வெளியிடப்பட்டது. ஆண்-பெண் உடல் உறவு இல்லாமலே விஞ்ஞானிகள் செயற்கை முறையில் குழந்தைகளை உற்பத்தி செய்துள்ளனர். விஞ்ஞானிகளின் இந்தச் சோதனை வெற்றி அடைந்து விட்டது. இதுகுறித்து இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழக மகப்பேறு இயல் பேரா சிரியர் டாக்டர் டக்டஸ் ஈவிஸ் கூறியதாவது: சோதனைக் குழாய்களில் விந்துக்களைச் செலுத்தி, கருத்தறிப்பு நிகழ்ந்த பிறகு பெண் ணின் கர்ப்பப் பையில் அக்கரு செலுத்தப்படு கிறது. அப்படிச் செலுத்தப்பட்டு, மூன்று செயற்கைக் குழந்தைகள் உருவாக்கப்பட் டுள்ளன. அம் மூன்று குழந்தைகளில் ஒன்று பிரிட்டனில் பிறந்துள்ளது. ஒரு குழந்தை பிறந்து 18 மாதமாகின்றது. மூன்று குழந்தை களும்  நலமுடன் வளர்ந்து வருகிறது.

-16.7.1974 பத்திரிகைச் செய்தி

தந்தை பெரியார் ஆற்றிய உரையில் குறிப்பிடுகையில்,

...பிள்ளைப்பேறுக்கு ஆண் - பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும் படியாக பொலிகாளைகள்போல் தெரிந் தெடுத்து மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன்மூலம் பெண்கள் கருப் பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தை களைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் - பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவ தற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டு விடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டுவந்துவிடக் கூடும்... இனி வரும் உலகம் நூலில் மேலும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அன்று தந்தை பெரியார் குறிப்பிட்ட சிந்தனைகள் இன்று செயல்வடிவில் உள்ளன.

அறிவியல் வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது. மனிதனின் பகுத்தறிவால் அறிவியலில் முன்னேற்றம் பெற்று வருகிறான். இது பன்னாட்டளவில் இருந்து வருகிறது. ஆனால், இந்துத்துவா ஆட்சி நடத்திவரும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் ஆட்சியில் எல்லா நிலைகளிலும் பிற்போக்கு நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

-ந.கதிரவன்

ஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்!

$
0
0

மாற்று எரிபொருளுக்கான மாபெரும் தேடலை மேற்கொண்டி ருப்பவை கார்கள் மட்டுமல்ல, லாரிகளும்தான். அமெரிக்காவிலுள்ள ‘நிக்கோலா மோட்டார்ஸ்,’ ஹைட்ரஜனில் ஓடும் கனரக லாரிகளை தயாரித்து வருகிறது.

ஹைட்ரஜனை ஒரு முறை நிரப்பினால், 1,280 முதல் 1930 கி.மீ., வரை பயணிக்கும் திறன் வாய்ந்தது தங்களின் ‘நிக்கோலா ஒன்’ என்கிறது நிக்கோலா மோட்டார்ஸ்.

மதுபானங்களை விற்கும் ஆன்ஹியுசர் புஷ் நிறுவனம், அண்மையில் நிக்கோலாவிடம் 800 ஹைட்ரஜன் லாரிகளை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது.

பிரபலமான மது மற்றும் பீர் பானங்களை தயாரித்து விற்கும் ஆன்ஹியுசர், தனது ‘சரக்கு’களை லாரிகள் மூலமே வினியோகிக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என, மின்சார லாரி உட்பட பல மாற்று எரிபொருள் வாகனங்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளது.  நிக்கோலாவின் லாரிகளை, 2019இல் தங்கள் நிறுவனத்தில் ஆன்ஹியுசர் பன்படுத்த ஆரம்பிக்கும்.

நிக்கோலா ஒன் லாரியில் பயன்படும் ஹைட்ரஜனால், துளிகூட காற்று மாசு ஏற்படாது.  எனவே, ஆன்ஹியுசர் பயன்படுத்தும், 800 ஹைட்ரஜன் லாரிகளால், ஆண்டுக்கு 13 ஆயிரம் பெட்ரோலிய கார்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க முடியும்.

ஹைட்ரஜன் லாரிகள் உலகெங்கும் பரவலானால் நிச்சயம் காற்று மற்றும் ஒலி மாசு வெகுவாக குறையும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சுற்றுலாவினால் காற்று மாசுபடுகிறதா?

உலகின் 92 சதவீத மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள காற்று, பலவகை நோய்களை உண்டாக்கக்கூடிய அளவுக்கு கெட்டுள்ளது. இப்படி மாசு ஏற்படுவதற்கு, என்னென்ன தொழில்கள் காரணம் என, ஆராய்ந்து வருகிறது உலக சுகாதார நிறுவனம்.

அண்மையில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, உலக காற்று மாசுபாட்டில்  சதவீதம், சுற்றுலா பயணம் மேற்கொள் பவர்களால் ஏற்படுவதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சுற்றுலா செல்வோர் பயன்படுத்தும் வாகனங்கள் வெளியேற்றும் புகையால் மட்டுமல்ல, அவர்கள் பொருட்களை வாங்குவது, உண்ணும் உணவு போன்றவற்றாலும் காற்றில் நச்சுக்கள் கலக்கின்றன. இந்த ஆய்வு 2009லிருந்து 2013 காலகட்டத்திற்குள் மட்டுமே ஏற்பட்ட பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, எந்தெந்த நாடுகளில் சுற்றுலாவால் காற்று மாசு அதிகமாக ஏற்பட்டது... அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதில் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன.

இந்த நாடுகளில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளால்தான் அதிக அளவுக்கு காற்று மாசு ஏற்படுவதாகவும் உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது.

சூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் ‘வினோத விண்கல்’

சூரிய மண்டலத்தில் கோள்களுக்கு அப்பால் உள்ள கைப்பர் திணை மண்டலத்தில் கார்பன் அதிகம் உள்ள விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நெப்டியூன் கோளுக்கு அப்பால் இருக்கும் பனிக்கட்டி களின் குவியலை வட்டமடித்துக்கொண்டிருக்கும் அந்த விண்கல், அந்தக் கோளில் இருந்து உருவாகவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 300 கிலோமீட்டர் அகலமுள்ள அந்த மாபெரும் விண்கல், சிறிய கோள்களான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ அல்லாத வேறு கோள்களின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, நமது சூரிய மண்டலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.

பூமியில் இருந்து நெடுந்தொலைவில் இருக்கும் அந்த விண்கல்லை ஆராய்ச்சி செய்யவே விஞ்ஞானிகளுக்கு பல ஆண்டுகள் ஆனது.

“முதலில் அந்த விண்கல் குறித்த தரவுகளைப் பெற்ற போது, நாங்கள் தவறான தகவல்களையே பெற்றுள்ளோம் என்று கருதினோம். ஏனெனில் அது கைப்பர் திணை மண்டலத்தில் இருக்கும் ஒரு விண்கல்லைப் போல இல்லை,” என்று அந்த ஆய்வில் பங்கேற்ற குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் டாம் செக்கல் பிபிசியிடம் தெரிவித் தார்.

கோள்களைக் கடந்து இருக்கும் சூரிய மண்டலத்தின் ஒரு பகுதியான கைப்பர் திணைமண்டலத்தில் இருக்கும் விண்கற்கள், தங்களின் மேற்பரப்பில் பனியால் அதிகம் மூடப்பட்டிருக்கும். ஆனால், 2004 ணிகீ 95 என்று பெயரிடப் பட்டுள்ள இந்த விண்கல் கார்பனை அதிக அளவில் கொண்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பில்லோசிலிகேட்ஸ்  என்று கூறப்படும் தாதுக்களையும் கொண்டுள்ளது.

இந்த விண்கல்லில் திரவ வடிவில் நீர் இருந்ததால், அதன் பாறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன என்று கூறும் சக்கல், “2004 ணிகீ95 விண்கல் சூரியனில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. அதன் வெப்ப நிலை மைனஸ் 235 டிகிரி செல்சியஸ். எனவே அதன் மேற்பரப்பில் பனி உறைந்த நிலையில் இருக்கும்.

இதற்கு முன்பு திரவ வடிவில் இருந்தது என்றால், அந்த விண்கல் முன்னொரு காலத்தில் சூரியனுக்கு அருகில் உருவாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதன் வெப்பம் அதிகமாக இருந்தது என்றும் தெரிய வருகிறது,” என்கிறார்.

மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரியான் ஜோன்ஸ், “கைப்பர் திணைமண்டலத்தில் உள்ள ஒரு விண்கல்லில் பில்லோசிலிகேட்ஸ் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை,” என்று கூறு கிறார்.

சூரிய மண்டலம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்கும் கோட்பாடுகளில் ஒன்றான ‘கிராண்ட் டேக் அனுமானம்‘  தொடக்க காலத்தில் சூரிய மண்டலம் கொந்தளிப்பு மிகுந்த பிரதேசமாக இருந்ததாகக் கூறுகிறது. அப்போது வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் சூரியனுக்கு அருகில் நகர்ந்து சென்று, மீண்டும் தற்போது இருக்கும் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைபெற்றன.

இந்த நிகழ்வுகளின்போது, விண்ணில் இருந்த பெரும் அளவிலான வாயுக்களால் உண்டான விண்கற்கள், சூரிய மண்டலத்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்டிருக்கலாம். அதன்பின் அவை அந்த இடங்களிலேயே நிலைகொண் டிருக்கலாம். 2004 ணிகீ 95 விண்கல் அந்த அனுமானதுடன் ஒத்துப்போகிறது.

2004 ணிகீ95 விண்கல் போலவே பல பொருட்கள் கைப்பர் திணைமண்டலத்தில் இருந்தாலும் அவை குறித்த போதிய தகவல்களை திரட்ட முடியவில்லை என்கிறார் செக்கல். நாசாவின் நியூ ஹாரிசான்ஸ்  ஆய்வுக் கலம் ஜனவரி 1, 2019 அன்று அல்டிமா தூல் எனும் விண்கல்லை சென்றடையவுள்ளது.

அது சூரிய மண்டலத்துக்கு வெளியே அமைந்துள்ள விண் பொருட்கள் பற்றிய தரவுகளை அறிய முடியும்.

அண்டார்டிகாவில் 27,200 கோடி டன் அதிகரித்த பனிப்பொழிவு

அண்டார்டிகாவில் தற்போது நிலவும் பனிப்பொழிவு 200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட கடுமையாக இருப்பதாக அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது 1801-1810 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவைவிட 2001-2010 ஆகிய பத்தாண்டுகளில் பெய்த பனிப்பொழிவின் அளவு 27 ஆயிரத்து 200 கோடி டன் (272 பில்லியன் டன்) அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே குழுவினர் நடத்திய அந்த ஆய்வு முடிவுகளை, அதில் பங்குபெற்ற லிஸ் தாமஸ், வியன்னாவில் நடைபெற்ற அய்ரோப்பிய புவி அறிவியல் ஒன்றியத்தின் பொதுச் சபைக் கூட்டத்தில்  சமர்ப்பித்தார்.

அந்தப் பனிக் கண்டத்தில் 79 இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட பனிக்கட்டிகள் மூலம் கடந்த காலங்களில் உண்டான பனிப்பொழிவு குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் கூடுதல் பனி நீரின் அளவு சாக்கடலின் பரப்பளவைப் போல இரு மடங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

நியூசிலாந்து நாட்டின் நிலப்பரப்பு முழுவதையும் ஒரு மீட்டர் ஆழமுள்ள நீரில் மூழ்கடிக்க இந்த நீர் போதுமானது.  பருவநிலையில் வெப்பம் அதிகரிப்பதால் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதாக லிஸ் தாமஸ் கூறுகிறார்.

1992 முதல் கடல் மட்டம் அதிகரித்ததில், அண்டார்டிக் கண்டத்தில் உருகிய பணிகள் 4.3 மில்லி மீட்டர் உயர்வுக்கு பங்கு வகித்திருப்பதாக தங்களின் சிறந்த மதிப்பீடுகள் தெரிவித்துள்ளதாக என்று அவர் கூறுகிறார்.

கூடுதல் பனிப்பொழிவு கடல் மட்டத்தைத் தாழ்த்தி இருந்தாலும், அண்டார்டிகாவில் ஓரங்களில் உண்டாகும் பனி இழப்பைத் தடுக்கப் போதுமானதல்ல என்று அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்


மலேரியா: கண்டுபிடிக்க புதிய வழி

$
0
0

 

மலேரியா கிருமிகள் தொற்றிக்கொண்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை வைத்துக்கூட, அந்த நோய் இருப்பதை கண்டறிவதில் சிரமங்கள் உள்ளன. இந்த நிலையில், எந்த அறிகுறிகளுமே இல்லாமல் மலேரியா கிருமிகளை சுமப்போருக்கு, அந்த நோய் இருப்பதை கண்டுபிடிப்பது மிகவும் சவாலான காரியம்.

இந்த நிலையில் மலேரியாவை சுமப்பவர்களின் உடலிலிருந்து வெளிப்படும் துர்நாற்றம் தனித் தன்மையுடன் இருக்கும் என்பதை மேற்கு கென்யாவில் உள்ள மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால், மருத்துவர்களால் இதை முகர்ந்து பார்த்து துல்லியமாக சொல்லிவிட முடியும் என்று பொருளல்ல. தோல் மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து கேஸ் குரோமடோகிராபி, மாஸ் ஸ்பெக்ட்ரோகிராபி சோதனைகள் மூலம், மலேரியா கிருமித் தொற்று உள்ளோரையும், இல்லாதோரையும் கென்ய மருத்துவர்களால் கண்டறிய முடிந்தது.

மேலும், அறிகுறிகள் உள்ளோர், அறிகுறிகள் இல்லாமலேயே ரத்தத்தில் மலேரிய தொற்றை சுமப்போரையும், மருத்துவர்களால் கண்டறிய முடிந்தது. இந்த கண்டுபிடிப்பு முறைப்படுத்தப்பட்டு பரவலானால், மலேரியா தாக்கியோரை விரைவில் கண்டறிந்து சிகிச்சையை சீக்கிரமே துவங்க முடியும்.

செவ்வாயில் பறக்கப்போகும் ஹெலிகாப்டர்!

மீண்டும் செவ்வாய் மீது கவனம் செலுத்தவிருக்கிறது அமெரிக் காவின் விண்வெளி அமைப்பான ‘நாசா’. ஏற்கனவே அனுப்பியதைப் போல ஊர்தியை அனுப்பாமல், 2020 செவ்வாய் திட்டத்திற்கு, ஹெலிகாப்டர் ஒன்றை நாசா அனுப்பப் போகிறது. ‘மார்ஸ்காப்டர்’ என, செல்லமாக அழைக்கப்படும் இது, தானோட்டி வாகனம்.

மார்ஸ் காப்டர் செவ்வாயில் இறங்கியதும் எப்படி பறக்கும், என்ன மாதிரியான படங்களை எடுத்து அனுப்பும் என்பதை விளக்கும் ஒரு கற்பனை காணொலியையும் நாசா அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்கலன்களிலிருந்தும், செவ்வாயின் தரைப் பகுதியிலிருந்தும் ஏகப்பட்ட படங்களை நாசா எடுத்துள்ளது. என்றாலும் பறவைப் பார்வையில் செவ்வாயின் மேற்பரப்புகளை படம்பிடித்து ஆராய்வதன் மூலம், அக்கிரகத்தைப் பற்றி நமக்கு புதுவிதமான தகவல்கள் கிடைக்கும் என, நாசா நம்புகிறது.

காற்று மாசை கண்டறியும் கருவி: தமிழக மாணவர்கள் சாதனை

நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது.

காற்றானது பல்வேறு வகைகளில் மாசடைகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, பிளாஸ்டிக் எரிப்பதனால் வரும் நச்சு புகை உள்ளிட்ட பலவகைளில் மாசடைகிறது. ஆனால், நாம் அன்றாட பயன்படுத்தும், நம்மிடமிருந்து பிரிக்க முடியாத, அத்தியா வசியமாகிவிட்ட பைக், கார் ஆகியவற்றிலிருந்து வரும் புகை காற்றை பெருமளவு மாசுபடுத்துகிறது.

வாகனப்புகையில் கலந்துள்ள சல்பர் டையாக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சுக்கள் காற்றில் கலந்து நாம் சுவாசிக்கக்கூடிய காற்றை விஷமாக மாற்றுகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசடைந்துள்ளது. அதில் என்னென்ன நச்சுக்கள் கலந்துள்ளன என்பதை நாம் கண்ணால் கண்டதுண்டா என்றால் இல்லையென்று தான் பதில் வரும். இதை மாற்றி யோசித்த திருச்சியை சேர்ந்த பொறியியல் மாணவர்களான முத்துக்கருப்பன், லியோ ஆல்டர்ன்ராஜ், மதன்ராஜ், மனோரஞ்சன் ஆகியோரது கண்டுபிடிப்பு தான் “ஃபால்கான்”.

இந்த கருவி காற்றில் உள்ள நச்சுக்களை படம்பிடித்து அதை அப்படியே கணினியில் காட்டுகிறது.  இந்த ஃபால்கான் கருவியானது கண்காணிப்பு கேமரா மற்றும் இணைய இணைப்பு கொண்ட கணினியுடன் இணைக்கப் பட்டிருக்கும்.

ஃபால்கானை ட்ரோனுடன் இணைத்து பறக்கவிடும் போது பறக்கும் பகுதியில் எவ்வளவு வாகனங்கள் உள் ளன. அவற்றிலிருந்து வெளிவரும் புகையால் காற்றில் என்னென்ன நச்சுக்கள் எவ்வளவு விகிதத்தில் கலந் துள்ளன என்பதை இணைய இணைப்பு கொண்ட கணினியில் நேரிடையாக பார்க்கலாம். மேலும் கணினியின் வாயிலாகவே இந்த கருவியை கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் இந்த ஃபால்கான் கருவியினை கூகுளுடன் இணைத்துக் கொண்டு வாகனம் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் பொருத்தினால் போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்பதோடு, அந்த இடத்தில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசுக்கள், நச்சுக்கள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும். இந்த காற்று மாசு தகவலை அருகிலுள்ள காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையத்திற்கு தெரிவித்து காற்று மாசினையும் சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இந்த ஒரு கருவியின் மூலம் நாம் சிறந்த பயன்களை பெறமுடியும் என்கின்றனர் இதனை வடிவமைத்த மாணவர்கள்.

காற்று மாசு

இது குறித்து பேசிய நான்கு மாணவர்களுள் ஒருவரான முத்துக்கருப்பன் கூறுகையில், “இந்தியாவில் காற்று மாசானது தொழிற்சாலை புகைகளுக்கு அடுத்து நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையினால் தான். அதிலும் குறிப்பாக வாகன நெரிசலின் போது மட்டுமே இந்தியாவில் சுமார் 22 சதவிகித காற்று மாசடைகிறதாக இந்திய காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மொத்தமாக 39 காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் 90 சதவிகித  அதாவது சுமார் 23 நிலையங்கள் மனித சக்தியால் இயங்கக் கூடியவையாக உள்ளன. இங்கு பயன்படுத்தக்கூடிய கண்காணிப்பு கேமராக் களானது சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலானது. இந்த கேமராக்களால் பதிவுகளை சேமிக்க முடியும், நேரலையாக பார்க்க முடியாது. ஆனால் நாங்கள் உருவாக்கியுள்ள ஃபால்கான் கருவியால் தகவல்களை சேமிப்பதோடு நேரலையாக பார்க்கவும் முடியும். இதனை நாங்கள் வெறும் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு உருவாக்கி யுள்ளோம்“, என்கிறார் மகிழ்வுடன்.

இந்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகத்தின் ஆதர வோடு பாம்பே அய்அய்டி நிறுவனமானது அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆலோசனைகளை அளிக்க கோரியது. அதாவது பொறியியல் படிக்கும் மாணவர் களிடமிருந்து உலக பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி அவற்றை காட்சிபடுத்தலாம் என்று கோரியிருந்தது. அதில் ஃபால்கான் கருவியோடு சாரநாதன் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து லியோ ஆல்டர்ன்ராஜ் என்ற மாணவர் கூறுகையில், “இந்த போட்டியில் இந்தியா முழுவதிலு மிருந்து சுமார் 256 கல்லூரிகள் கலந்து கொண்டன. அவற் றில் முதல் சுற்றில் 105 கல்லூரிகள் தேர்வாகின. இக் கல்லூரிகளில் 72 கல்லூரிகள் மட்டுமே தங்களது ஆய்வு ஆலோசனைகளை, கருவிகளின் மாதிரிகளோடு சமர்பித் தன. இந்தியாவை அய்ந்து மண்டலங்களாக பிரித்து 72 கல்லூரிகளுக்குக்கிடையே போட்டிகள் நடைபெற்றது.

தென்மண்டலத்திலிருந்து தேர்வான இரண்டு கல்லூரிகளும் தமிழகத்தை சேர்ந்தவை. அதில் எங்களது கல்லூரியும் ஒன்று. எங்களது ஆய்வுகளையும், ஆலோ சனைகளையும் மாதிரிகளோடு செயல்முறை படுத்திக் காட்டினோம். இந்த போட்டியில் எங்களது தயாரிப்பான ஃபால்கான் முதல் பதினெட்டு இடங்களுக்குள் தேர்வாகியுள்ளது. இதனை மேலும் செம்மைபடுத்தி, நவீனப்படுத்த முயன்று வருகிறோம். எங்களது அனைத்து முயற்சிகளுக்கும் எங்களது பெற்றோர், கல்லூரி நிர்வாகம், முதல்வர், துறைத்தலைவர், பேராசிரியர் என அனைவரும் முழு ஆதரவளித்து, ஊக்கப்படுத்தினர்”, என்றார் அவர்.

மாணவர்களின் சாதனை

இம்மாணவர்களின் வழிகாட்டியாக செயல்பட்டு வரும் மின் மற்றும் மின்னணுவியல் துறை உதவி பேராசிரியை காயத்ரி கூறுகையில், “ஃபால்கான் எனும் இந்தக் கருவியை அவர்களாகவே யோசித்து உருவாக் கியது. அவர்களை சுதந்திரமாக யோசிக்க விட்டதால் பல கல்லூரிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் முதல் பதினெட்டு இடங்களுக்குள் வர முடிந்தது. இதற்கு அவர்களின் முயற்சியே காரணம்.

அடுத்த கட்டமாக இந்தக் கருவிக்கு காப்புரிமை பெரும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம். இந்தக் கருவி எதிர்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். திறமையும், உழைப்பும் நூறு சதவீதம் மாணவர்களுடையதே. நாங்கள் அவர்களை ஊக்கப்படுத்தி, முன்னேறும் வழியை காட்டும் வழிகாட்டி களாக மட்டுமே உள்ளோம்,” என்கிறார் இந்த உதவிப் பேராசிரியை.

மண் மற்றும் தண்ணீர் மீதான விழிப்புணர்வை பெற்ற அளவிற்கு மக்கள் மத்தியில் காற்றை பற்றிய விழிப் புணர்வானது குறைவாகவே உள்ளது. அடுத்த தெருவிற்கு கூட நடக்காமல் வாகனத்தில் செல்வதால் காற்றில் என்ன மாதிரியான நச்சுக்கள் கலந்து மாசடைகிறது என்பதை கண்முன்னே காட்சிப்படுத்தி காட்டுகிறது ஃபால்கான்.

நீரைக் காக்கும் பெண்கள்

$
0
0

 

சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதுவும் கோடை வந்துவிட்டால் தண்ணீரைத் தேடி பெண்கள் அலையும் நிலை துயரமானது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் வேள்வரை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தண்ணீர்த் தட்டுப் பாட்டுக்குத் தீர்வு கண்டிருப்பதோடு அது தொடர்வதற்கான ஏற்பாட்டையும் செய்திருக்கின்றனர்.

கடலோரப் பகுதியான மீமிசலிலிருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது வேள்வரை கிராமம். நிலம், நீர், காற்று என எல்லாமே உப்பாகிப்போன அந்தக் கிராமத்தில் சுவையான குடிநீரைப் பெறுவதற் காகத் தொழுவனாற்றில் உள்ள ஒரு மணல் திட்டை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்த ஆறு குறித்துக் கேட்டால் மணல் கொள்ளையர்களா நீங்கள் எனக் கேட்டு எச்சரிக்கிறார்கள் பெண்கள்.

ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விளையக் காரணமாக இருந்த தொழுவனாற்றை ஒட்டியுள்ள குளங்களில் மழை நீர் தேக்கிவைக்கப் பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் அரசு மூலம் விநியோகிக்கப் பட்ட குடிநீரும் உப்புத் தன்மையின்றி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் மணல் சூறையாடப்பட்டதால் விவசாயம் பொய்த்தது. பிறகு குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது ஆற்றில் மணல் இல்லாததால் முன்புபோல ஊற்று தோண்டவும் வழியில்லை. இதைச் சமாளிக்க அங்கே கொண்டுவரப்பட்ட காவிரி குடிநீர்த் திட்டமும் பயனளிக்கவில்லை. விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருப்பதால் விலை கொடுத்துக் குடிநீர் வாங்கும் சக்தியும் இப்பகுதி மக்களிடம் இல்லை.

மணல் அள்ளியதுதான் குடிநீர்ப் பிரச்சினைக்குக் காரணம் என்று தெரிந்தாலும் பக்கத்துக் கிராம மக்களால், அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சுதாரித்துக்கொண்ட வேள்வரை கிராம மக்களோ ஆற்றில் பனை மரங்களுக்கிடையே சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்கு உள்ள மணல் திட்டைப் பாதுகாத்துவருகிறார்கள். அந்த இடத்தில் பள்ளம் தோண்டி அதில் ஊறும் தண்ணீரை வேள்வரை மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஒன்பது கிராம மக்களும் பயன்படுத்துகின்றனர்.

மழைக் காலத்தில் இலகுவாகத் தண்ணீர் எடுத்துவிடும் மக்கள், வெயில் காலத்தில் சிரமப்படுகிறார்கள். அப்போது ஒரு குடம் எடுக்க அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும். அதனால்தான் குடிநீரை அவர்கள் தங்கம்போல் பாவிக்கிறார்கள்.

மணலே ஆதாரம்

இன்றும் வீட்டில் காதுகுத்து, கல்யாணம் போன்ற விசேஷ நாட் களில் ஆற்றில் பள்ளம் தோண்டித் தண்ணீர் எடுத்து மாட்டுவண்டியில் எடுத்துப் போகிறார்கள். பங்காளி வீட்டுப் பெண்களுக்கான முக்கிய வேலையே அதுதான் என்று சிரித்தபடியே சொல்கிறார்கள் அங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த பெண்கள்.

இந்த மணல் திட்டிலிருந்து மணலை அள்ள பலர் முயன்றுள்ளார்கள். ஊர் மக்கள் இரவும் பகலும் காவல் காத்து அதை முறியடித்துள்ளனர். ஊருக்குள் நுழையும் அந்நியர்களை நன்கு விசாரித்த பிறகே அனுமதிக் கிறார்கள். அந்த மணல் திட்டைப் பாதுகாக்கக் கோரி ஆட்சியரிடம்கூட மனுவும் கொடுத்திருக்கிறார்கள்.

 

உழைப்பால் இணைந்த கைகள்

இரண்டு பக்கங்களிலும் உயர்ந்து நிற்கும் மரங்களின் நிழலால் போர்த்தப்பட்ட சாலையில் சென்றால் பழமையான பாணியில் கட்டப்பட்ட பிரம்மாண்ட நுழைவாயில் வரவேற் கிறது. சென்னை ரயில் பெட்டி இணைப்புத் தொழிற் சாலையின் (அய்சிஎப்) கதவுகள் பலத்த பாதுகாப்புக்கிடையே திறக்கப்படுகின்றன. நெருப்பால் உருவான ஒளி வெள்ளத்தின் நடுவே அமர்ந்து ரயில் பெட்டியின் பாகங்களைப் பற்றவைத்துக் கொண்டிருந்தனர் பாதுகாப்புக் கவசம் அணிந்த ஊழியர்கள். அந்தக் கவசங்களுக்குப் பின்னால் உழைத்துக்கொண்டிருந்தவர்களில் பெண்கள் சிலரும் இருந்தார்கள்.

நீண்ட ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் பெண்களும் ஈடுபட்டுவருவது, முன்னேற்றத்தின் குறியீ டாகவே தெரிகிறது. சென்னை அய்சிஎப்பில் மட்டும்

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். ரயில் பெட்டிகளைத் தயாரிப்பது போன்ற கடினமான பணிகளில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வரு கிறார்கள். இந்நிலையில் 2018 மகளிர்  நாளை முன்னிட்டு அய்சிஎப் தொழிற்சாலையில் பெண்களை மட்டும் கொண்ட மகிளா என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவைச் சேர்ந்த 30 பெண்கள், பயணிகள் ரயிலின் ஒரு முழுப் பெட்டியைத் தயாரித்து இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தக் குழுவுக்குப் பொறுப்பாளராக இருக்கிறார் முதுநிலைப் பகுதிப் பொறியாளர் சாருலதா. சமீபத்தில்தான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாலும் தனக்குக் கொடுக்கப் பட்ட வேலைகளைச் சிறப்பாக முடிப்பதுடன் குழுவினரை ஒன்றிணைத்துச் செயல்படுவதிலும் பாராட்டைப் பெற்றுள் ளார். இந்தக் குழுவில் 27 வயதிலிருந்து 57 வயதுவரையுள்ள முதுநிலைப் பொறியாளர்கள், வெல்டர்கள், ஃபிட்டர்கள், உதவியாளர்கள் எனப் பல்வேறு தரப்பட்ட பெண் ஊழி யர்கள் உள்ளனர். இந்த உற்சாகமான பெண்கள் அணியைச் சந்திக்கச் சென்றபோது ரயில் பெட்டியின் கனமான ஒரு பாகத்தை வெல்டிங் செய்வதற்காகத் தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்தார் 57 வயதாகும் வசந்தா.

வெல்டிங் பிரிவில் வயதில் சீனியரான வசந்தாவை அங்குள்ள அனைத்து ஊழியர்களும் வசந்தாம்மா என்று அன்பாக அழைக்கிறார்கள். கணவர் இறந்த பிறகு அவருடைய வேலை வசந்தாம்மாவுக்குக் கிடைத்துள்ளது. முதலில் ரயில்வே உணவகத்தில் பணியாற்றிவந்த வசந் தாம்மா பின்னர் ரயில் பெட்டிகள் செய்யும் தொழிற் சாலையில் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். கடந்த 2014 முதல் வெல்டராகப் பணியாற்றிவருகிறார்.

நான் உதவியாளரா இருந்தப்ப மத்தவங்க வெல்டிங் செய்யறதை ஆசையா பார்ப்பேன். அப்போதிருந்தே வெல்டிங் மேல ஆர்வம் ஏற்பட்டுப்போச்சு. இந்த வயசுல வீட்டுல இருந்தா சோம்பேறியா ஆகிடுவோம். வேலை செய்யறதுக்கு உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் உழைச்சிட்டே இருக்கணுங்கறதுதான் என் ஆசை என்று சிரித்தபடியே சொல்கிறார் வசந்தா. ஒரு முறை வெல்டிங் செய்துகொண்டிருந்தபோது வசந்தாவின் புடவையில் தீப்பிடித்துக்கொண்டது. இதனால் அவருடைய கால் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. ஆனால், அந்த விபத்து நடந்த இரண்டே மாதத்தில் புல்லட் ரயில்போல் அவர் வேலைக்குத் திரும்பியதை மற்ற ஊழியர்கள் ஆச்சரி யத்துடன் நினைவுகூர்கிறார்கள்.

ஃபிட்டர் முனீஸ்வரி

ஒரு ரயில் பெட்டியில் நூற்றுக்கணக்கான துணை பாகங்கள் ஒன்றிணைக்கப்படும். ஒவ்வொரு பாகத்தையும் கச்சிதமாக இணைப்பதில் பலரது பாராட்டையும் பெற்றவர் ஃபிட்டராகப் பணிபுரிந்துவரும் முனீஸ்வரி. ரயில் பெட்டியைத் தயாரிக்கும் இடத்தில் முனீஸ்வரி இருந்தால் வெல்டரின் பணி சுலபமாகிவிடுமாம். ஃபிட்டராக வேலை செய்வதற்கு முன்பு அய்சிஎப்பில் துப்புரவுப் பணியாளராக இருந்துள்ளார். இங்கு ஃபிட்டராகப் பணியாற்றிவந்த அவருடைய தந்தை மரணமடைந்த நிலையில் அந்த வேலை முனீஸ்வரிக்குக் கிடைத்தது.

இதெல்லாம் ஆண்கள் செய்யும் வேலை, உனக் கெல்லாம் இது எதுக்குன்னு எல்லோரும் சொன்னாங்க. ஆனா எனக்கு இந்த மாதிரி வேலைதான் பிடிச்சிருக்கு. கஷ்டப்பட்டு வேலை செஞ்சாதான் வேலை பார்த்த மாதிரி இருக்கும். அதேபோல் இங்க எங்ககூட வேலை செய்யற ஆண்கள் எல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பாக இருக்காங்க. இங்க இருக்கிற பெண்கள் எல்லாம் தைரியமாக வேலை செய்கிறோம் அதுக்கு ஆண் ஊழியர்களோட பங்கு முக்கியமானது என சக ஊழியர்களைப் பற்றிச் சொல்கிறார் முனீஸ்வரி.

மகிளா குழுவில் மிகவும் இளையவரான கலைவாணி, அய்சிஎப்பில் உள்ள தொழிற்பயிற்சி மய்யத்தில் படித்தவர். ரயில்வே தேர்வில் வெற்றிபெற்று நான்கு ஆண்டுகளாக வெல்டராகப் பணியாற்றிவருகிறார். நான் ஸ்கூல் படிச்ச போது அய்சிஎப் பத்தி எதுவும் தெரியாது. என் அம்மாதான் இதைப் பத்தி எடுத்துச் சொன்னாங்க. அவங்க எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்காங்க. கட்டட வேலைக்குப் போய் எங்களைப் படிக்க வச்சாங்க. அம்மாதான் நிறைய பேர்கிட்ட விசாரிச்சு ரயில்வே தொழிற்பயிற்சி மய்யத்தில் படிக்கறதுக்கு என்னைச் சேர்த்துவிட்டாங்க. நான் இன் னைக்கு இந்த அரசாங்க வேலையில் இருக்கேன்னா, அதுக்கு எங்க அம்மாதான் காரணம் என்கிறார் கலைவாணி.

தற்போது இந்தப் பெண்கள் குழுவினர்  ஜிக்ஷீணீவீஸீ 18 என்ற புதிய தொழில்நுட்ப வசதிகளைக்கொண்ட ரயிலைத் தயாரிப் பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் வெற்றி நிச்சயம் என்பதை அவர்களது செயலில் வெளிப்படும் வேகம் உணர்த்துகிறது.

 

ஈராக்கில் செங்கொடி

பறக்கவிட்ட முதல் பெண்

ஈராக்கின் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு 12 ஆண்டுகள் ஆகின்றன. இந்தச் சூழ்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தாகக் கருதப்படுகிறது. அந்தத் தேர்தலில், ஈராக்கின்  நகரான நஜாபில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சுகாப் அல் கதீப் எனும் பெண் வெற்றி பெற் றுள்ளார்.

அத்துடன், 2008இல் முன்னாள் அமெரக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு எதிராகக் காலணி வீசிய பெண் பத்திரி கையாளர் மும்தாஸ் அல் செய்தி என்பவரும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுள் ளார்.  இசுலாமிய நாட்டில், அதுவும் அமெரிக்காவின் கைப்பாவையாகச் செயல் படும் நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் வேட்பாளர் வெற்றிபெற்றிருப்பது ஆட்சி யாளர்கள் மீதான மக்களின் வெறுப்பையும் எதிர் காலத்தின் மீதான அவர்களின் நம்பிக்கையையும் உணர்த்துகிறது.

காகித பாட்டில்!

$
0
0

 

குடிநீர் பாட்டிலின்றி அமையாது உலகு என்ற நிலைமை வந்து விட்டது. எங்கு பார்த்தாலும் காலி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், தட்டுப்பட ஆரம்பித்துள்ளன.

பல ஆண்டுகளுக்கு மட்கிப் போகாமல், மண்ணுக்கும், நீர் நிலைகளுக்கும் பெரும் கேடுகளை விளைவிக்கக்கூடிய இந்த பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு மாற்றே கிடையாதா? உண்டு என்கிறது சூஸ் வாட்டர். சூஸ் வாட்டர் வடிவமைத்துள்ள குடிநீர் பாட்டில்கள் முழுவதும் காகிதத்தால் ஆனவை.

குடிநீரை இதில் அடைத்து வினியோகித்தாலும், நீரின் தன்மை கெடாது. இதை காலி செய்து குப்பையில் போட்டால், சில மாதங்களில் மட்கி மண்ணாகிவிடும். குப்பை மேடுகளில் சூஸ் வாட்டரின் பாட்டில்கள் சேர்ந்தால், அந்த குப்பைகளில் உள்ள நச்சுத் தன்மையை குறைக்கவும் செய்கிறது என்கின்றனர். இதை வடிவமைத்தவர்கள். கடலில் இந்த பாட்டில்கள் சேர்ந்தாலும் கூட கடல் உயிரிகளுக்கு சத்துள்ளதாக இருக்கும்.

மறுசுழற்சி செய்த காகிதத்தில் தயாராகும் இந்த பாட்டில்களின் உட்பகுதியில், சில தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருள் பூசப்பட்டிருக்கும். எனவே நீரில் காகிதம் ஊறி, பாட்டில் பிய்ந்துவிடாது.

சூஸ் வாட்டர் பாட்டில்களின் விற்பனையில் கிடைக்கும் லாபம் அனைத்தும் வாட்டர் பார் ஆப்ரிக்கா என்ற அமைப்புக்கு நன்கொடையாக அனுப்பப்படும். இன்று குடிநீர் தட்டுப்பாடுள்ள குடிசைப் பகுதிகளுக்கு, பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமே அதிகம் தண்ணீர் வினியோகிக்கப் படுகிறது. அப்பகுதிகளில் ஏற்படும் சுற்றுச் சூழல் கேடுகளை தடுக்க சூஸ் வாட்டரின் காகித பாட்டில்கள் உதவும்.

முப்பரிமாண பிளாஸ்திரி!

முப்பரிமாண அச்சு இயந்திர தொழில் நுட்பத்தை மருத்துவ உலகமும் அரவணைத்துக் கொண்டுள்ளது. ஒரு அண்மை எடுத்துக் காட்டு, பிளாஸ்திரிகள்.

காயம் எந்த வடிவில் இருந் தாலும் சதுரமாகவோ, வட்டமாக வோ, செவ்வக மாகவோ தான் பிளாஸ்திரிகளை போட வேண்டியிருக்கிறது. காயத்தின் வடிவத்திற்கு ஏற்றபடி ஒரு பிளாஸ்திரியை செய்ய முடிந்தால் எப்படியிருக்கும் என்று அமெரிக்காவிலுள்ள டெம்பிள் பல்கலைக் கழக உயிரிப் பொறியியல் விஞ்ஞானிகள் சிந்தித்தனர். இதன் விளைவாக, வளைந்து கொடுக்கக் கூடிய, இலகுவான பிளாஸ்திரிகளை, நோயாளிக்கு புண் உள்ள இடத்திலேயே அச்சிட்டுத் தரும் முப்பரிமாண அச்சு இயந்திரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த முப்பரிமாண பிளாஸ்திரி இயந்திரத்தை இரண்டு அளவுகளில் விஞ்ஞானிகள் வடிவமைத் துள்ளனர்.  ஒன்று பெரியது. இன்னொன்று, கையில் எடுத்தாளும் அளவுக்கு சிறியது.

அடுத்த சில ஆண்டுகளில், முப்பரிமாண பிளாஸ்திரி அச்சியந்திரம் முதலுதவிப் பெட்டிகளில் இடம் பிடிக்கக்கூடும்.

உறுப்புகளுக்கு இனி அழிவில்லை!

ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. உடல் உறுப்புகள் கிடைக் காததால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உடல் உறுப்பு கொடை பற்றிய விழிப்பு உணர்வு பெருகிவந்தாலும்கூட,  சரியான நேரத்தில் பொருத்தமான  நபரிடமிருந்து உறுப்பு தானம் பெற முடியாமல் போவதுதான் இத்தகைய மரணங்களுக்கு காரணம். இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

இப்போதைக்கு `க்ரையோபிரிசர்வேஷன்  முறை மட்டுமே இதற்குத் தீர்வு என்கிறது மருத்துவ உலகம். நம் வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் எப்படிக் குறிப்பிட்ட சில நாள்களுக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்படு கிறதோ, அதே போன்றுதான் இம்முறையும் செயல்படுகிறது. உயிரிப்பொருள்களை மைனஸ் 70 முதல் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்குக் குளிர்விப்பதன் மூலம் அந்தப் பொருள்களில் உள்ள வேதிப்பொருள்களின் செயல்பாடும், செல்களின் செயல்பாடும் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. இதனால் எவ்வித மாற்றத் துக்கும் உள்ளாகாத இந்த உயிரிப்பொருள்களைத் தேவைப்படும் நேரத்தில் தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியும். உடலின் செல்கள், உறுப்புகள் மட்டுமல்லாமல் முழு மனிதனையேகூட இந்த முறையில் எவ்வித மாற்றத்துக்கும் உட்படாமல் பாதுகாக்க முடியும் என்கிறது மருத்துவம்.

இது எப்படி சாத்தியம்? உறைய வைத்தல் மட்டுமே ஒரு பொருளைக் கெடாமல் பாதுகாக்குமா? செல்களை உறையவைக்கும்போது அதற்குள் இருக்கும் தண்ணீர் முதலில் உறைய ஆரம்பிக்கும். இதனால் செல்களுக்குள் இருக்கும் திரவத்தின் அடர்த்தியும் அளவும் குறைவதால் செல்லுக்குள் அழுத்தம் ஏற்பட ஆரம்பிக்கும். செல்லினுள் மூன்றில் இரண்டு பங்கு நீர் முழுவதும் உறைந்த பிறகு ஏற்படும் வெற்றிடத்தால் செல்லின் வடிவம் முழுவதும் உருக்குலையும் அபாயம் உள்ளதே? ஆம் உறையவைக்கப்பட்ட உயிரிப்பொருள்  வேறெந்த பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்பதற் காகத்தான்   பாதுகாப்பான்கள் உதவுகின்றன. சுக் ரோஸ், ஆல்கஹால், கிளைகால், சில அமினோ அமிலங்கள் போன்றவை பாதுகாப்பான்களாக உபயோகப்படுத்தபடுகின்றன. இப்படிப் பதப் படுத்தப்பட்ட உயிரிப்பொருள்கள் திரவ நைட்ர ஜனில் பாதுகாக்கப்படுவதன் மூலம் நீண்ட நாள் களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றன. இப்படிப் பாதுகாக்கப்பட்ட பொருளை மீண்டும் உருகச் செய்வதன் மூலம் இயல்பு நிலைக்குக் கொண்டு வரமுடியும். ஆனால், இப்படிச் செய்யும்போது செல்லுக்குள் வெற்றிடம் ஏற்படுவதால் செல்கள் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்களும் உண்டு.

அண்டார்டிகா பகுதியில் காணப்படும் அண் டார்டிகா பூச்சி ஒன்று மேற்கூறிய பிரச்சினைகள் எல்லாவற்றையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருப்பது அறியப்பட்டிருக்கிறது. தனது வாழ்க்கைச் சுழற்சியில் இந்தப் பூச்சி பல நாள்களை இப்படி உறைநிலையிலே கழிக்கிறது, எவ்வித பாதிப்பும் இல்லாமல்!  இந்தப் பூச்சிக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்? யோசித்தபோதுதான் பாதுகாப்பான்கள், அதாவது கிளிசராலும், குளுகோசும் இயல்பாகவே சுரப்பது கண்டறியப்பட்டது. இந்தப் புரதங்கள் பெரும்பான்மையான நீரை உடலிலிருந்து வெளி யேற்றும் சவ்வாகச் செயல்படுவதுடன், அழுத்தத் தைச் சமம் செய்வதும் கண்டறியப் பட்டிருக்கிறது. நீரின் அளவும், அழுத்தத்தின் அளவும் சமன் செய்யப்படுவதால் மேற்கூறிய பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இந்தப் பூச்சிகளால் சமாளிக்க முடிவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், இது நீரைப் பெருமளவில் வெளி யேற்று வதால் மனிதர்களில் இந்த நடைமுறை சாத்தியப்பட வில்லை. பூச்சியின் உடலில் 70 சதவிகித அளவு நீரை வெளியேற்றினாலும் அதனால் உயிர் வாழ முடியும். மனித செல்களிலிருந்து 15 சதவிகிதத்துக்கும் அதிகமான நீரை வெளியேற்றமுடியாது என்னும் நிலைதான் மேற்கூறிய பிரச்சினைகளைத் தீர்க்க முடியாததாக மாற்றியுள்ளது.

இருப்பினும், க்ரையோபிரிசர்வேஷன்  முறை சில குறிப்பிட்ட வகை செல்களைத் தவிர மற்ற செல்களில் பாதிப்பில்லாமல் செயல்படுத்தக் கூடி யதுதான். இந்த நம்பிக்கையே இம்முறையை நடை முறைச் சாத்தியமாக்கியுள்ளது. மேற்கூறிய பிரச் சினைகளுக்கான தீர்வு எதிர்காலத்தில் கண்டறியப் படும் பட்சத்தில், டைனோசர் அழிந்தது போல எந்த இனமும் எதிர்காலத்தில் அழியாது. ஏனெனில் எல்லா செல்களையும் இந்த க்ரையோபிரிசர்வே ஷன் மூலம் பாதுகாத்து விடலாம்.

செயற்கை மழை

மனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளிலும் அடிப் படையானது தண்ணீர். அன்றாடத் தேவைகளுக்கான உணவுகளை விளைவிக்கவும் அப்படி உணவில்லாமல் இருக்கும்போது பசியைக் கட்டுப்படுத்தவும் கூடத் தண்ணீர்தான் முக்கியத் தேவையாக இருக்கிறது. இப்படி அன்றாட வாழ்க்கையில் பெரிதும் தேவையாக இருக்கும் தண்ணீர் நம்மிடம் போதுமானதாக இருக்கிறதா? நம்முடைய உரிமையான காவிரிக்காக கருநாடகாவிடமும் முல்லைப் பெரியாற்றுக் காக கேரளாவிடமும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறோம். தண்ணீரும் கிடைத்தபாடில்லை. கேப்டவுனில் இருந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்தத் தண்ணீர் பற்றாக்குறை பெரும்பிரச்சினையாகவே இருக்கிறது. அதனைத் தீர்க்க அறிவியல்ரீதியாகப் பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கடல் நீரை குடிநீராக்குதல், அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளை உருக்குவது, மேக விதையூட்டல் மூலமாகச் செயற்கை மழையினைப் பெறுவது எனப் பல முறைகள் சோதனை முயற்சியிலேயே உள்ளன. சில முயற்சிகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் படுகின்றன. அப்படி ஒரு முயற்சியைச் சீனா மிகப்பெரிய அளவில் செயல்படுத்த முனைந்துள்ளது.  உலகிலேயே மிக அதிக பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்கும் முயற்சியில் சீனா நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. இதற்கான அடிப்படை கட்டமைப்பை பெரியளவில் திபெத் பீடபூமியில் அமைத்துள்ளது. திபெத் பீடபூமி உலகிலேயே மிகப்பெரிய பீடபூமி. பத்தாயிரக்கணக்கான எரி உலைகள் திபெத்திய மலைப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய பரப்பளவில் செயற்கை மழையினை உருவாக்குவதன் மூலம் அந்தப் பகுதியின் சராசரி மழைபொழிவை விட 10 பில்லியன் க்யூபிக் மீட்டர் வரை அதிக மழைப்பொழிவைப் பெற முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்தத் திட்டம் 1.6 மில்லியன் சதுர கிலோ மீட்டர் எனும் பரந்த பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. இது ஸ்பெயின் நாட்டினை விட மூன்று மடங்கு அதிகம்.

2016 ஆம் ஆண்டு சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய தியான்ஹே திட்டத்தின் விரிவாக்கமே இவ்வளவு பெரிய முயற்சி. சீனாவில் தியான்ஹே என்பதற்கு வான் நதி என்று பொருள். அதே பெயரிலேயே இந்தத் திட்டத்தை பெரிய அளவில் செயல்படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டம் முழு வெற்றி பெற்றால் சீனாவின் ஒரு ஆண்டிற்கான குடிநீர்த் தேவையில் 7% இதன் மூலம் பூர்த்தியாகிவிடும் என்கின்றனர். அவர்கள் எந்த முறையில் செயற்கை மழையினை உருவாக்கப் போகிறார்கள்? அது எப்படி சாத்தியம் என பலருக்குள்ளும் கேள்விகள் இருக்கும். மேக விதையூட்டல்   எனும் முறையின் மூலம் வானிலையில் மாற்றம்  செய்து மழையைப் பெறுவதுதான் செயற்கை மழை.

இன்னும் விரிவாகச் சொல்லப் போனால் பூமியில் இருக்கும் நீர் ஆவியாகி மேகங்களில் சேமிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பருவக் காலங்களில் மேகங்களில் நீர்கக்கூறுகள் சேமிக்கப்பட்டு குளிர்ந்த காற்றின் மூலமோ அல்லது புற விசையின் மூலம் மழையாகப் பொழி கிறது. இந்த இயற்கையான முறையில் செயற்கையாக சில இரசாயன பொருட்களை மேகங்களில் கலந்து மழை பெய்யும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறார்கள்.

 

 

சரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்!

$
0
0

 

மனித மூளையின் ஆரோக்கியமான  செயல்பாடுகளுக்கு ஒவ் வொரு நாளின் முடிவிலும் போதுமான பரிபூரண தூக்கம் அவசியம். அப்படி தேவையான நேரங்களில் உடலும், மனமும் தூக்கத்துக்காகக் கெஞ்சும்போது,  அதைப் பொருட்படுத்தாமல் அசட்டை செய்து நாம் மேலும், மேலுமென தூக்கத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந் தோமெனில் நமது மூளை ஒரு கட்டத்தில் தன்னைத்தானே சாப்பிடத் தொடங்கி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறைவான தூக்கம் கணிசமான அளவில் மூளையின் முக்கியமான நியூரான் இழப்பிற்கு காரணமாகி விடுகிறது. அது மட்டுமல்ல மூளையின் லட்சக் கணக்கான சினாப்டிக் பரிமாற்றங்களையும் அது தடுத்து விடுகிறது. இப்படியொரு அசம்பாவிதம் நிகழ ஒருமுறை நாம் அனுமதித்து விட்டோம் எனில் மீண்டும் அதை சரி செய்து கொள்வதென்பது முடியவே முடியாத காரியமாம். பிறகு நீங்கள் ஆற, அமர நன்கு தூங்கி ஓய்வெடுத்தாலும் பயனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.  அதோடு தூக்கமின்மை என்பது மனிதர்களிடையே அதிகளவில் அல்சைமர் நோயின் தாக்குதல் மற்றும் நரம்பியல் தொடர்பான குறைபாடுகள் அதிகரிக்கவும் காரணமாக அமைந்து விடுகிறது.

மிகக்குறைவான தூக்கத்தால் ஆஸ்டோசைட்ஸ் பாதிப்பு வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆஸ்ட்ரோசைட்ஸ் பிரச்சினை இருந்தால் அதனால் பாதிப்படைந்தவர்கள் பார்ப்பதற்கு துறுதுறுவென்று சுறுசுறுப்பாக இருப்பவர்களைப் போல தோன்றினாலும் அவர்களது மூளைச் செல் களுக்குள் மிகப்பெரிய ஆபத்து இருப்பது அவர்களுடன் பழகும் மனிதர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இந்தப் பிரச்சினை இருப்பவர்களுக்கு மூளையின் தகவல் பரிமாற்றங்களில் முக்கியப்பங்காற்றும் சினாப்டிக் செல்கள்  குழப்ப மடைந்து மூளையை தனக்குத் தானே ரீமாடல் செய்து கொள்வதால் அவர்கள் அவ்விதமாக இயங்குகிறார்களே தவிர அவர்களுடைய உற்சாகமென்பது அணையப் போகிற விளக்கில் திடீரென அதிக சுடரொளி தெரிவதைப்போன்றது  தானாம்.

மருத்துவர்களால் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தூக்க நேரமான 8 மணி நேரத் தூக்கத்தை நாம் நிராகரித்தோம் என்றால் மிக மோசமாக மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கும் உள்ளார்ந்த மீள் எண்ணங்களால் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படும். இதனால் மனிதர்கள் உள்ளார்ந்த கவலைகள் மற்றும் மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டு சுயவிசாரத்தில் இறங்கும் அபாயம் அதிகரிக்கும்.  இப்படி மனிதர்கள் தமக்குள் சுயவிசாரங்களில் ஆழ்ந்து போகும் போது அவர்களுடைய வாழ்நாள் அளவு தானாகக் குறைந்து விடுகிறது என்பதோடு வாழ்வின் தரமும் குறைந்து விடுகிறது. அதாவது உப்புச் சப்பில்லாமல் வாழ்ந்து மடிய வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். இப்படி தூக்கமின்மை என்ற ஒரு விஷயம் மனிதனை பல்வேறு உடல் மற்றும் மனநலன் சார்ந்த ஆரோக்கியக் கேடுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் எடை; ஆய்வில் புதியத் தகவல்கள் வெளியீடு

சமீபத்தில் பார்சிலோனாவில் செயல்பட்டு வரும் அய்ரோப்பியன் சொஸைட்டி ஆஃப் என்டோகிரைனாலஜி மேற்கொண்ட ஒரு ஆய்வின் மூலம் அனைத்துப் பொருட்களிலும் தேங்கி இருக்கக் கூடிய உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸொ ஜென்கள் மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் செயல்பாடுகளில் தலையிட்டு உடலில் கொழுப்பு தேங்கும் படியான நிலையை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.. இந்த மகத்தான உண்மையை போர்ச்சுகலில் இருக்கும் அவியோரா மற்றும் பெய்ரா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது தொடர் ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் முடிவாகக் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர்.

நமது உணவுப்பழக்கம், வீட்டில் தேங்கும் தூசு தும்புகள், வீட்டைச் சுத்தப்படுத்த நாம் நாள்தோறும் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்கள், சமயலறையில் பயன்படுத்தும் உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அத்தனையிலுமே இந்த ஒபிஸோஜென்களின் தாக்கம் இருக்கிறதாம். இவற்றால் தான் மனிதர்கள் விரைவில் ஒபி ஸிட்டிக்கு அடிமையாகிறார்கள் எனக் கண்டறியப் பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவக் குழுவினர்,  மனித உடலில் ஒபிசோஜென்களின் வளர்ச்சியைத் தவிர்க்க 7 விதமான வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்கள்.

அவற்றில் முதலாவது, இப்படி விரைவில் அசுத்த மடையக் கூடியனவும், உடல் எடையைக் கூட்டத்தக்க ஒபிஸோஜென்களை மனித உடலில் ஊடுருவ அனு மதிப்பதுமான பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை புறக்கணித்து விட்டு  இனிமேல் சுத்தமான, ஃப்ரெஷ் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்ணும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது கூட ஒபிஸோஜென்களைத் தவிர்ப்பதற்கான ஒருவழிமுறை தான் என்கிறார்கள்.

இரண்டாவதாக வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழையும் போது நமது கால்களில் அணிந்திருக்கும் ஷூக்கள் மற்றும் செருப்புகளை சினிமாக்களிலும், மெகா சீரியல்களிலும் காட்டுவதைப் போல வீட்டின் உட்புறம் வரை அணிந்து கொண்டு இருக்காமல் முறையாக வீட்டு முகப்பில் அதற்குரிய இடங்களில் கழற்றி வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாலும் போதும் அனாவசியமாக ஷூக்கள் மற்றும் செருப்புகளின் வாயிலாக வீட்டுக்குள் நுழையவிருக்கும் அசுத்தங்களை நம்மால் தவிர்த்து விடமுடியும் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல மூன்றாவதாக அவர்கள் அளிக்கும் டிப்ஸ்... அது வீடாக இருக்கட்டும் அல்லது அலுவலகமாக இருக்கட்டும் எங்கே என்றாலும் சரி மனிதர்கள் புழங்கக் கூடிய இடங்கள் அனைத்தும் அடிக்கடி சுத்தப்படுத்தப் பட வேண்டும். அது வாக்குவம் கிளீனராலோ அல்லது மனிதக் கரங்களாலோ இருக்கலாம். ஆனால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்கிறார்கள். மரத்தரை என்றால் அவற்றின் மீது போடப்பட்டுள்ள கார்பெட்டுகளை குறிப்பிட்ட இடைவெளியில் வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும் என்கிறது இந்த ஆய்வு முடிவு.

அதோடு, வீட்டில் பருப்பு வகைகள், மளிகைச் சாமான்களை நிரப்பி வைக்க பிளாஸ்டிக் கண்டெயினர்களைத் தவிர்த்து விட்டு அலுமினியம் அல்லது கண்ணாடி ஜார்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம். இதன்மூலம் மளிகைப் பொருட்களை நிரப்பி வைக்க சிந்தெட்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ரசாயனத் தொற்றையும் நம்மால் தவிர்த்து விட முடியும் என்கின்றனர் இந்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுவினர்.

ஆராய்ச்சிக் குழுவின் தலைமை மருத்துவர் ஆனா காத்தரீனா சவுசா இது குறித்து விளக்கமளிக்கையில்,  ஒபிஸோஜென் ஃப்ரீ லைஃப்ஸ்டைலைக் கட்டமைப்பதில் இது ஒரு துவக்க முயற்சி தான். ஆனாலும் இதையொரு நல்ல தொடக்கமென்றே சொல்ல வேண்டும் என்கிறார்.

அதற்கான முதல்படியாக தினந்தோறும் நமது உணவுப் பழக்கம் மற்றும் வீட்டுச் சுத்தம் இரண்டிலும் முக்கியமாகக் கவனம் செலுத்துவோம் என ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். வயது வந்தோர் நாளொன்றுக்கு 50 மில்லிகிராம் தூசுகளை உட்கொள்கிறார்கள்... சிறுவர்கள் மற்றும் குழந்தைகளைப் பற்றிச் சொல்வதென்றால் அவர்களை பெரியவர்களோடு ஒப்பிடும் போது மேலும் இரு மடங்கு தூசுகளை உட்கொள்கிறார்கள். எனவே வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதென்பதை நமது முதல் கடமையாகக் கருத வேண்டும். அதோடு வீட்டின் ஃபர்னிச்சர்களைத் துடைக்க எப்போதும் ரசாயன திரவங் களைப் பயன்படுத்து வதைக் காட்டிலும் பெரும்பாலும் ஈரத்துணிகளை மாத்திரமே பயன்படுத்தப் பழகுங்கள். ஏனெனில் ரசாய னங்கள் கலந்த சுத்தப்படுத்தும் திரவங்கள் ஒபிசோ ஜென்களை தூண்டிப் பெருகச் செய்யும் காரணிகளில் ஒன்று என்பதை எப்போதும் மறந்து விட வேண்டாம்.

பிரிட்டனின் ஒபிசிட்டி விகிதாச்சாரம் கடந்த இருப தாண்டுகளில் இரு மடங்காகப் பெருகியிருக்கிறது.. அங்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வொன்றில் வயது வந் தோரில் 63% பேர் அதிக எடை கொண்டவர்களாகவே கணிக்கப்பட்டுள்ளனர். இந்த விகிதாச்சாரம் 2025இல் மும்மடங்காகவும் வாய்ப்பிருப்பதாகத் தகவல்.

முந்தைய ஆய்வுகளில் கண்டறிந்து தெரிவிக்கப் பட்டுள்ளபடி ஹார்மோன் செயல்பாடுகளைத் தூண்டக் கூடிய இந்த ஒபிசோஜென்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட சிந்தெடிக் பொருட்கள்,  தீயணைப் பான்கள், கொசு மற்றும் பூச்சித் தடுப்பான்கள், சமைய லறைப் பாத்திரங்கள் மற்றும் துணிகள், செயற்கை இனிப்பூட்டிகள் என எல்லாவிதமான வீட்டு உபயோகப் பொருட்களிலும் இருக்கின்றன. நாம் தான் அத்தகைய பொருட்களை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும்.

இந்த ஒபிசோஜென்களின் பாதிப்பு அதிகரிக்கும் முன் அவற்றைத் தவிர்க்கும் படியான ஆரோக்கியமான லைஃப்ஸ்டைல் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது மனிதர்களான நமது கடமை என்கிறார்கள் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்.

50 வயதை கடந்தவர்களின் கவனத்துக்கு!

சிலருக்கு  ஞாபக மறதி என்பது 58 வயதிற்குப் பிறகு சகஜமான ஒன்றுதான். இது பரம்பரையாக வரக் கூடும்.  அதாவது சிறிய அளவில் ஏற்படும் ஞாபக மறதி என்று மருத்துவம் கூறுகிறது.

ஆனால் இது பின்னாளில் இது மன உளைச்சல், அல்லது, நரம்பியல் பிரச்சினைகள் அல்லது அல் ஜெமர் எனப்படும் ஞாபக மறதி பிரச்சினையில் கொண்டு விடலாம். வேலை ஸ்டெரெஸ், குழந்தை களின் படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலை, இதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல், ஆகியவற்றால் இத்த கைய ஞாபக மறதி ஏற்படலாம்.

ஞாபக மறதி அதிகரிக்க பயம் ஏற்பட்டு, அதனால் பதற்றம் அடைவார்கள். பதற்ற நிலையில் இருந்தால் நிச்சயம் நினைவுத் திறன் குறையும். இது ஒரு விஷ வட்டம் போலத் தான். எனவே மறதியைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம், தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் எளிதாக இதை எதிர்க்கொள்ள முடியும்.

ஒலியால் துணி துவைக்கலாம்!

$
0
0

துணி துவைக்கும் இயந்திரம், இடத்தை அடைக்கும். அதிர்வில் அங்கும் இங்கும் நகரும். உருவில் பெரியது என்பதால் போகுமிட மெல்லாம் எடுத்துச் செல்ல முடியாது.

சோனிக் சோக்  என்ற சிறு கருவி, துணி துவைக்கும் இயந்திரம் செய்யும் சகல வேலைகளையும் செய்கிறது. ஆனால், கைக்கு அடக்கமானது.

இது எப்படி துணியை துவைக்கிறது? லேசான சோப்புக் கலந்த நீரில் சோனிக் சோக் கருவியை மூழ்க விட்டு, துணியைப் போட்டு, முடுக்கிவிட்டால், நம் செவி உணரா அதிர்வலைகளை எழுப்புகிறது வினாடிக்கு 50 ஆயிரம் அல்ட்ரா சோனிக் அதிர்வலைகளை எழுப்புவதன் மூலம் துணியில் படிந்துள்ள அழுக்கு, எண்ணெய் கறை, உணவுக் கறை போன்றவை துணியின் நுலிலிருந்து பிரிந்து தண்ணீரில் கரையும். துணியும் சுத்தமாகிவிடும்.

சோனிக் சோக்கில் மின்சாரப் பயன்பாடும் குறைவாக இருப்பதால், விரைவில் வீடுகளில் சோனிக் சோக் இடம் பிடித்துவிடும் என, இதன் கண்டுபிடிப்பாளர்கள் நம்புகின்றனர்.

அய்ரோப்பாவில், ‘ஸ்ட்ரா’வுக்கு வருகிறது தடை!

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான அடுத்த கட்ட தாக்குதலுக்கு தயாராகிறது, அய்ரோப்பிய யூனியன். ஏற்கனவே, 2015இல் பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும், பயன்படுத்தவும் விதித்த தடை, அய்ரோப்பிய மக்களால் வரவேற்கப்பட்டது.

இதனால் கிடைத்த பலன்களை அடுத்து, கடற்கரைகள் மற்றும் இதர நீர் நிலைகளுக்கு அருகே குவியும் 10 பிளாஸ்டிக் பொருட்களை பட்டியலிட்டு, அவற்றை தடை செய்யும் திட்ட வரைவை உறுப்பினர் நாடுகளுக்கு அனுப்பியுள்ளது, அய்ரோப்பிய யூனியன்.

குளிர் பானங்களை உறிஞ்ச உதவும் ஸ்ட்ரா, உணவுத் தட்டுகள், பிளாஸ்டிக் மீன் பிடி கருவிகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தி துக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இந்தத் தடை பொருந்தும்.

உறுப்பினர் நாடுகள் விரைவில் இதற்கு ஒப்புதல் வழங்கியதும், அடுத்த சில மாதங்களில் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலுக்கு வந்துவிடும்.

 

நிலவில் தொழிற்சாலை

பூமியில் கனரக உற்பத்தித் தொழில்களை இனிமேல் செய்யக்கூடாது என, சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் அறிவித் திருக்கிறார் ‘அமேசான்’ அதிபர் ஜெப் பெசோஸ்.

பின் எங்கே உற்பத்தி செய்வது... நிலாவில் தான்! இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தனது ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி அமைப்பின் மூலம், 2020இல் செய்ய விருப்பதாகவும் பெசோஸ் அறிவித்து அசத்தியிருக்கிறார்.

பூமியிலிருந்து மூன்று நாள் பயணத்தில் நிலாவில் தரையிறங்க முடியும். நிலாவின் சூரிய ஒளி எட்டாத இரு துருவங்களில் உறைந்த நிலையில் நீர் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

நிலா மெதுவாக சுழல்வதால் சூரிய ஒளி அதிக நேரம் அந்த துணைக் கோள் மீது விழுகிறது. எனவே சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து, அதன் மூலம் கன ரக தொழிற்சாலைகளை இயங்க வைக்க முடியும் என்பது பெசோசின் திட்டம்.

இதற்காக அமெரிக்காவின் நாசா, அய்ரோப்பாவின், ஈ.எஸ்.ஏ., ஆகிய விண்வெளி அமைப் புகளிடம் கூட்டுச் சேர தயாராக இருப்பதாகவும், அதற்கு அவர்கள் மறுத்தால், ப்ளூ ஆரிஜினே விண்வெளியில் தொழிற் சாலை அமைப் பவர்களுக்கு உதவிகள் செய்யும் நிறுவன மாக மாறி ராக்கெட்டுகள், மூலப் பொருட்களை அனுப்பும் வர்த்தக சேவையை செய்யும் என்றும் பெசோஸ் அறிவித் துள்ளார்.

பூமியைவிட்டு நாம் வெளியேறத்தான் போகிறோம். அடுத்த 100 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் பூமியிலிருந்து நிலாவுக்கு போவதும் வருவதும் சகஜமாகிவிடும் என, ரொம்ப கூலாக தெரிவித்தார் பெசோஸ்.

எச்சரிக்கும் எலக்ட்ரானிக் மூக்கு!

நச்சுப் பொருட்கள், கெட்டுப் போன பொருட்கள், உயிரைப் பறிக்கும் விஷ வாயுக்கள். இவை எல்லா வற்றிற்கும் குறிப்பிட்ட வகை வாடை உண்டு.

அவற்றை கண்ட றிவதற்கென, ஜெர்மனியை சேர்ந்த கார்ல்சுருகே தொழில்நுட்ப நிலையம் ஒரு மின்னணு மூக்கு ஒன்றை உருவாக்கியுள்ளது.

கையடக்கமான இந்த செயற்கை மூக்கில், பல நுண்ணிய உணரிகள் இருக்கின்றன.

இந்த உணரிகளின் மீது, காற்றிலுள்ள வாடைகள் படும்போது, அவற்றின் வேதித் தன்மையை பகுத்தறிந்து, இதே கருவி யில் இருக்கும் சிலிக்கன் சில்லிற்கு தெரிவிக்கின்றன.

ஏராளமான வாடைகளை முன்பே இந்த சில்லில் பதிந்து வைத் திருப்பதால், அவற்றுடன் ஒப்பிட்டு, தீய வாடை ஒரு வினாடி எதனுடையது என்பதை இந்தக் கருவி வினாடியில் சொல்லி விடும்.

செயற்கை மூக்கு தொழில்நுட்பத்தை கார்ல்சுருகே நிலையம் வர்த்தக ரீதியில் விரைவில் வெளியிட இருக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளில் செல்பேசிகளில் மொபைல் போன்களில் இந்தக் கருவியின் சிறிய அவதாரம் இடம் பெறக்கூடும் என இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

டிரோன்கள் மூலம் உணவு விநியோகத்துக்கு அனுமதி

டிரோன்கள் (ஆள் இல்லா விமானம்) மூலம் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு சீனாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணையதள வர்த்தக நிறுவனமான அலிபாபாவுக்கு சொந்தமான உணவு விநியோகிக்கும் இஎல்இ.மீ என்ற நிறுவனத்துக்கு சீனாவின் ஷாங்காய் நகரத்திலுள்ள ஜின்ஷன் தொழிற்பூங்காவிலுள்ள 17 இடங்களில் டிரோன் கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அந்த தொழிற்பூங்காவிலுள்ள 58 சதுர கிலோமீட்டர் பகுதிகளுக்கு டிரோன்கள் மூலம் உணவை விநியோகிப் பதற்கு இதன் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஜின்ஷன் தொழிற்பூங்காவில் செயல்படும் 100 உணவகங்களுகளில் ஆர்டர் அளித்தால், அது டிரோன்கள் மூலம் இருபது நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிடும்.

ஒவ்வொரு பாதையிலும் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டு குறிப்பிட்ட இடங்களுக்கிடையில் மட்டுமே டிரோன்கள் இயக்கப்படும் என்று தி சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்டர்களை பெறும் பணியாளர் உணவகத்துக்கு அருகிலுள்ள டிரோன் பறக்குமிடத்துக்கு சென்று அதை குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு அருகிலுள்ள டிரோன் பறக்குமிடத்துக்கு அனுப்புவார். அங்கிருக்கும் மற்றொரு பணியாளர், உணவை பெற்று வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பார். சாதாரண சாலை வழி உணவு விநியோக செலவை ஒப்பிடும்போது, டிரோன்கள் மூலம் விநியோகம் செய்வது செலவை குறைப்பதாக அந்த இணையதளம் தெரிவித் துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆறு கிலோ வரையிலான உணவுப்பொருட்களை 20 கிலோ மீட்டர் தொலைவு வரை அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகத்தில் கொண்டுசெல்வதை இதே நிறுவனம் முன் னோட்டம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒலியை மிஞ்சும் அதிவேக விமானங்கள்!

$
0
0

 

 

ஒலியின் வேகத்தை மிஞ்சிப் பறக்கும் பயணியர் விமானங்கள் இன்று இல்லை. விரைவில் இந்த நிலை மாறும் என, விமானத் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பன்னாட்டு தனியார் துறை நிறுவனங்கள், சொந்த விமானங்களை வாங்க விரும்புவது, சர்வதேச பயணியர் அதிகரித்து வருவது ஆகிய வற்றை இலக்கு வைத்து, ‘ஏரியோன் சூப்பர்சோனிக், ஸ்பைக் ஏரோஸ் பேஸ், பூம் சூப்பர்சோனிக்‘ போன்ற விமான நிறுவனங்கள், ஒலியை மிஞ்சும் வேகமான ஜெட் விமானங்களை தயாரிக்க ஆரம்பித்

துள்ளன.

ஒலியை மிஞ்சும் வேகத்தை, ‘மாக்‘ என்ற அளவையால் விஞ்ஞானிகள் குறிக்கின்றனர். இதை, ‘சூப்பர்சோனிக்‘ வேகம் என்றும் அழைப்பர்.

அய்ரோப்பிய தயாரிப்பான, ‘கான்கார்டு’ ரக விமானங்கள் மாக் 2 வேகத்தில் (மணிக்கு, 2140 கி.மீ.,) பறந்தன. 1976ல் துவங்கிய கான்கார்டு விமான சேவை, 2003ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

ஜூலை, 2000த்தில் ஏற்பட்ட மோசமான கான்கார்டு விபத்து, அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் ஆகியவற்றை அடுத்து, கான்கார்டு விமானத்திற்கு வரும் பயணியரின் வரத்து வெகுவாகக் குறைந்தது.

பிரிட்டன் மற்றும் பிரான்சின் கூட்டுத் தயாரிப்பான கான்கார்டு, மொத்தமே, 20 விமானங்களைத்தான் உருவாக்கியது. அதில், 14 மட்டுமே வர்த்தக சேவையில் இருந்தன.

மொத்தம், 128 பயணியரை சுமக்கும் திறன் கொண்டது கான்கார்டு. ஆனால், தற்போது தயாரிக்கப்பட்டு வரும் சூப்பர்சோனிக் விமானங்கள் அதைவிட குறைந்த அளவு பயணியரையே சுமக்கும்.

விமான தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி முன்னேற்றங்களால், குறைந்த அளவு பயணியர் பறக்கும் சூப்பர் சோனிக் விமானங்களை லாபகரமாக இயக்க முடியும் என, விமானத்துறை வல்லுநர்கள்

தெரிவித்துள்ளனர்.

காற்றிலிருந்து எரிபொருள்!

வாகனப் புகையால் காற்றில் கலக்கும் கார்பன் - டை - ஆக்சைடை திரும்பவும் எடுத்து, எரிபொருளாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது கார்பன் இன்ஜினியரிங்.

கனடாவை சேர்ந்த இந்நிறுவனம், காற்றை உறிஞ்சி, அதிலுள்ள கார்பன் - டை - ஆக்சைடை பிரித்து, திரவ ஹைட்ரோ கார்பன் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தை வெள்ளோட்டம் பார்த்துள்ளது.

இதுபோன்ற முயற்சிகள் ஏற்கெனவே நடந்துள்ளன. என்றாலும், அவற்றுக்கு அதிகமாக செலவு பிடிக்கும் என்பதால் பிரபலமாகவில்லை.

காற்றிலிருந்து கரியமில வாயுவை எடுத்து ஒரு மெட்ரிக் டன் அளவுக்கு எரிபொருளை உருவாக்க, 67 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது.

ஆனால், கார்பன் இன்ஜினியரிங் உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் மூலம், 6,700 ரூபாய்க்கே ஒரு மெட்ரிக் டன் எரிபொருளை உருவாக்க முடியும் என, அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவழ்ந்து செல்லும் காற்றை, விசிறிகள் மூலம் இழுத்து, ஒரு ஆலையில் செலுத்தி, கார்பன் - டை - ஆக்சைடு வாயுவை திரவ ஹைட்ராக்சைடு மூலம் பிரித்தெடுத்து, கார்பனேட் வில்லைகளாக மாற்றுகின்றனர் கார்பன் இன்ஜினியரிங்கின் விஞ்ஞானிகள்.

பின் திட வடிவத்திலுள்ள கார்பனேட்டை சூடாக்கி, மீண்டும் சுத்தமான கார்பன் - டை - ஆக்சைடாக மாற்றுகின்றனர்.

அடுத்து அந்த வாயுவை வைத்து திரவ வடிவிலான செயற்கை ஹைட்ரோகார்பனை உற்பத்தி செய்கின்றனர். இதை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தலாம். அதன் மூலம் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாது.

கார்பன் இன்ஜினியரிங் தனது பிரத்யேக தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 2015ல் ஒரு மாதிரி ஆலையை துவங்கியது. அது குறைந்த செலவில் எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட பின், ‘ஜூல்’ என்ற எரிசக்தி ஆய்விதழில் முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது.

காற்று மாசை வைத்தே, மாசில்லாத எரிபொருளை தயாரிக்கும் இந்த தொழில்நுட்பம் வெற்றி பெறுமா என்பது இனிதான் தெரியும்.

சீனாவின் புதிய விண்வெளி நிலையம்

அண்மையில் தான் சீனாவின் விண்வெளி நிலைய மான டியான் கோங்- 1 கடலில் விழுந்தது.

இந்த கரும்புள்ளியை துடைக்க, சீனா, 2019இல் ஒரு விண் நிலையத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. 2022 முதல் இயங்கத்துவங்கும் இந்த நிலையத்தில் ஆய்வுகள் செய்ய, பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத் திருக்கிறது சீனா.

அய்.நா., சபைக்கான சீன துதர் ஷி ஜோங்ஜுன் இதற் கான அழைப்பை விடுத்திருக்கிறார். ‘சீன விண்வெளி நிலையம் சீனாவுடையது மட்டுமல்ல, அது இந்த உலகிற்கானது. இதில் சிறிய நாடு முதல், பெரிய நாடு வரை எந்த நாடும் பங்கேற்கலாம்‘ என, அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையத்தில் என்ன விதமான ஆய்வுகளை செய்ய விருப்பம் எனத் தெரிவித்து அரசுகளும், தனியார் அமைப்பு களும் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் அறிவித்திருக்கிறார். விண் ணப்பங்களுக்கான கடைசி தேதி ஆகஸ்ட், 31.

இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ, பல ஆண்டுகளாக வெளிநாட்டு அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கு, செயற்கைக் கோள்களை ஏவி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கூகுள்’ நிறுவனரின் பறக்கும் கார் திட்டம்!

கடந்த ஆண்டு கூகுளின் நிறுவனர்களுள் ஒருவரான லாரி பேஜ், தன் ரகசியத் திட்டமான பறக்கும் காரின் மாதிரி ஒன்றை அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

‘கிட்டி ஹாக்‘ என்ற அவரது சொந்த நிறுவனம் உரு வாக்கிய, ‘பிளையர்’ விமானம் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாகத் தான் இருந்தது. ஆனால், அதை மேம்படுத்தி அண்மையில் வெள்ளோட்டம் பார்த்த பிளையர் விமானம் பலரையும் கவர்ந்திருக்கிறது.

ஒரு நபருக்கான இந்த விமானம் மின்சார பேட்டரி களால் இயங்குகிறது. எனவே அதிக சத்தம் போடாது. என்றாலும் அதிக நேரம், அதிக உயரம் பறக்கவும் முடியாது.  காரணம் அவ்வளவு சக்திவாய்ந்த மின்கலன்கள் இன்னும் சந்தைக்கு வரவில்லை. தவிர, சிவில் விமான சட்டங்கள் இத்தகைய குட்டி விமானங் களுக்கு அனுமதி அளிக்க தயங்குகின்றன.

இப்போதைக்கு மேம்படுத்தப்பட்ட பிளையரால் 10 அடி உயரத்தில், 20 நிமிடங்கள் வரை தான் பறக்க முடியும்.

பிளையரின் எடை, 114 கிலோ. மின்சார மோட்டார்களால் இயங்கும், 10 விசிறிகளைக் கொண்டு பறக்கும் பிளை யருக்கு தற்போது நீர்ப் பரப்பின் மேல் பறக்க மட்டுமே அமெரிக்க அரசு அனுமதித்திருப்பதால், தண்ணீரின் மேல் மிதப்பதற்கு இரு மிதவைகள் பொருத்தப் பட்டிருக்கின்றன.  ‘யூடியூப்’ நட்சத்திரமான கேசி நெய்ஸ்டாட் என்பவரை அழைத்து, இரண்டு மணி நேர பயிற்சி தந்து, பிளையரை பறக்கவைத்து விளம்பரம் செய்திருக்கிறது கிட்டி ஹாக்.

இப்போதைக்கு இது மாதிரி விமானம் தான். இது எப் போது விற்பனைக்கு வரும், என்ன விலை என, லாபி பேஜ் அறிவிக்கவில்லை. ஆனாலும், பலர் இந்த விமா னத்தை வாங்க, ‘புக்கிங்’ செய்யத் துவங்கிவிட்டனர். தற்போதே உலகெங்கும், 19க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் பறக்கும் கார் திட்டத்தை கையிலெடுத்துள்ளனர்.

விமான ஜாம்பவான்களான போயிங், ஏர்பஸ், வாடகை கார் நிறுவனமான உபேர், சீனாவை சேர்ந்த இ-ஹாங் என்று பிரபலமான நிறுவனங்களோடு கூகுளின் நிறுவனர், சொந்தமாக நடத்தும் கிட்டி ஹாக்கையும் சேர்த்துப் பாருங் கள், பறக்கும் கார் கனவு, அடுத்த சில ஆண்டுகளில் நன வாகி விடும் என, வல்லுநர்கள் கணிக்க ஆரம்பித்துவிட்டனர்.

தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானங்கள்

$
0
0

 

12.04.1931 - குடிஅரசிலிருந்து...

பகத்சிங்

1. (ஏ) பொது உடைமை, சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக தனது உயிரை மனப்பூர்த்தியாக தியாகம் செய்த உண்மை வீரர் பகத்சிங்கை இம்மகாநாடு மனமாரப் பாராட்டுகின்றது.

(பி)பகத்சிங் தூக்கிலிடப்பட்டதின் மூலம் உண்மையும் வீரமும் பொருந்திய வாலிபர்களின் உள்ளத்தை சமதர்ம தத்துவமும், பொது உடைமைக் கொள்கையும் கவர்ந்து கொள்ளும் படி ஏற்பட்டு விட்டதால் அச்சம்பவத்தை இம்மகாநாடு ஆர்வத் தோடு வரவேற்கின்றது.

(சி) இந்திய வாலிபர்கள் இது காரணமாய் தங்களுக்குள் பொங்கித் ததும்பும் ஆர்வத்தை அறிவும், சாந்தமும், பொருந்திய வழிகளில் தேச சேவைக்கு உபயோகப் படுத்தவேண்டும் என்று வற்புறுத்துகின்றது.

விடுதலை சுதந்திரம்

2. இந்திய நாடு உண்மையான விடுதலை பெறுவற்கு வருணாசிரம மத வித்தியாசங்களை அடியோடு அழித்து கடவுள், மோட்சம், நரகம், கர்ம பலன், மறுபிறப்பு, தலைவிதி முதலிய விஷயங்களில் இருந்துவரும் மூட நம்பிக்கைகளை ஒழித்து தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் உண்டாக்கும் கொள்கைகளை மக்களுக்குப் புகட்டி பூமிக்கு உடையவன் - உழுகின்றவன், முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், மேல்ஜாதி - கீழ்ஜாதி என்பவைகளான பேதங்களை அகற்றி தொழில் முறைகளிலும், சமுகத் துறைகளிலும், அரசியல்களிலும் சகலரும் சம சுதந்திரத்துடன் ஈடுபட சம அவகாசமும், சம அந்தஸ்தும், சம ஊதியமும் கிடைக்கக்கூடிய முறையில் நமது சமுகத்தைத் திருத்தி அமைத்துக் கொள்ளவேண்டியது அவசியம் என்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

பெண் உரிமை

3.  (ஏ) விவாகம், விவாகரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம், தொழில், அரசியல் முதலிய துறைகளில் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டு மென்பதாக இம்மகாநாடு திட்டமாய்க் கருதுகின்றது. (பி) நமது பெண்மக்கள் வாழ்விற்கு அவசியமான வகையில் உடை களையும், நகைகளையும் சுருக்கிக் கொள்ளவேண்டும் எனவும், தேகசக்திக்கும் செல்வநிலைக்கும் தகுந்த அளவில் குழந்தை களைப் பெறுவதற்காகக் கர்ப்பத்தடை முறைகளை அவசியம் கையாள வேண்டும் என்றும் இம்மாகாநாடு தீர்மானிக்கின்றது.

நம்பிக்கையில்லை

4. 1. மகாத்மா காந்தியவர்கள் மதத்தின் பேரால் நடைபெறுகின்ற மூடநம்பிக்கை களையும், மூடப்பழக்க வழக்கங்களையும் கையாளுவதினாலும், 2. தனது செய்கை களுக்கும், பேச்சுகளுக்கும் கடவுளே காரணம் என்பதாக அடிக்கடி சொல்லி வருவதால்  ஜனங்களின் தன்னம்பிக்கையும், தன் முயற்சியும் பொறுப்புமற்றுப் போவதாலும், 3. வருணாசிரமம், இராமராஜ்யம், மனுஸ்மிருதி, தர்மம் முதலிய பழைய கொடுங் கோன்மையான ஏற்பாடுகளை மறுபடியும் திருப்பிக் கொண்டுவர முயற்சி செய்து வருவதாலும் 4. நமது நாட்டில் இயந்திர வளர்ச்சியைத் தடைசெய்து வருவதாலும், 5. சமதர்மகொள்கைகளுக்கு விரோதமாய் இருந்து வருவதாலும் அவரிடத்தில் நம்பிக்கை இல்லையென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.

நாடார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் அருப்புக்கோட்டை போலீஸ் மாற்றப்படுமா?

29-03-1931 - குடிஅரசிலிருந்து...

இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார்கள் தெருவில் நடக்காமல் தடைப்படுத்தப்பட்டதும், அதனால் ஒரு நாடார் இளைஞர் கொலை செய்யப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும்.  மற்றும் அவர்கள் சில தெருக்களில் உரிமை கொண்டாட முடியாமல் சர்க்கார் 144 போட்டுத் தடுத்து உபத்திரப்படுத்தினதும் யாவரும் அறிந்ததாகும்.  இதற்கு எவ்வித கேள்வியில்லாமல் போகும்படி பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் செய்து வரும் நடவடிக்கைகளும் சர்க்கார் வரை தெரியப்படுத்தியும் கவனிக்கப்படாமல் இருந்து வருகின்றது.  போதாக்குறைக்குத் திருநெல்வேலி ஜில்லா சிந்தாமணி யென்னும்  கிராமத்தில் நாடார்கள் தங்கள் சுவாமியை ஊர்வல மாய் எடுத்துக் செல்ல வொட்டாமல் கலகம் செய்து பெரிய அடிதடி கலகங்கள் நடந்து அதன் பயனாய் சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டியதாகிப் பலர் கொல்லப்பட்டும், பலர் காயப்பட்டும் இருக்கின்றார்கள்.

சர்க்காரார் இவ்விஷயத்தில் காட்டி வரும் கவனம் மிகவும் கவலையற்றதாகவும் மக்களுக்குள் எப்படி ஒருவித கலவரம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவதாகவும், இருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.  பார்ப்பனியப் போலீசும் இந்த நிலைமைக்கு மெத்த உதவி செய்வதாகவே செய்திகள் கிடைத்து வருகின்றன.  போலீஸ் இலாகாவும், சட்ட இலாகாவும் 30 நாள் கணக்கெண்ணுவதும் அது முடிந்ததும் 5333-5-4 கணக்கு எண்ணுவதுமான வேலையிலேயே கவனம் செலுத்துவதாயிருக்கின்றதேயொழிய மக்கள் இப்படி உதை போட்டுக்கொண்டு கொல்லப்படுவதற்கு ஒரு பரிகாரம் செய்வதற்குக் கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை என்று வருத்தத்துடன் எழுதுகின்றோம்.

இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றியும் எழுதாமலிருக்க மனமில்லை. அதாவது இந்த மாதிரியான கலகங்கள் பெரிதும் சுவாமியைத் தூக்கிக் கொண்டு செல்லு வதிலும் பஜனை பாடிக்கொண்டு செல்லுவதிலுமே ஏற்படுவ தாய் இருப்பதால் இந்தப் பாழும் சாமி சங்கதியை விட்டுத் தொலைக்கக் கூடாதா? என்று நாடார் சமுகத்தையும் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

புதியமுறை சீர்திருத்த மணம்

31.05.1931 - குடிஅரசிலிருந்து...

சீர்திருத்தத் திருமணம் என்றும், சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப் படுபவைகள் எல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்பந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமையில்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத, இயற்கைத் தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங் களேயாகும்.  சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அநேகவித சீர்திருத்த மணங்கள் நடைபெற்றிருக்கின்றன.

அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத அர்த்தமற்ற, அவசியமற்ற சடங்குகள் இல்லாத புரோகிதமேயில்லாத, ஒரே நாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண் செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங்களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணைவர் களாய் ஏற்றுக் கொண்ட மணங்களும், மனைவியைப் புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும் மற்றும் கிறிஸ்துவ மதத்தில்  ஒரு மனைவி ஏற்கெனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் பொட்டுகளை அறுத்துவிட்டுச் செய்து கொண்ட மணமும் இப்படியாகப் பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன.

ஆனால், இந்தத் திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களையெல்லாம்விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத்

தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய மணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கெனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத் திலும் இருந்து கொண்டிருக்கிறார்.

அப்படியிருக்க இந்தம்மைக்கு இப்போது முதல் புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண் டாவதாகச் செய்துகொள்ளும் சீர்திருத்தத் திருமணமாகும்.  இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும்.  பெண்ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய  பந்துக்களுடையவும் முழு சம்மதத்துடனேயே இது நடைபெறுகின்றது.

பெண்ணின் தகப்பனார் இப்பொழுது 500,600ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தி யோகத்தில் இருப்பதாக அறிகிறேன்.

பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டிருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல் யாணச் செலவு, மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது.

பெண்ணின் சிறிய தகப்பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார்.  அதனால்தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்தத் திரு மணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன்.  மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.  அவர் சைவ வேளாளர் வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவற்றையெல்லாம்  அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமத பேதமில்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர்.

பெண் சிறீவைணவ என்று சொல்லப்படுவதும் சாத்தாதார்  என்று சொல்லப்படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர்.  அவற்றை யெல்லாம் அடியோடு விட்டு விட்டதுடன், இத்திருமணவிஷயத்தில் அப்பெண்ணுக்கு வேறு யார் யாரோ எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பெரும் பழிகள் கூறி, அதன் புத்தியைக் கலைத்தும் அதற்கெல்லாம் முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத் திற்கு இசைந்தனர்.

ஆகவே, இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாக பிரச்சாரம் செய்கின்றோமோ அவைகளில் முக்கியமானதொன்றென்றும், ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை ஏன் உலகத்தையே சமதர்ம மக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கியக் கருவியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

(24.5.1931இல் நடைபெற்ற திருவாளர்  பொன்னம்பலனார் - சுலோசனா மணவிழாவில் ஆற்றிய உரை)

 


உலகின் மிகப் பெரிய உலோக, ‘3டி பிரிடர்’

$
0
0

 

முப்பரிமாண அச்சுஇயந்திரங்களை குட்டியாக மேஜை மேல் வைத்துப் பார்த்தவர்கள், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ‘டைடோமிக்‘  உருவாக்கியுள்ள, 3டி பிரின்டரைப் பார்த்தால் அசந்துவிடுவர். சரியாக, 9 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்ட டைடோமிக், ஒரு பெரிய அறையையே அடைத்துக்கொள்கிறது.

எதற்கு இத்தனை பெரிய, 3டி பிரின்டர்? இது பல வகை உலோ கங்கள், அலோகங்களைக் கொண்டு புதிய பொருட்களை உருவாக்குவதற்கென்றே படைக்கப்பட்டது என்கின்றனர், டைடோமிக் அதிகாரிகள்.

இதற்கு முன்பே, உலோகத்தால் புதிய பொருட்களை வடிவமைக்கும் முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் வந்துவிட்டனவே? ஆம், இருந்தாலும், இது கைனடிக் பியூசன் முறையில் உலோகத் துகளை படலம் படலமாக அடுக்குவதன் மூலம், முப்பரிமாணத்தில் உலோகப் பொருளை தயாரிக்கிறது. 40.5 கன சென்டிமீட்டர் அளவுக்கு உள்ள பெரிய பொருட்களை இந்த இயந்திரத்தில் வைத்து தயாரிக்க முடியும்.

இதனால் இது தான், இன்றைய தேதிக்கு உலகின் மிகப் பெரிய உலோக, 3டி பிரின்டர் என்கிறது டைடோமிக்கின் இணைய தளம்.

டைடோமிக், மணிக்கு, 45 கிலோ வரை உலோகத் துகள்களை ஒன்றன்மேல் ஒன்றாக ‘டெபாசிட்’ செய்யும் வேகம் கொண்டது. உலோக முப்பரிமாண அச்சு இயந்திரங்களிலேயே இதுதான் மிகவும் வேகமானது, பெரியது என்கிறது டைடோமிக்கின் இணைய தளம்.

வயிறுக்கும் மூளைக்கும் நேரடித் தொடர்பு!

வயிறு என்பது இரண் டாவது மூளை என்பர். பசி, போதிய அளவு உண்டுவிட்ட திருப்தி, போன்ற உணர்வுகளை, வயிற்றிலிருந்து நேரடியாக மூளைக்கு கொண்டு செல்லும் நரப்பு அமைப்பு இருப்பதை, விஞ்ஞானிகள் பல காலமாக அறிவர். இருந்தாலும், புதிய வற்றை கற்றுக்கொள்வது, நினைவாற்றல் போன்றவற்றுக்கும், வயிற் றுக்கும், மூளைக்கும் உள்ள தகவல் தொடர்புக்கும் ஏதேனும் உறவு உண்டா என, அமெரிக்காவின் தென் கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

எலிகளின் வயிற்றிலிருந்து மூளைக்கு தகவல் அனுப்பும் நரம்புகளில், 80 சதவீதத்தை தடுத்து நிறுத்தி சோதித்தனர் விஞ்ஞானிகள். இதனால், எலிகளால் உணவு எங்கே கிடைக்கிறது, என்பது போன்ற இடம் சார்ந்த தகவல்களை, நினைவில் கொள்ள முடியாமல் போனது பரிசோதனையில் தெரியவந்தது. ஆதி மனிதர்கள் உணவு தேடி அலைந்தபோது, எங்கே நல்ல உணவு கிடைத்தது என்பதை நினைவில் கொள்ளவும், மீண்டும் அந்த இடத்தை தேடி அறியவும், ‘வயிறு-மூளை’ நேரடி தொடர்பு உதவியிருக்கலாம் என, ஆய்வின் முடிவில் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

பனி உருகுவதால் உயரும் கடல் மட்டம்!

பூமி சூடேற்றத்தால் துருவங்களில் பனிப் பாறைகள் உருகுகின்றன என்பது, பள்ளிச் சிறார்களுக்குக் கூடத் தெரியும். ஆனால், எந்த அளவுக்கு பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன? அண்மையில் சர்வதேச அளவில், 40 அமைப்புகளைச் சேர்ந்த, 84 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவுகள், கவலை தரும் புள்ளி விவரங்களை தந்துள்ளன.

‘பனிப் பாறை எடைச் சமநிலை குறித்த விரிவான ஒப்பாய்வு’ என்ற அந்த ஆய்வின்படி, அன்டார்டி காவில் தற்போது ஆண்டுக்கு, 159 பில்லியன் டன்கள் அளவுக்கு பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன.

இதன்படி உறைந்த கண்டமான அன்டார்டிகா விலிருந்து கடந்த, 25 ஆண்டுகளில் மட்டும், 2.7 ட்ரில்லியன் டன் பனிப் பாறைகள் உருகி கடலில் கலந்துள்ளன. இதனால், உலக அளவில் கடலின் மட்டம், 7.6 மில்லி மீட்டர் உயர்ந்திருக்கிறது.

உலகெங்குமிருந்து, 24 செயற்கைக்கோள்கள், துருவப் பகுதிகளை தொடர்ந்து எடுத்த புகைப் படங்கள், விஞ்ஞானிகள் குழு நேரடியாக துருவப் பகுதிகளில் செய்த கள ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.

பனிப் பாறை உருகி கடலில் கலக்கும் வேகம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என, விஞ்ஞானிகள் எச்சரித்திருப்பது, சுற்றுச் சூழல் ஆர்வலர் களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.

கூகுளின் புதிய, ‘குவான்டம்‘ சில்லு!

‘மூர்’ விதிப்படி , சிலிக்கன் சில்லுகளின் கணித் திறனுக்கான எல்லை நெருங்கி விட்டது. அடுத்து அந்த எல்லைகளை தகர்க்க குவான்டம் சில்லுகள் உதவக்கூடும் என, பல காலமாக பேசி வந்தனர் கணினி வல்லுனர்கள்.

பேச்சோடு நிற்காமல், அய்.பி.எம்., இன்டெல் போன்றவை, குவான்டம் சில்லுகளை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தின. இவை வர்த்தக ரீதியில் இன்னும் உற்பத்தி செய்யப்படவில்லை. என்றாலும், குவான்டம் சில்லு சாத்தியம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அண்மையில கூகுள், ‘பிரிஸ்டில்கோன்’ என்ற குவான்டம் சில்லினை சோதனைக் கூடத்தில் உருவாக்கியிருக்கிறது.

சிலிக்கன் சில்லுகள் தகவல்களை, 0 மற்றும், 1 ஆகிய நிலைகளை வைத்தே குறிக்கின்றன. இதை ‘பிட்’ என்பர். ஆனால் குவான்டம் சில்லுகளில் ‘கியூபிட்’ முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, 00, 01, 10, 11 ஆகிய நான்கு குறியீடுகள் இருக்கும்.

இதனால், இந்த சில்லுகள் தகவல்களை அலசி அதிவிரைவில் விடை சொல்லும் திறன் படைத் தவையாக இருக்கின்றன.

இன்று உலகின் முன்னணி அதிதிறன் கணினி களைவிட இவை வேகமும், தகவல் அலசும் திறனும் கொண்டவை. பிரிஸ்டில் கோன் சில்லின் தகவல் அலசும் திறன், 72 கியூபிட்.

ஜனவரியில் இன்டெல் உருவாக்கிய ‘டேங்கில் லேக்‘ என்ற குவான்டம் சில்லின் திறன், 49 கியூபிட்கள்தான். சந்தைக்கு வரும் முன்பே குவான்டம் சில்லுப் பந்தயம் துவங்கி விட்டது.

போகுமிடமெல்லாம்

தானே நகர்ந்து வரும் சூட்கேஸ்!

கொஞ்சம் செயற்கை நுண்ணறிவு, சக்திவாய்ந்த சில்லு, இரண்டு மோட்டார் சக்கரங்கள். இவற்றையெல்லாம் சேர்த்தால் கிடைப்பதுதான், ‘ஓவிஸ்’ சீனாவைச் சேர்ந்த, பார்வர்டு எக்ஸ் ரோபாடிக்ஸ் தயாரித்துள்ள ஓவிஸ், ஒரு புத்திசாலி சூட்கேஸ்!

அது தன் உரிமையாளரை அடையாளம் கண்டுகொள்ளும் கேமிரா வசதியுடன் இருப்பதால், வேறு யாரும் அதை ‘கையாள’ முடியாது. உரிமையாளர் எங்கு சென்றாலும், அவரது வலது பக்கமாக கூடவே வரும் நம்பிக்கை கொண்டது ஓவிஸ்.

படிகள், தடைகள் வந்தாலோ, பேட்டரி தீர்ந்து போனாலோ, உரிமையாளர் அதன் கைப்பிடியை பிடித்து இழுத்துச் செல்லலாம். ஓவிஸ் தானாக உடன் வரும்போது, யாரும் எதிரே வந்து மோதாமல், கவனமாக அதுவே நகர்ந்து செல்லும்.

ஓவிசைவிட்டு உரிமையாளர், 2 மீட்டர் தொலைவைத் தாண்டிப் போனால், இதன் செயலி, உரிமையாளர் மணிக்கட்டில் கட்டியிருக்கும் கருவிக்கு செய்தி அனுப்பும். அட, இதில் துணிமணி, பணம், மடிக்கணினி போன்றவற்றையும் திணித்துக்கொள்ளலாம். விலை: 55 ஆயிரம் ரூபாய். சூட்கேசுடன் குடித்தனம் நடத்தும் சர்வதேச பயணியருக்கு இது உற்ற துணை!

பூமி சுற்றும் வேகம் குறைகிறதா?

இன்று ஒரு நாளின் கால அளவு, 24 மணி நேரம். ஆனால், பல ஆயிரம் உயிர்கள் பல்கிப் பெருகாத ஆதி காலத்தில் அப்படி இல்லை என்கின்றனர், ஸ்டீபன் மேயர்ஸ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு.  இந்தக் குழுவினர், ‘புரசீடிங்ஸ் ஆப் தி நேஷனல் அகாடமி ஆப் சயின்சஸ்’ இதழில் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின்படி, 140 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் ஒரு நாளின் கால அளவு வெறும், 18 மணி, 41 நிமிடங்களாகத்தான் இருந்தது.

பிறகு, ஒவ்வொரு ஆண்டும், ஒரு நாளின் நீளம் என்பது, ஒரு நொடியில், 74 பகுதி அளவுக்கு கூடிக்கொண்டே வந்துள்ளது. அப்படியே கூடிக்கொண்டும் இருக்கிறது. ஏனெனில் பூமி சுழலும் வேகம், மெதுவாக, ஆனால் உறுதியாக குறைந்து வருகிறது.

விண்ணியலில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய கருத்துகள் மற்றும் புவி வேதியியல் முறைகளைப் பயன்படுத்தி இந்த கணக்கைப் போட்டிருக்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வில் குறிப்பிடப் பட்டுள்ள இன்னொரு ஆச்சரியம் நிலாவைப் பற்றியது.

பூமியைச் சுற்றிவரும் ஒரே துணைக்கோளான சந்திரன், கடந்த, 140 கோடி ஆண்டுகளில், பூமியிலிருந்து, 44 ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு விலகிப் போயிருக்கிறது. இந்த விலகல், மேலும் தொடர்வதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

விவசாயிகளும் மின்சாரம் விளைவிக்கலாம்!

$
0
0

 

எதிர்காலத்தில் விவசாயிகள் மின் உற்பத்தியாளர்களாகப் போகின்றனர். அதற்கு தடையாக இருப்பது நிழல். சூரிய மின் பலகைகளை விளை நிலத்தில் வைத்தால், விவசாய நிலங்களும் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

ஆனால், மின் பலகைகளுக்கு கீழே நிழல் விழும். அது பயிர்களுக்கு எதிரி. இந்த சிக்கலை தவிர்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது சீனாவிலுள்ள யு.எஸ்.டி.சி., தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் குழு.

சூரிய மின்பலகைகளுக்குப் பதிலாக, சூரிய ஒளியை குவியவைக்கும் ‘கான்சன்ட்ரேட்டர்’களை வைக்கலாம் என்கிறார் சீன ஆய்வுக்குழுவின் தலைவரான ஜான் இன்ஜென்ஹாப்.

இந்தக் கருவியில் குவி ஆடிக்கு பதிலாக, சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள புதியவகை பாலிமர் காகிதத்தை ஆடிபோல பயன்படுத்தலாம். அதே சமயம், கண்ணாடி காகிதத்தை ஊடுருவும் சூரிய ஒளி, கீழே விளையும் பயிர்களுக்கும் கிடைக்கும் என்கிறார் ஜான். பெரும்பாலான பயிர்களுக்கு சூரிய ஒளியில், 10 சதவீதம் கிடைத்தாலே போதும் என்பது அறிவியல் உண்மை. சூரிய கதிரில் உள்ள ஏழு வண்ணங்களில் நீலம் மற்றும் சிவப்பு ஒளிக் கற்றைகள் இருந்தாலே பயிர்கள் வளரும். விவசாயி என்ன பயிரிடுகிறாரோ, அதற்கு ஏற்ற ஒளி வண்ணத்தை மட்டும் வழிவிடும் பாலிமர் காகிதங்களை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாக, ஜான் அறிவித்துள்ளார். இந்த தொழில்நுட்பம் பரவலாகக் கிடைத்தால், விவசாயி, தன் விளை நிலத்தில் மின் உற்பத்தி செய்து அதை மின்வாரியத்திற்கு விற்கலாம்.

சூரிய ஒளி குறையும் பருவத்தில், பயிர்களுக்கு போதிய சிவப்பு, நீல ஒளி கிடைக்க, மின் பலகைகளுக்கடியில் எல்.இ.டி விளக்குகளை பொருத்தி, கிடைக்கும் மின்சாரத்தில் பயிர்களுக்கு வேண்டிய சிவப்பு, நீல ஒளியை பாய்ச்சி விளைச்சலை பெருக்கலாம். இவை தடுக்கப்பட்டால், பயிர்களுக்கு நீர்த் தேவையும் கணிசமாக குறையும் என்கிறார் ஜான்.

நிலவின் மீது பூமியின் நிழல் விழும்

வானியல் நிகழ்வு

ஜூலை 27ஆம் தேதி, இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் (நிலவின் மீது பூமியின் நிழல் விழும் வானியல் நிகழ்வு) நிகழ இருக்கின்றது. இந்த சந்திர கிரகணத்தின் மிக முக்கிய நிகழ்வாக, ஆரம்பத்திலேயே பிளட் மூன் எனப்படும்  இளஞ்சிவப்பு நிலவு தோன்ற இருக்கிறது.

நீல நிலவு, கருமையான நிலவு, செந்நிற நிலவு, மற்றும் மிகபெரிய நிலவு என்று அடிக்கடி நாம் கேள்விப் பட்டதுண்டு. ஆனால் இந்த நிலாக்களுக்கும், இந்த பெயர்களுக்கும் உள்ள காரணம் ஏன் என்று தெரியுமா?

நீல நிலவு இதை புளு மூன் என்று ஆங்கிலத்தில் தான் பெரும்பாலும் அழைக்கின்றனர்.

இந்த பெயரில் இருக்கும் நிறத்திற்கும் நிலவின் நிறத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. மாதத்தில் தோன்றும் இரண்டாவது முழுநிலவின் பெயர் தான் நீல நிலவு என்று கூறுகிறார்கள். ஆனால் சில சமயங்களில் இது மிகபெரிதாக காட்சிதரும் 1940களில் தான் நில நிற நிலவு(புளு மூன்) என்ற வார்த்தை பயன்பாட்டிற்கு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கமான ஜனவரி 31ஆம் தேதி நீல நிலவுடன் கூடிய நிலவின் மீது பூமியின் நிழல் விழும் நிகழ்வு தோன்றியது குறிப்பிடத்தக்கது. 150 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இது போன்ற அரிய நிகழ்வுகள் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் ஒரு நீல நிற நிலவு தோன்றியது குறிப்பிடத்தக்கது. ஒரு ஆண்டில் இரண்டு மிகபெரிய நீல நிலவுகள் தோன்றுவதும் மிகவும் அரிது. அடுத்து இது போன்ற இரண்டு நீல நிலவுகள் 2037ஆம் ஆண்டில் மட்டுமே தோன்றும்.

கருப்பு நிலவு

ஒரே மாதத்தில் நிகழும் இரண்டாவது அமாவாசை (நிலவில்லா இரவைக் குறிக்கும் நிகழ்வினைக் குறிப் பிடுவது இந்த கருப்பு நிலவு ஆகும்.  ஒவ்வொரு 32 மாதங்களுக்கும் ஒரு முறை இந்நிகழ்வு நடக்கும்.

இளஞ்சிவப்பு நிற நிலவு

இளஞ்சிவப்பு நிற நிலவு பிளட் மூன் என்பது  பூமி சூரியனுக்கும் நிலவிற்கும்  நடுவில் பயணிக்கும் போது, சூரியனில் இருந்து நிலவிற்கு கிடைக்கும் ஒளி தடைப்பட்டு, பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சூரிய ஒளியும் பூமியின் பட்டு எதிரொளிக்கும் சூரிய ஒளியும் சேர்ந்து நிலவை இளஞ்சிவப்பு நிறத்தில் .அழகாக தோன்றும் இதனையே ப்ளட் மூன் என்று சொல்கின்றார்கள்.

சூரியனின் நிலவின் நிழல் விழும்போது ஏற்படும் சூரிய கிரகணம் போன்று இதை பாதுகாப்பான கண்ணாடிகள் வழியாக பார்ப்பதைப் போல் இல்லாமல் நேராடியாகவே வெறும் கண்களால் இந்த இளஞ்சிவப்பு நிலவைக் காணலாம். வருகின்ற ஜூலை 27ஆம் தேதி இந்நிகழ்வு நடைபெற இருக்கின்றது. இந்த நூற்றாண்டில் நடைப்பெற இருக்கும் மிக நீண்ட சந்திர கிரகணம் ஆகும்.

சூப்பர் மூன்

இது பூமிக்கு மிக அருகில் தோன்றும் முழுநிலவாகும். இந்த முழுநிலவு, 30விழுக்காடு பிரகாசமாகவும், 14விழுக் காடு பெரியதாகவும் தோன்றும். ஜனவரி 31ஆம் தேதி தோன்றிய முழுநிலவு சூப்பர் மூன் ஆகும். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் புள்ளி பெரெகே எனப்படும்.

‘ஆட்டோஃபோகல்’

கண் கண்ணாடி!

வயது ஆக, ஆக, கண்களின் பார்வைத் துல்லியம் குறைகிறது. இந்தக் குறையை போக்க, கண் கண்ணாடிகள் பெருமளவு உதவினாலும், அவற்றிலும் சிக்கல்கள் உள்ளன.

ஒரே கண்ணாடியில் படிப்பது, கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்ற மூன்று வசதிகளையும் கொண்ட, ‘புரகிரசிவ்’ கண்ணாடிகள்கூட, கண்களுக்கு அசதியைத் தரக்கூடியவைதான். இதற்கு தீர்வு கண்டிருக்கிறார் நிதீஷ் பத்மனாபன். அமெரிக்காவிலுள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான இவரும், இவரது குழுவினரும், ‘ஆட்டோஃபோகல்’ என்ற புத்திசாலி கண்ணாடியை வடிவமைத்துள்ளனர்.

இந்தக் கண்ணாடியில், கண்கள் பார்க்கும் திசை, தூரம் போன்றவற்றை அளக்கும் உணரிகள் உள்ளன.

அணிபவரின் பார்வைக் குறைபாட்டின் அளவு களை, இந்தக் கண்ணாடியிலுள்ள சிறிய கணினிக்கு முன்பே தந்துவிட்டால், அந்தக் குறைபாட்டை இட்டுக்கட்டி ‘20/20’ எனப்படும் துல்லியமான பார் வையை ஆட்டோஃபோகல் கண்ணாடி தந்துவிடுகிறது.

நிதீஷ் வடிவமைத்துள்ள இக் கருவியிலுள்ள ஆடிக்குள் உள்ள திரவத்தை மின் துண்டல் மூலம் கிட்டப் பார்வை, தூரப்பார்வை போன்றவற்றை வினாடியில் மாற்றிவிட முடிகிறது. வரும் ஆகஸ்டில் வெள்ளோட்டம் விடப்பட விருக்கும் ஆட்டோஃபோகல் கண்ணாடியை, ஒருவர் வாழ்நாள் முழுவதும் பயன் படுத்த முடியும் என, ஊடகங்களிடம் தெரிவித்தி ருக்கிறார் நிதீஷ்.

மனிதனின் மனதை புரிந்துகொள்ளும் ரோபோ!

மனிதனும், ஹியூமனாயிடு எனப்படும் மனித வடிவ ரோபோக்களும், சகாக்களாக சேர்ந்து வேலை செய்யும் காலம் விரைவில் வரப்போகிறது. அப்போது, மனிதர்கள் சொல்வதை புரிந்து கொண்டு வேலை செய்யும் திறன், ரோபோக்களுக்கு அவசியம்.

இதற்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறது அமெரிக்கா விலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையம். அதன் செயற்கை நுண்ணறிவுத் துறையிலுள்ள ஆய் வாளர்கள், ‘பாக்ஸ்டர்’ என்ற மனித வடிவ ரோபோவை, தங்கள் மனதாலும், சைகையாலும் கட்டுப்படுத்தும் முறையை உருவாக்கி உள்ளனர். ஒரு ஆய்வாளர் மூளையின் மின்னலைகளை உணரும், இ.இ.ஜி., சாதனத்தை தலையில் அணிந்தபடி பாக்ஸ்டர் ரோபோ செய்யும் வேலையை கவனிக்கிறார்.

அந்த ரோபோ, தவறான இடத்தில் துளையிடும் கருவியால் துளை போடப் போகும்போது, ஆய்வாளரின் மூளையில் அது தவறு என்று தோன்றுகிறது. அதை மின்னலைகள் மூலம் படிக்கும் ரோபோ தன் செயலலை நிறுத்தி விடுகிறது.

 

படியேறும் நாலுகால் ரோபோ!

$
0
0

பல வடிவங்களில் ரோபோக்களை செய்து வருகின்றனர் ரோபோவியல் பொறியாளர்கள்.

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானிகள், நான்கு கால்களைக் கொண்ட, ‘சீட்டா 3’ என்ற ரோபோவை சோதித்து வருகின்றனர்.

அது பெயருக்கேற்றபடியே, சிறுத்தை போல ஓடவும், நடக்கவும், தாவவும் கற்றுக்கொண்டு விட்டது. அடுத்த கட்டமாக, அதற்கு பார்வைத் திறன் இல்லாமலேயே, படிக்கட்டுகளில் ஏற பயிற்சி தரத் துவங்கி உள்ளனர்.

ரோபோக்கள் எதிரே உள்ள தடைகள் மீது மோதாமல், நடப்பதற்கு பார்வையை நம்பியிருப்பது உதவாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பார்வை மூலம் வரும், தகவல்களை ரோபோ புரிந்துகொண்டு சுதாரிப்பதற்குள், அவை கீழே விழுந்துவிடும்.

எனவே, சீட்டா 3 யின் கால்களில் உள்ள ஏராளமான உணரிகளை மட்டுமே வைத்து, நடை பழகுவதற்கு தேவையான புதிய மென்பொருள் நிரல்களை, மாசாசூசெட்ஸ் விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.

ரோபோவின் கால்கள் இருக்கும் நிலை, கோணம் போன்றவற்றை உணரிகள் உணர்ந்து, வினாடிக்கு, 20 முறை தகவல்களை மென்பொருள் நிரல்களுக்கு அனுப்ப, அந்த மென்பொருள்கள் இடும் கட்டளைப்படி அடுத்த அடியை எடுத்து வைக்கிறது, சீட்டா 3.

இந்தத் திறனைக் கொண்டு சீட்டா 3, விபத்து நிகழ்ந்த இடங்கள், ஆபத்தான தொழிற்சாலைகளில் தெம்பாக நடந்து சென்று வேலை பார்க்க முடியும்.

உப்புத் தண்ணீரில் இருந்து எரிபொருள்:

திருப்பூர் மாணவி சாதனை

மனிதர் எதிர்கொள்ளும் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று தண்ணீர், மற்றொன்று எரிபொருள். உலகின் பெரும் தட்டுப்பாடாக மாறவிருக்கும் எரிபொருளுக்கு மாற்றாக மாற்று எரிபொருளை வெற்றிகரமாகக் கண்டு பிடித்திருக்கிறார் திருப்பூர் மாணவி எம். யோகேஸ்வரி. இவர் திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்திய இளைஞர்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பையர் எனப்படும்        போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட மாநில அளவிலான இந்தப் போட்டியில் முதல் பரிசை 17 பேரும் இரண்டாம் பரிசை 16 பேரும் மூன்றாம் பரிசை 17 பேரும் வென்றுள்ளனர். இவர்களுக்கு இடையில் மாநில அளவில் மூன்றாம் பரிசை வென்றிருக்கிறார் யோகேஸ்வரி. மூன்றாவது பரிசைப் பெற்றிருந்தாலும், சமூக அக்கறை யுடன் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புக்காக அவர் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்.

அப்படி அவர் என்ன கண்டுபிடித்தார் என்பதை மாணவி யோகேஸ்வரியிடம் கேட்டதற்கு, வீடுகளில் நீரைச் சூடுபடுத்த ஹீட்டர் பயன்படுத்துவதைப் போல, உப்பு நீரில் மின்சாரத்தைச் செலுத்தும்போது, அது ஹைட் ரஜன், ஆக்சிஜன் என இரு அயனிகளாகத் தனித் தனியாகப் பிரியும். நான் கிராஃபைட் கம்பி கொண்டு உப்புநீரைச் சூடு செய்தேன்.

இப்படிச் செய்யும்போது, உப்பு நீரில் இருந்து ஹைட்ரஜன் நீர்க்குமிழிகள் அதிக அளவில் வெளியேறும். அந்த ஹைட்ரஜன் நீர்க்குமிழி முட்டைகளில் இருந்து வெளியேறும் வாயுவைச் சேகரிக்க, டியூப் ஒன்றை உப்பு நீரில் போட்டேன். அதன் வழியாகத் தயாராக வைக்கப் பட்டுள்ள சிலிண்டரில் வாயுவைச் சேகரித்தேன்.

இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்ரோல் செல்லும் டியூப்பை நீக்கிவிட்டு, சிலிண்டரில் இருந்து மற்றொரு டியூப் மூலம் ஹைட்ரஜன் வாயுவை பைக்கில் செலுத்த வாகனம் இயங்கத் தொடங்கியது.

இந்த ஆய்வுக்காகப் பள்ளிக் கல்வித் துறை எனக்கு ரூ. 10,000 வழங்கியது. கிராஃபைட்டுக்கு மாற்றாக காரியம், தாமிரம், ஸ்டீல் இவற்றில் ஏதாவது ஓர் உலோகத்தையும் பயன்படுத்தலாம். இந்தச் சோதனையை நான் பலமுறை செய்துபார்த்து இப்போது வெற்றி கண்டிருக்கிறேன் என்றார்.

தானோட்டி கார்கள்

பிரிட்டனிலுள்ள, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இந்தியரான, அமர் ஷா மற்றும் அலெக்ஸ் கென்டால் இணை சேர்ந்து, ‘வேவி’ என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளனர்.

தானோட்டி கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள வேவி, சிறிய காரான ‘ரேனால்ட் ட்விஸ்சி’ குட்டி காருக்கு தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி சோதித்துள் ளனர்.

கூகுளைப் போல ஏராளமான உணரிகள், நவீன கருவிகளை பொருத்தாமல், ட்விஸ்சியில் ஒரு கேமரா, சில உணரிகள் மற்றும் புதுமையான செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அமர் ஷா பொருத்தி இருக்கிறார்.

இந்த மென்பொருள் கற்றுக்கொள்ளும் திறன் படைத்தது. ஒரு சோதனையின்போது, சாலையில் ட்விஸ்சி, தானே காரை ஓட்டிச் செல்கிறது. அப்போது, அது சாலையை விட்டு விலகினால் மட்டும், அதில் அமர்ந்துள்ள பயிற்சியாளர் ஸ்டியரிங்கை சரி செய்கிறார்.

அதை புரிந்துகொண்டு, அடுத்த முறை அந்த தவறை தானோட்டி மென்பொருள் செய்வதில்லை. இப்படி, 20 நிமிடங்களுக்குள், அந்த வாகனம் சாலையில் தவறு ஏதும் செய்யாமல், சென்று, திரும்பி வரப் பழகிவிட்டது!

மக்கள் நடமாடும் சாலைகளிலும் ட்விஸ்சியை ஓட்டிப் பழக்க திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார், அமர் ஷா.

பிளாஸ்டிக்கை

மட்கச் செய்யும் பாக்டீரியா!

குப்பை மேடுகளிலும், நீர்நிலைகளிலும் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி சீக்கிரம் மட்கிப் போகச் செய்வது? இதுதான், 21ஆம் நுற்றாண்டின் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சவால்.

இந்த சவாலுக்கு, பிரிட்டனைச் சேர்ந்த போர்ட்ஸ்மவுட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், ஒரு விடையை கண்டு பிடித்துள்ளனர்.

கடந்த, 2016ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள குப்பை மேடுகளில் ஒரு புதுமையான பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. அது தானாகவே பிளாஸ்டிக்கை சிதைத்து மட்கச் செய்யும் திறனை பெற்றிருந்தது.

அந்த பாக்டீரியாவை பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். ஒரு சோதனையின்போது, அந்த பாக்டீரியா சுரக்கும் என்சைம்களுக்கு அதிக திறன் உண்டானது.

அதாவது, ஏற்கெனவே சாதாரண பிளாஸ்டிக்குகளை மட்கச் செய்யும் திறன் கொண்ட அந்த பாக்டீரியா, ‘பெட்’ எனப்படும் பாலிஎத்திலின் டெரப்தாலேட் வகை பிளாஸ்டிக்கையும் சிதைக்கும் அளவுக்கு அடர்த்தியான என்சைமை சுரக்க ஆரம்பித்தது.

அந்த என்சைமால் சில நாட்களிலேயே, பிளாஸ்டிக்கை மட்கச் செய்ய முடிந்தது.

இந்த கண்டுபிடிப்பால் உற்சாகமடைந்துள்ள விஞ்ஞானிகள், பெரிய அளவில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கு ஏற்றபடி, பாக்டீரியாக்களை எப்படி பயன்படுத்துவது என்பதை ஆராய்ந்து வருகின்றனர்.

புகையிலையில் உருவாகும், ‘ஆன்டிபயாடிக்‘ மருந்து!

தொற்று நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை அழிக்கும், ‘ஆன்டிபயாடிக்‘ மருந்துகள், கடந்த நுற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டவை.

ஆனால், பாக்டீரியாக்களும், வைரஸ்களும் ஆன்டிபயாடிக்குகளை எதிர்க்க பழகிவிட்டன என்கின்றனர் மருத்துவர்கள்.

புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான தேடல் நடக்கிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த, லா ட்ரோப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், புகையிலைச் செடியிலுள்ள பூக்களிலிருந்து புதிய வகை ஆன்டிபயாடிக்குகளை உருவாக்க முடியும் என, அண்மையில் அறிவித்துள்ளனர்.

புகையிலைப்பூக்களில், ‘என்.ஏ.டி.1’ என்ற செல் மூலக்கூறு இருப்பதால், சிலவகை நோய்கள் புகையிலையை தொற்றுவதில்லை.

அதே மூலக் கூறுகளை வைத்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்கினால், எச்.அய்.வி., முதல், ‘டெங்கு’ வரை பல கிருமிகளை தடுக்க முடியும் என, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

இனி ரத்த நாளத்தையும் ‘அச்சடிக்கலாம்!’

$
0
0

 

மாற்று உறுப்புக்காக காத்திருப் போரின் பட்டியல் நீண்டு வருகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் உடலிலிருந்தே திசுக்களை எடுத்து, வளர்த்து புதிய உறுப்பை பொருத்த, ஆய்வுகள் நடக்கின்றன.

இதற்கு ‘3டி பயோ பிரின்டர்’ எனப்படும் உயிரி முப்பரிமாண அச்சு இயந்திரம் பயன்படும்.

ஆனால், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள், ஆய்வகத்தில் வளர்த்தெடுத்து, மருத்துவமனைக்கு வரும் வரை ‘உயிருடன்’ இருக்க வேண்டுமல்லவா? அதற்கு, அந்த உறுப்புக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உயிர்ச் சத்துக்களை, ரத்தத்தின் வழியே தருவதற்கு ரத்த நாளங்கள் தேவை.

‘பெரிலிஸ் பயோலாஜிக்ஸ்’ என்ற நிறுவனம், நுண் ரத்தக் குழாய் களுடன் கூடிய உறுப்பை, உயிரி முப்பரிமாண அச்சில் உருவாக்க முயல்கிறது.

லேசர் மூலம், ஹைட்ரோஜெல் என்ற பொருளை, ரத்த நாளங்களுக்கு சாரம் போல அச்சிட முடியும் என்றும், ஒரு முழு சிறுநீரகத்தை, ரத்தநாளங்களுடன், 12 மணி நேரத்திற்குள் அச்சிட்டு எடுக்கும் தொழில் நுட்பத்தை பரிசோதித்து வருவதாக பெரிலிஸ் பயோலாஜிக்ஸ் அறிவித்துள்ளது.

ரோல்ஸ் ராய்சின் பறக்கும் கார்!

ஜெட் விமானங்களை தயா ரித்து வரும் ‘ரோல்ஸ் ராய்ஸ்’, விரைவில் அய்ந்து பேர் பயணிக்கும் வகையில், பறக்கும் காரை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தக் காருக்கு ஓடுபாதை தேவையில்லை என்றும், நிற்குமிடத்திலிருந்து செங்குத்தாக கிளம்பி, வானில் பறக்கும் வகையில் இந்த கார் இருக்கும் என்றும், ரோல்ஸ் ராய்ஸ் அண்மையில் அறிவித்தது.

முழுக்க முழுக்க மின் சக்தியால் பறக்கும், அதிக சத்தமில்லாத இந்த காரின் இறக்கைகள், வால் பகுதிகள் உட்பட அய்ந்து மின் விசிறிகளை கொண்டிருக்கும். மின்சாரத்தால் பறந்தாலும், இந்த காருக்கு வேண்டிய மின்சாரத்தை, உற்பத்தி செய்து தரப்போவது, வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எரிவாயு டர்பைன்கள் தான். எனவே, துவக்கத்தில் இந்த கார் மின்சாரம் மற்றும் எரிவாயுவால் இயங்கும், ‘அய்பிரிட்’ வாகனமாகவே இருக்கும். ஒரு முறை எரிபொருள் நிரப்பினால், 800 கி.மீ., தூரம் செல்லும். ரோல்ஸ் ராய்ஸ் பறக்கும் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு, 330 கி.மீட்டர்.

ரயில் விபத்தைத் தடுக்கும் ரோபோட்!

பணக்கார நாடுகளோடு போட்டிபோடவே தொழில் நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது இந்தியா. தவிர, சாதாரணர்களின் வாழ்க்கையை உயர்த்தும் தொழில் நுட்பங்களை வடிவமைப்பதில் முனைப்பு காட்டுவதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப் பட்டுவருகிறது. இதற்குப் பதில் சொல்லும் விதமாக, மலக்குழிக்குள் இறங்கிச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கித் தொழிலாளர்கள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் ரோபோட்டை கேரளத்து இளைஞர்கள் சில மாதங்களுக்கு முன்னால் வடிவமைத்திருந்தார்கள்.

அதை அங்கீகரித்து அந்த ரோபோட்டைப் பயன் படுத்த கேரள அரசும் முடிவெடுத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. இத்தகைய உணர்வு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களிடமும் இருக்கிறது என்பதைத் தற்போது வேறொரு ரோபோட் கண்டுபிடிப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார்கள் சென்னை அய்.அய்.டி. மாணவர்கள்.

மாணவர்கள் அல்ல, கண்டுபிடிப்பாளர்கள்!

நாங்கள் மாணவர்கள் அல்ல, கண்டுபிடிப்பாளர்கள், பிரச்சினைக்குத் தீர்வு காண்பவர்கள். அந்த உணர்வுதான் எங்களை ஆர்டிமிஸ் ரோபோட்டைக் கண்டுபிடிக்க உந்தித் தள்ளியது என்றார்கள் சென்னை அய்.அய்.டி.யின் சென்டர் ஃபார் இன்னொவேசன் மய்யத்தைச் சேர்ந்த அக்சய், கிருஷ்ணா, கவன் சவ்லா, அனுபவ் அகர்வால், சாஸ்வத் சாஹூ, யாஷ் படேல் ஆகிய மாணவர்கள். இவர்கள் கண்டுபிடித்திருப்பது ரயில் தண்டவாளத்தில் ஏற்படும் விரிசலைக் கண்டறிந்து தகவல் தெரிவிப்பதன் மூலம் ரயில் விபத்துகளைத் தடுத்து நிறுத்த உதவும் ஆர்டிமிஸ் ரோபோட்.

கட்டுமானப் பணி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது பராமரிப்புப் பணியும். அதிலும் ரயில் தண்டவாளங்கள் மிகவும் கவனமாகப் பராமரிக்கப்பட வேண்டியவை. தண்டவாளத்தில் சிறு விரிசலோ ரயில்பாதையில் சிறிதளவு விலகலோ ஏற்பட்டால்கூட மோசமான விபத்துகள் நேர்ந்துவிடும்.

ரயில் தடம்புரண்டதால் ரயிலில் பயணித்தவர்கள் விபத்துக்குள்ளான செய்திகளை அடிக்கடி கேள்விப்படு கிறோம். அதே நேரம், மறுபுறம் மறைந்துகிடக்கிறது மற்றொரு செய்தி. அது, இந்தியாவில் மட்டும் ஆண்டு தோறும் 400-க்கும் மேற்பட்ட ரயில்பாதைப் பராமரிப்புப் பணியாளர்கள் பணியை மேற்கொள்ளும்போது ரயில் விபத்துகளால் உயிரிழக் கிறார்கள் என்பது.

தண்டவாளங்களைச் சோதனையிட்டுப் பராமரிக் கும் பணியை ரயில்பாதைப் பரா மரிப்புப் பணியாளர்கள் தாம் இத்தனை காலமாகச் செய்து வருகிறார்கள்.

அபாயகரமான இந்தப் பணியை மேற்கொள்ளும் டிராக்மென், டிராக்

மெயிண்டனர்ஸ், ரயில் பொறியாளர்கள் உள்ளிட்ட ரயில் பணியாளர்களில் பலர் ஆண்டுதோறும் விபத்து களை எதிர்கொள்கிறார்கள்; சில நேரம் உயிரிழந்துவிடுகிறார்கள்.

இந்நிலையில் ரயில் பயணிகள், ரயில் பணியாளர்கள் ஆகிய இரு தரப்பினரையும் மனத்தில் கொண்டு சென்னை அய்.அய்.டி. மாணவர்களால் வடிவமைக்கப் பட்டிருக்கிறது ஆர்டிமிஸ் ரோபோட்..

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனத்தில் படித்தோம் உச்சபட்ச சம்பளம் பெறும் வேலையில் சேர்ந்தோம், சொகுசாக வாழ்ந்தோம் என்பதல்ல எங்களுடைய இலக்கு. சாதாரணமானவர்களுக்குப் பயனுள்ளவற்றைக் கண்டு பிடிப்பதில் கவனம் செலுத்துகிறோம். நடைமுறை சார்ந்த பிரச் சினைகள் எங்களைக் கலங்கடிக்கின்றன. அதிலும் பெரு வாரியான மக்களால் பயன்படுத்தப்படும் போக்கு வரத்துச் சாதனங்களில் ஒன்று ரயில். அதில் ஏற்படும் விபத்தால் உயிரிழப்பவர்கள் அனேகர். இதற்குக் குறைந்த செலவில் தீர்வு கண்டிருக்கிறோம் என்றார் ஒடிசாவில் இருந்து சென்னைக்கு வந்து மூன்றாமாண்டு பையலா ஜிக்கல் இன்ஜினீயரிங்க் படித்துக் கொண்டிருக்கும் சாஸ்வத் சாஹூ.

ஆர்டிமிஸ் எப்படிச் செயல்படும்?

தற்போதுவரை   கருவியைக் கொண்டுதான் ரயில் ஊழியர்கள் தண்டவாள விரிசலைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்தக் கருவியைக் கையில் பிடித்துக்கொண்டு அவர்கள் தொலைதூரம் நடக்க வேண்டி இருக்கும். அடிக்கடி ரயில்கள் கடந்து செல்லும் தண்டவாளங்களில் அதைப் பயன்படுத்தும் போதுதான் அவர்கள் விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். நாங்கள் வடிவமைத்திருப்பது 1.5 அடி நீளத்தில் ஆறு சக்கரங்கள் கொண்ட குட்டி ரோபோட்.

ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போதே இது தண்ட வாளத்துக்கு இடையில் ஒரு நொடிக்கு ஒரு மீட்டர் என்ற வேகத்தில் ஓடியபடியே ,  சென்சார்கள் மூலமாகத் தகவல் சேகரிக்கும். அந்தத் தகவலை ரோபோட்டில் பொருத்தப் பட்டிருக்கும் மைக்ரோ சிப்புக்கு அனுப்பி விடும். இதில் ஜி.பி.எஸ். வசதி இணைக்கப்பட்டுள்ள தால் எங்கிருந்து வேண்டு மானாலும் இதை இயக்க லாம். கூடவே சென்று நேரடி யாக இயக்க வேண்டிய தில்லை என்றார் மூன்றா மாண்டு சிவில் இன்ஜினீயரிங் மாணவரான யாஷ் படேல்.

ரயில் விபத்தைத் தடுக்கவும் உயிர்களைக் காப்பாற்ற வும் கைகொடுக்கும் உங்களுடைய ரோபோட் பராமரிப்புப் பணியாளர்களின் வேலையைப் பறித்துவிடாதா? என்று கேட்டால், தானியங்கியாக ஆர்டிமிஸ் இருந்தாலும் இது பிரச்சினை எங்கு இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மட்டுமே பயன்படும். இதன் மூலமாக நெடுந்தூரம் நடக்க வேண்டிய வேலைப் பளு குறையும்.

மற்றபடி சீர் செய்யும் பணிகளை ரயில்வே ஊழியர்கள் தாம் செய்ய வேண்டும் என்பதால் அவர்களுடைய வேலைக்கு வேட்டுவைக்காது. அதுமட்டுமல்லாமல் ரூ.20 ஆயிரத்திலேயே இதைத் தயாரிக்க முடியும் என்பதால் நிச்சயம் அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கும் ஒத்துவரும் என்றார் இந்தக் கூட்டணியின் ஒரே சென்னை மாணவர் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் மூன்றாமாண்டு படிக்கும் அக்சய்.

சோதனை முயற்சிகளில் வெற்றிகரமாகச் செயல் பட்டதன் மூலமாகச் சமீபத்தில் நடைபெற்ற இண்டர்-அய்.அய்..டி. மீட் 2018இல் அனைவரின் கவனத்தை ஈர்த்தி ருக்கிறது ஆர்டிமிஸ் ரோபோட் - கூடிய விரைவில் இந்திய ரயில்வே துறையும் இவர்களுடைய கண்டுபிடிப்பை அங்கீகரித்துப் பயன்படுத்த முன்வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அதிநவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிகளை வெகுஜன மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து தமிழகத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் சென்னை அய்.அய்.டி மாணவர்கள்.

 

 

பிரார்த்தனை

$
0
0

 

27.09.1931- குடிஅரசிலிருந்து...

இங்கு இந்த விழா துவக்கப்படுமுன்  நிகழ்ச்சிக் குறிப்பில் குறிப் பிட்டிருந்த பிரார்த்தனை என்னும்பேரால் ஒரு பொய்நடிப்பு நடிக்கப் பட்டதானது உங்களுக்குத் தெரியும், பிரார்த்தனை என்று தலைவர் சொன்னவுடன் சில பிள்ளைகள் வந்தார்கள். கைகட்டினார்கள் கண்களை மூடிக் கொண்டார்கள். ஜனகணமன ................. என்று எதை யோ சொன்னார்கள். அதுபோலவே சில பெண்கள் வந்தார்கள். கைகட்டினார்கள். கண்மூடினார்கள். ஏதோ பாஷையில் எதையோ சொன்னார்கள். இதற்குப் பெயர் பிரார்த்தனையாம். இது பக்திக்காக செய்யப்படுவதாம், மேலும் இது கடவுளுக்கு ஆகவாம். நண்பர்களே! இதில் ஏதாவது அறிவோ நாணயமோ இருக் கின்றதா? என்பதை நிதானமாய், பொறுமையாய் யோசித்துப் பாருங்கள். தயவு செய்து ஆத்திரப்படாதீர்கள்.

கடவுள் என்பதும் பக்தி என்பதும் பிரார்த்தனை என்பதும் எவ்வளவு முக்கிய மானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டுமென்று சொல்லிவருகின்றீர்களோ அந்தக்குணம் எல்லாம் மேல்குறிப்பிட்ட இந்த பிரார்த்தனையில் இருந்ததா? பாருங்கள். சாதாரணமாக கிராமபோனுக்கு உள்ள அறிவு போன்ற சிறுவர்கள் அவர்களுக்கும், அவர்களுக்கு இந்த பிரார்த்தனைப் பாட்டு  சொல்லிக் கொடுத்தவர்களுக்கும் புரியாத ஒரு பாட்டை, இந்த சபையிலுள்ள சுமார் ஒரு ஆயிரம் பேருக்கும் புரியாத பாஷையில் நாடகத்தில் நடிப்பதுபோல் வந்து சொல்லிவிட்டு போவது என்றால் இதற்குச் சமமாக எதை சொல்லுவது? அநேகமாக நமது பிரார்த்தனைகள் என்பதெல்லாம் புரியாத பாஷை, புரியாத சொற்கள், புரியாத கருத்துகள் கொண்ட பாடல் களாகவும் வாக்கியங்களாவும் இருக்கின்றனவே தவிர, பக்தி என்பதற்கு பொருத்தமானதாய் இருக்கின்றதா? பாருங்கள். எந்தப் பக்தி பாட்டும் சங்கீத பிரதானியத்திலும், இலக்கண இலக்கிய பிர தானியத்திலும், வேஷப்பிரதானியத்திலும், சடங்குப்பிரதானியத்திலும், இருக்கிறதே தவிர, உண்மை பிரதானியத்தில் சிறிதாவது இருக்கின்றதா? பாருங்கள். இந்த மாதிரி வேஷமுறையில் இவ்வளவு சிறு குழந்தைப் பருவத்தில் இருந்தே புகுத்தப்பட்ட இந்தப் பக்திக்கு ஏதாவது ஒருதுரும்பளவு யோக்கியதையாவது இவர்களது பிற்கால வாழ்வில் உண்டாகிறதா என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இதிலிருந்து அக்குழந்தைகளுக்கு ஒரு பித்தலாட்டத் தையும் நாணயக் குறைவையும் பக்தி என்னும் பேரால் புகட்டினவர்களானோமா? இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்.

நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பது நம் பழங் கலைகளையும் அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும். ஆனால், நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளரமுடியாமல், கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் அடக்கப்பட்டு விட்டது; சிந்திக்கும் உரிமையே அற்ற சிறிய மனிதர் களாக நம்மைச் செய்துவிட்டது. இந்தப்படியான சிந்திக்கும் தன்மை யற்ற மக்களை மாற்றி அவர்களைச் சிந்திக்கத் தூண்டிச் சிந்தனைப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகம்.

சர்வம் பார்ப்பன மயம், திருவாங்கூர்

22.11.1931 , குடி அரசிலிருந்து...

புதிய மகாராஜா பட்டத்திற்கு வந்தவுடன் திருவாங்கூர் சமஸ்தானக் குடிமக்களுக்கு இனியேனும் உண்மையான சுதந்திரம் உண்டாகும் என்று நம்பினோம். இதற்கு அறிகுறியாக கப்பற் பிரயாணம் செய்து அந்நியநாடு சென்று வந்தவர்கள் உள்ளே போகக்கூடாது என்று தடுக்கப்பட்டிருந்த கோயில்களுக்குள் அவர்களும், போகலாம், என்று முன்னி ருந்த தடை நீக்கப்பட்டது.

இதைக்கொண்டு, இனி திருவாங்கூர் மக்கள் வைதிகக் கொடுமையிலிருந்தும் நீக்கப்படுவார்கள்போலும் என்றும் சந்தோஷப்பட்டோம். ஆனால், இப்பொழுது சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்களை மேன்மை தங்கிய மகரா ஜாவுக்கு அரசியல் ஆலோசனை கூறும் உத்தியோகதராக நியமிக்கப்பட்ட திலிருந்து கப்பலேறி அந்நியநாடுகளுக்குச் சென்று வந்த சர்.சி.பி.ரா. அய்யர் அவர்கள் கோயிலுக்குள் போவதற்கு தடை இருக்கக் கூடாது என்பதற்காகவே முன் இருந்த தடை நீக்கப்பட்டது என்றே நினைக்க வேண்டிய திருக்கிறது.  அன்றியும் இப்பொழுது இருக்கும் மகாராஜா அவர்கள் ஒரு சமயம் சர். சி.பி.ரா. அய்யர் அவர்களுடன் இங்கிலாந்து முதலிய தேசங்களுக்குப் பிரயாணம் செய்து வந்தால், அப்பொழுது மகாராஜா கோயிலுக்குள் போவ தற்கு யாதொரு தடையுமில்லாமலிருப்பதற்கு முன்னேற் பாடாக இக்காரியம் செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றும் நினைக்கவேண்டியிருக்கிறது.

அன்றியும் இப்பொழுது பட்டத்திற்கு வந்திருக்கும் மகாராஜா அவர்கள் காலத்தில் முன்னிருந்ததைக் காட்டிலும் இன்னும் பார்ப்பன ஆதிக்கம் அதிகப்பட்டு உறுதிப்படும் என்றும் கருதி திருவாங்கூர் பிரஜைகளின் சார்பாக இரக்கப்படுகிறோம், இவ்வாறு நடக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக மகாராஜா பட்டத்திற்கு வந்தவுடன், முன்பே திரு. சுப்பிரமணிய அய்யர் என்னும் பார்ப்பனர் திவானாயிருக்க, சர்.சி.பி.ராமசாமி அய்யரும் அரசியல் ஆலோசனை கூறும் அதிகாரியானார். ஆகவே, இப்பொழுது திருவாங்கூர் ராஜ்யம் இரண்டு பார்ப்பன அதிகாரிகளின் வசம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது.

திருவாங்கூர் சமஸ்தானம் பார்ப்பனர்களின் அதி காரத்தில் அகப்பட்டு, அச்சமஸ்தான மக்கள் பார்ப் பனியத்தால் நசுக்குண்டு கிடப்பது இன்று அல்லது நேற்று முதல் நடைபெறும் விஷயம் அல்ல; நூற்றுக்கணக்கான வருஷங் களாகவே இப்படி இருந்து வருகின்றது. இதைக் கீழ்வரும் விஷயத்தால் தெளிவாய்த் தெரிந்து கொள்ளலாம். 1817 ஆம் ஆண்டு முதல் 1931ஆம் ஆண்டுவரையிலும் திருவாங்கூர் திவான் உத்தியோகத்தை 24 பேர் வகித்து வந்திருக்கின்றனர். இந்த 24 பேர்களில் திரு. நாணுப்பிள்ளை என்பவர் 1877 முதல் 1880 வரையில் 3 வருஷமும், இப்பொழுது சென்னை அரசாங்கத்தில் சட்ட மந்திரியாய் இருக்கும் திரு.கிருஷ்ணன் நாயர். 1914 முதல் 1920 வரை 6 வருஷமும், திரு வாட் என்னும் அய்ரோப்பியர் 1925 முதல் 1929 வரை 4 வருஷமும் திவானாக இருந்திருக்கின்றனர். இவர்கள் திவானாக இருந்த 13  வருஷங்கள் போகபாக்கி 101 வருஷங் களும் பார்ப்பனர்களே திவான்களாக இருந்து வந்திருக் கின்றனர். இந்தக் கணக்கைப் பார்த்தாலே திருவாங்கூர் ராஜ்யம் எப்பொழுதும் பார்ப்பனமயம் என்பதில் ஏதேனும் தவறு உண்டா?

சுதேச சமஸ்தானமாகவும், பார்ப்பன ஆதிக்க ராஜ்ய மாகவும், பத்மநாபசுவாமி என்னும் கடவுளின் ராஜ்ய மாகவும் இருக்கும் அந்தச் சமஸ்தானம் எந்த நிலையிலிருக் கிறது? 40 லட்சம் ஜனத்தொகையுள்ள அந்த சமஸ்தானத்தில் சுமார் 20 லட்சம் பேர் முகமதியர், கிறிஸ்தவர் முதலிய அந்நியமதத்தினராகவும், சுமார் 12.5  லட்சம் மக்கள் தீண்டக் கூடாதவர்களாயும், பார்க்கக் கூடாதவர்களாகவும், தெருவில் நடக்கக் கூடாதவர் களாகவும் இருக்கின்றார்கள் இவை போக சுமார் 7.5 லட்சம்  இந்துக்கள் என்பவர்களே பத்மநாபக் கடவுளின் அரசாங்கமாகிய இந்து ராஜ்யத்தில் இருக்கிறார் களென்றால் இதை என்ன ராஜ்யம் என்று சொல்லுவது? பார்ப்பனர்களின் அதிகாரத்தின் காரணமாக - பார்ப்பனீயமாகிய இந்து மதக் கொடுமை காரணமாக. இந்துமதத்திலிருந்து விலகியவர்கள் தான் இப்பொழுது அச்சமஸ்தானத்தில் இருக்கும் 20 லட்சம் வேறு மதக்காரர்களும் என்பதை யார் இல்லை யென்று சொல்ல முடியும்? இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத் தால் தானே இன்று 12.5 லட்சம் பேர் தீண்டத் தகாதவர் களாகவும், பார்க்கக் கூடாதவர்களாகவும், தெருவில் நடக்கக் கூடாதவர்களாகவும், மிருகத்திலும் கேடாக மதிக்கப்பெற்று கொடுமை செய்யப்பட்டுக் கிடக்கிறார்கள்? இவர்களும் அந்நிய மதத்தினர்களாக ஆகி விட்டால் இவ்வளவு கொடுமைக்கு ஆளா வார்களா?

இந்த இழிவான நிலையில் உள்ள இச்சமஸ்தானம், எல்லா மக்களும் கண் விழித்துச் சுயமரியாதை உணர்ச்சி பெற்று வருகிற இந்நாளிலுமா பார்ப்பனர் வசமும் பார்ப்பனிய வசமும் சிக்கித் துன்பப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்? என்ற உணர்ச்சியுடன் திருவாங்கூர்ப் பிரஜைகள் அனை வரும், சர். சி.பி.ரா. அய்யரின் நியமனத்தைச் சரியான காரணங்களுடன் கண்டித்துத் தீர்மானங்கள் செய்வதை நாம்  பாராட்டுகிறோம்.

இதோடு மற்றொரு வதந்தியும் உலாவுகிறதென்று அறிகிறோம். அதாவது, இப்பொழுதுள்ள திவான், திரு.சுப்பிர மணிய அய்யர் திவான் பதவியை விட்டு விலகியவுடன், அப்பதவிக்கு, சென்னையில் உள்ள திரு.டி.ஆர்.வெங்கட்ட ராம சாஸ்திரி அவர்களும், மற்றும், இரண்டு பெரிய இந்திய அரசாங்க உத்தியோகஸ்தர்களும் முயற்சி செய்கிறார்களாம்.  இவ்வாறு முயற்சி செய்து கொண்டிருக்கும், திரு.டி.ஆர்.வெங்கட்டராம சாஸ்திரியார் அவர்களோ, அல்லது வேறு ஒரு சாஸ்திரியார் அல்லது  அய்யர் அல்லது அய்யங்கார் அல்லது  ஆச்சாரியாரோ திவானாக வந்தால் திருவாங்கூர் ராஜ்யம் இன்னும் மோசமான பார்ப்பன ராஜ்யமாக ஆகவேண்டி யதைத் தவிர வேறு வழியில்லை என்பது உறுதியான விஷயமாகும்.

உதாரணமாக சர்.சி.பி.ராஅய்யர் அவர்களின் யோக்கி யதையைச் பார்த்தாலே இது விளங்கும். முதலாவது, திரு. அய்யர், தன் அதிகாரத்தால் செய்யக்கூடிய எந்த உத்தியோகங்களையும், நன்மைகளையும், தன் இனத்தார் களாகிய பார்ப்பனர்களுக்கு மாத்திரம் செய்யக்கூடியவர் என்பது நாம் அறிந்த சங்கதி, இரண்டாவது, எல்லாமக்களும் சம சுதந்திரம் பெற்றுச் சகோதரர்களாய் வாழ வேண்டும் என்னும் சமதர்மக் கொள்கைக்கு எதிரான வருணாசிரம தரும வகுப்பினரைச் சேர்ந்தவர் என்பது யாவருக்கும் தெரிந்த செய்தி மூன்றாவது, அவர் எப்பொழுதும் பிரிட்டிஷ்காராருக்குச் செல்லப்பிள்ளையாக நடந்து தன் காரியங்களைச் சாதித்துக் கொள்ளக்கூடியவர், என்பது அவருடைய அரசியல் நாடகம் அறிந்தவர்களுக்கு நன்றாய்த் தெரியும். இதனால் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து சுதேச சமதானத்திற்குப் போகும் எந்த பார்ப்பனரும், பெரும்பாலும், இதே மாதிரியான யோக்கியதை உள்ளவராகத்தான் இருப்பார்கள். ஆகையால் திவாங்கூர் பிரஜைகள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு இத்தகைய விஷயங்களை, இந்திய அரசாங்கத்தாருக்கும், மேன்மை தாங்கிய மகாரா ஜாவுக்கும் எடுத்துக்காட்டிப் பரிகாரம் தேடிக்கொள்ளும்படி அவர்களுக்கு நினைப்பூட்டி, நாமும் இந்தச் சமஸ்தானம் பார்ப் பனருக்கும், பார்ப்பனியத்திற்கும் அடிமைப்பட்டு வருவதைப் பலமாகக் கண்டிக்கிறோம்.

 

 

Viewing all 488 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>